19 ஜூலை, 2011

ழான் ரெனுவாரும் ஐரோப்பிய கவித்துவ எதார்த்தமும்'


ழான் ரெனுவாரும் ஐரோப்பிய கவித்துவ எதார்த்தமும்'http://www.ajayanbala.in
தேசங்களின் எல்லைகளை வேண்டுமானால் மனிதன் வகுத்திருக்கலாம்.ஆனால்¢ மொழியும்,கலாச்சாராமும் தன்னியல்பாக தோன்றுபவை. நிலத்தின் தன்மைகளுக்கேற்ப மாறும் அம்மண்ணின் இயல்புதான் அங்கு வாழும் மனிதர்களின் நடை உடை பாவனைகளை,மற்றும் அவர்களுக்கான கலை இலக்கியங்களை தீர்மானிக்கின்றன.உலக சினிமாவை உற்று கவனிக்கும் ஒருவரால,¢ ஒவ்வொரு நிலப்பரப்பும் தங்களது பிரத்யோக குணக்கூறுகளை அவற்றின் திரைப்ப்டங்களில் தன்னியல்பாக பொதித்து வைத்திருப்பதை கண்டறிய முடியும்.
இதனடிப்ப்டையில் ஐரோப்பிய நிலபப்ரப்புக்கென்றே உரித்தான அந்த பனி படர்ந்த நிலத்திற்கான மவுனமும் கூர்ந்த அவதானிப்பும் அவ்ர்களது திரைப்படங்களின் தனித்தன்மையை தீர்மானிப்பதாக இருக்கின்றன..இதிலும் கூட பல நுண்ணிய வேறுபாடுகளை அந்தந்த மொழி பேசும் மக்களின் குணங்களுக்கேற்ப பிரிக்க முடியும். என்றாலும் ஐரோப்பியர்களின் பொதுவான குணமான அக மனநிலை பயணத்தையே அவர்களது திரைப்பட மொழியும் நமக்கு பிரதிபலிக்கின்றன என்பதுதான் உண்மை.இப்படியான ஐரோப்பிய படங்களில் காணப்படும் அந்தவகையான பொதுவான திரைமொழியின் மவுனத்தையும்,உளவியல் எதார்த்தத்தையும் ,கவித்துவத்தையும் ஒரு முழுமையான படைப்பின் மூலம் சாத்தியப்படுத்தி,¢ பின்வரப்போகும ¢ஐரோப்பாவின பேரெழுச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்த பெருமை மிக்க இயக்குனர் ழான் ரெனுவார் (1894---=1979).
ரெனுவாருக்கு முன்பாகாவே ஐரோப்பிய திரைப்படங்களில் குறிப்பாக பிரெஞ்சு திரைப்படங்களில் சில முன்னோடிகள் இருந்தனர். இவர்களுள் மவுன திரைப்பட மேதைகளான ழான் விகோ மற்றும் ரெனே கிளார் ஆகிய இருவரும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.¢ 1934ல் கிளார் இங்¢கிலாந்துக்கு மூட்டையை கட்டிக்கொண்டு நிரந்தரமாக குடிபெயர்ந்து விட,தொடர்ந்தார ¢போல் விகோவும் தன் உயிர்பயணத்துககு ¢ முற்று புள்ளி வைத்துக்கொண்டதோடு பிரெஞ்சுசினிமா முற்றிலுமாக நிலை குலைந்து போனது. 1940 வரையிலான் பிரெஞ்சு சினிமாவின் நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில ஓரளவு ¢குறிபிடத்தகுந்த படங்களை தந்த ஒரே இயக்குனர்ஜேக்கஸ் பெய்டர். .அமெரிக்காவிலிருந்து தனிப்பட்ட பிரச்னை காரணமாக பிரான்சிற்கு வந்து குடியேறிய பெய்டரின் திரைப்படங்களில் காணப்பட்ட இலக்கியநயம்¢ ஐரோப்பிய சினிமாவின் தனித்தன்மையை ஓரளவுக்கு கோடிட்டு காண்பித்தது. அத்ற்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்தவரகள் இருவர். அதில் ஒருவர் அவருடைய திரைக்கதையாசிரியாரான ஜேக்கஸ் ரிவட்.இன்னொருவர் கலை இயக்குனரான சார்லஸ் லெஸர். ¢.இதில் ஜேக்கஸ ரிவெட் பிரெஞ்சு மக்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான புகழ்பெற்ற சர்ரியலிஸ கவிஞ்ர்.அவரது இயல்பான கவித்துவ செழுமை திரைக்கதையில் உண்டாக்கிய சில மாய்மாலம் காரணாமாகத்தான் பிரெஞ்சு சினிமா மீண்டும் உயிர்பெற துவங்கியது.¢தொடர்ந்து பெய்டரின் உதவி இயக்குனரான மார்சல் கார்னே இயக்குனரான போது,¢ ரிவெட் அவருக்கும் ஆஸ்தான திரைக்கதை யாசிரியராக இருந்து பணியாற்றி பிரான்சில் கவித்துவம் மிளிரும் படைப்புகளுக்கான சூழலையும் முன்னூட்டத்தையும் ஏற்படுத்தி தந்தார். 1942ல் இருவரது கைவண்ணத்தாலும் உருவான "'தி டெவில்ஸ் என்வாய்"' அவர்களது பயணத்தின் குறிபிடத்தகுந்த படைப்பாகும். இதில் ஹிட்லரை தீமையின் குறியீடாக பயன்படுத்தியிருந்த்விதம் அவர்களது மேதமைக்கு சான்றாக விளங்கியது.இவர்களதுபடைப்பில் வெளியான் இன்னொரு படமான ''சில்ரன்ஸ் ஆப் பேரடைஸ்'' இருவரது வாழ்நாளின் மிகச்சிறந்த படைப்பாக உருவாக்கம் பெற்¢றது.
இப்படியாக ஐரோப்பிய சினிமாவில் அங்¢கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது வீசிவந்த கவித்துவ காற்று ரெனுவாரின் வரவுக்கு பிறகு ஒரு மகத்தான அலையின் துவக்கமாகவே வீசத்துவங்கியது.அய்ரோப்பிய மறுமலர்ச்சி கால ஓவியர்களில் காகின்,செஸான்,வான்கா போன்றவர்களோடு பட்டியிடதகுந்த மிகச்சிறந்த ஓவியரான அக்ஸ்டெ ரெனுவாரின்மகனாக பிறந்தவர் ழான்ரெனுவார்(1894=1970). காலத்தின் மிகச்சிறந்த ஓவியருடைய மகனாக பிறந்த காரணத்த்னாலோ என்னவோ ழான் ரெனுவாரின் உள்ளத்தில் இயல்பாகவே உடைப்பு கொண்ட கலையின் ஊற்று அதுவரையில் திரையில் காணாத ¢ கவித்துவமான எதார்த்தமான உலகை திரையில் சிருஷ்டிக்க விழைந்தது.மவுனப்படகாலங்களில் தன் இயக்குனர் பயணத்தை துவக்கிய ரெனுவார் 1931ல் தன் முதல் சப்த சினிமாவான பர்ஜிங் தி பேபி படத்தைவெளியிட்ட போது அத்ன் பெருவெற்றி காரணாமாக தனது இருப்பை பதிய வைத்துக்கொண்டார்.தொடர்ந்து அவர் இயக்கிய போடோ சேவ்டு ப்ரம் டிரவுணிங்(1932) , மாடம் பவாரி (1934) டோனி (1935) போன்ற படங்கள் படுதோல்வியை தழுவ அடுத்து என்ன மாதிரியாக படம் பண்ணுவது என தெரியாமல் குழம்பிப்போய் நின்றார்.இச்சமயத்தில்தான் காலத்தின் கவிஞனும் பிரெஞ்சு சினிமாவின் ¢ அடையாளம் உயிர்தெழ காரணமானவனுமான கவி ஜேக்கஸ் ரிவெட்டுடன் ரெனுவார் முதன் முதலாக கைகோர்க்க துவங்க புதிய அலையின் துவக்க புள்ளி ஆரம்பமானது. 'தி க்ரைம் மொனேசர்' ஏஞ்சல் 1935ல் வெளியான இப்படம் முதாலாளி பாதியில் விட்டு ஓடிப்போன ஓரு தொழிற்சாலையை தொழிலாளர்களே கூட்டு முயற்சியில் காப்பாற்றி அத்னை வெற்றிபெறசெய்யும் கம்யூனிச சித்தாந்த அடிப்படையிலான கதையை கொண்டிருந்தது.இதிரைப்ப்டத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரது கூட்டணியிலும் உருவாக்கம் பெற்ற அடுத்த படைப்பான லைப் இஸ் அவர்ஸ் 1936 படமும் பெருத்த வரவேற்பையும் மிகுந்த கவனத்தையும் ஈர்த்தது.ஆனால் வெளியான சில நாட்களுக்குள்ளாகவே இப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டு திரையரங்க்களி¢லிருந்து படச்சுருள்கள் பறி முதல் செய்யப்பட்டன.காரணம் இப்படத்திலும் காத்திரமாக ஒலித்த கம்யூனிச ஆத்ரவு குரல்.இக்காலகட்டத்தில் ஐரோப்பா முழுக்க எதிரொலித்த பாசிச அலை கம்யூனிசத்தை அதன் அனைத்துவழிகளில்லும் தீவிரமாக அடக்கி ஒடுக்க முயற்சித்தது.அதிலும் ரெனுவாரின் படங்களில் இக்குரல் உரத்து காண்ப்பட்டதால் அவரது திரைப்படத்தை முழுமையாக ஒடுக்குவதில் தீவிரமுனைப்புடன் செயல்பட்டது.இத்னால் தன் கவனத்தை சிலகாலம் நாவல்களை படமாக்குவதில் திருப்பிக்கொண்ட ரெனுவார் 1937ல் தன் வாழ்வின் முதல் உலகதிரைப்படத்தை வெளியிட்டு திரைப்படவிழாக்களில் புதிய ஈர்ப்பையும் கவனத்தையும் கண்டடைந்தார்.லா கிராண்டே இல்லூஸன் எனும் போரை பின்புலனாக கொண்ட இப்படம் ஜெர்மனியில் முழுமையாக தடைசெய்யப்பட்டாலும் வெனிஸ் திரைப்ப்ட விழாவில் சிறந்த கலை ஆளுமைக்கான பரிசை வென்றதோடு நியுயார்க் கிரிடிக்ஸ் அவார்டையும் அந்த வருடத்தில் தட்டிச்சென்றது.இது மட்டுமல்லாமல் பிற்பாடு ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தில் உலக சினிமா வரலாற்றில் அதுவரை வெளியான படங்களில் விறந்த பத்து படங்களில் ஒன்றாகவும் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. லாகிராண்டே வில் ராணுவதிகாரியாக நடித்த ''எரிக் வான் ஸ்ட் ரோ கிம்''¢ சிறந்த நடிப்பிற்கான ¢ இலக்கணங்களை இப்படத்தில் உருவாக்கியிருப்பதாக பத்திரிக்கைகள் புகழ்ந்து எழுதின.படத்தின் ஒளிப்பதிவில் முதன் முதலாக டீப் போகஸ் லென்ஸ்களை பயன் படுத்தி காட்சிகளில்பாட்வையாலனிடமிருந்து இன்னும் ஆழாமான கவனக்கூர்மையை பெற்று அவனது கனவு நிலையை விஸ்தீரணப்படுத்தினார்.ஒரு அண்மைகாட்சி எனப்படும் க்ளோசப்,இடைநிலை எனப்படும் மிட்,சேய்மை எனப்படும் லாங் ஆகிய மூன்று ஷாட்களின் மூலமாக பார்வையாளனின் மனநிலைக்குள் உருவாக்க்கூடிய அனுபவங்களைவைந்த டீப் போகஸ் லென்ஸ்கள் ஒரேஷாட்டில் ஏற்படுத்ட்ய்க்கூடிய தனமை நிரம்பியது என்பதுதான் இதன் சிறப்பு.ஒரு ஷாட்டில் அல்லது காட்சியில் போர் கிரவுண்ட் எனப்படும், முன் தளம், மற்றும் பே கிரவுண்ட் எனப்படும் பின் தளம் ஆகியவற்றின் விவரணங்கள் மிக துல்லியமாக இந்த லென்சில் பதிவாக்ககிடைப்பதன் மூலம் பார்வையாளனை கதையின் களனுக்கே முழுமையாக கொண்டு போகக்கூடிய தருணத்தை இந்த லென்ஸுகள் உருவாக்கிதருகின்றன.
தொடர்ந்து 1939ல் வெளியான் ரூல்ஸ் ஆப்தி கேம்ஸ் அக்காலத்தைய பிரெஞ்சு சமூகத்தின் அவலங்களையும்,வாழ்வையும் தோலுரித்து காட்டுவதாக இருந்தது.ஒளிப்பதிவு படத்தொகுப்பு ஆகிய தொழில்நுடபங்களில் இப்ப்டம் ரெனுவாரின் மொழி குறித்த ஆழ்ந்த புலமையையும் மேதமையையும் வெளிப்படுத்தியது, படத்திலிடம்பெறும் முயல் வேட்டை காட்சியில் மேற்சொன்ன தொழில் நுட்பங்கள் இரண்டின் மூலம் ரெனுவார் உருக்கிகாண்பிக்கும் மேதமை அனுபத்தால் மட்டுமே பகிர்ந்துக்கொள்ளக்கூடிய உயர்ந்த கலாரசனையை உள்ளடக்கியது.மேலும் காட்சி எந்த திட்டமிடலும் இல்லாமல் இயற்கயாக நிகழும் ஒரு சம்பவத்தை அப்படியே தன்னியல்பாக படம்பிடிக்கிறார்போல் நமக்குள் ஒரு மாயகட்டு மானத்தை உருவாக்கும் பொருட்டு ஷாட்டுகளை அவர் கட்டமைத்திருந்த விதம் இன்றும் இப்படத்தை பார்ப்பவர்களை பிரமிக்கசெய்யும்.ரூல்ஸ் ஆப் தி கேம் வெளியான போது படு தோல்வியடைந்ததோடு மட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களிலேயே வெடித்த இரண்டாம் உலக்போர் காரணமாக இத்திரைப்படம் ஐரோப்பா முழுக்க தடை செய்யப்பட்டிருந்தது.மட்டுமல்லாமல் இப்படத்தின் பிரதிகள் தேடிகண்டுபிடிக்கப்பட்டு முழுமையாக் அழித்தொழிக்கப்பட்டன. பிற்பாடு 1950ல் இப்படத்தின் மீதிருந்த ஆர்வம் காரண்மாக கடும்பிராயசையுடன் இரண்டு பிரெஞ்சு இளைஞர்கள் மீண்டும் இப்படபிரதியை தேடிகண்டடைந்து உலகிர்கு மீண்டும் திரையிடப்பட்டபோது விமர்சகர்கள் ஒருசேர எழுந்து நீண்ட கரவொலி எழுப்பி அது வரைலிலான அனைத்து படங்களில்லும் சிறந்த படமாக தேர்வு செய்தனர்.இடைக்காலத்தில் அமெரிக்காவுக்கு சென்று அங்கு சில படங்களை இயக்கிய ரெனுவார் 1949ல் இந்தியாவிற்கு வந்து கல்கத்தாவில் தங்கி ரிவர் அனும் படத்தை இயக்கினார்.அவரது படப்பிடிப்பின் போது கூட்டத்தோடு கூட்டமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வங்காளி இளைஞ்னுக்கு மனதில் பலபாதிப்புகள்.ஒரு நாள் நாமும் இது போல ஸ்டார்ட் கட் என சொல்லும் பணியை செய்ய வேண்டும் என கனவு கண்டான் அடுத்த ஐந்தாவது வருடத்திலேயே பதேர் பாஞ்சாலி எனும் படத்தின் மூலம் அவனது கனவு பலித்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு உலக அரங்கில் முதல் கவுரவமும் கிடைத்தது
ரிவர் வெளியான பிறகு 1970ல் இறப்பு வரை ரெனுவார் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கியவண்ணம் இருந்தார்.அவர் இறந்த அமெரிக்காவின் உயர்ந்த இயக்குனர்களுள் ஒருவராக கருதப்பட்ட ஆர்சன் வெல்ஸ் உலகின் த்லைசிறந்த இயக்குனர் நம்மை விட்டு பிரிந்தார் என அறிவித்தார். ஆனால் ரெனுவார் ஒருபோதும் தன்னை இயக்குனராக கருதிகொண்டததில்லை நான் ஒரு கதை சொல்லி அவ்வளவே என்பதுதான் அவர் தன்னை பற்றியும் தனது படைப்புகளைபற்றியும் தன்க்கு தானே எழுதிக்கொண்ட தீர்ப்பு.

காலம் வியக்கும் கலை:சிட்டிசன் கேன்

http://www.ajayanbala.in



சிட்டிசன் கேன்.


வாழ்க்கையின் வியத்தகு விஷ்யமே இயற்கையின் ரகசியம்தான்.கடைசிவரை எந்தமனிதனும் ¢இயற்கையின் ரகசியத்தை முழுமையாக அ அறிந்து கொள்ள முடியாமலே இறந்தும் போகின்றான்.மனிதனின் இந்த தோல்விதான் இயற்கைக்கு நிகரான் அமசங்களை கொண்ட கலையயை உருவாக்குவதில் அவனை தீவிரமாக ஆழ்த்துகிறது.இப்படியான் அவனது படைப்பு மனநிலைக்கு இத்ர கலைகளைக்காட்டிலும் திரைப்படத்துறை அதிக சாத்தியப்படுகளையும் வெளியையும் கொண்டிருப்பதால் இறுதியாக எல்லா கலைஞர்களும் தேர்ந்தெடுக்கும் துறை சினிமாவாக இருக்கிறது.ஆனால் அத்தகைய சினிமாவின் வரலாற்றில் பார்வையாளனனின் அனுபவத்தை கடந்து முழுகலைவீச்சுடன் அதன் பல்வேறுவித்மான கலை செயல்பாட்டுகளுக்கு சாத்தியமளித்து உருவான திரைப்படங்களுள் மிகச்சிறந்த படம் என்று ஒன்றை குறிப்பிடுவோமானால் அப்படம் 1941ல் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில் வெளியான சிட்டிசன் கேன் ¢¢
இன்றும் உலகின்¢ தலைசிறந்தபடம் எது என்று விமர்சகர்களிடம் கேட்டால் பத்துக்கு எட்டு பேர் குறிப்பிடும் திரைப்ப்டம் 'சிட்டிசன் கேன'¢ ஆக இருக்கிறது.திரைப்பட கல்லூரி மாணவர்கள்,விமர்சகர்கள்,அறிஞர்கள் ஆகியோரை இன்றுவரை அதிக மயக்கத்திலாழ்த்தும் சொல் 'சிட்டிசன் கேன'¢.அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூ¢ட் சமீபத்தில் வெளி¢யிட்ட தலைசிறந்த நூறுபடங்களின் பட்டியலில் முதலாவது படமாக தேர்ந்தெடுத்திருப்பதும் சிட்டிசன் கேனைத்தான்.1941ல் வெளியான படம் கிட்டதட்ட 70 வருடங்களை கடந்த பிறகும் இன்றும் அத்ற்கு பிறகு வந்த அனைத்து படங்களையும்¢ பின்னுக்குதள்ளி காலத்தின் பரிசுகளாக கிடைத்திருக்கும் தொழில் நுடபங்களையும் உதாசீனப்படுத்தியிருக்கிறதென்றால் அப்படி என்ன சிறப்பு அந்த படத்தில் இருக்க .முடியும்.
சாதாரண கதை
கதை என்னமோ சாதாரணமானதுதான் அமெரிக்காவில் கொடிகட்டிபறந்த பத்திரிக்கையுலக ஜம்பவான் சார்லஸ் ஃபோஸ்டர் கேன் என்பவர் இறக்கும் தருவாயில் 'ரோஸ்பட'¢ ஒற்றை சொல்லை பிரிந்த உதடுகளின் வழியே உதிர்க்கிறார். அந்த சொல்லில் ஏதோ ஒரு ரகசியம்இருப்பதாக உணரும ஒரு ¢பத்திரிக்கையாளன் ¢ அதனைதேடி பலரிடம் அலைகிறான்.அவர்கள் மூலமாக ¢சார்லஸ் போஸ்டர் கேனின் வாழ்க்கை பல ப்ளேஷ்பாக்குகளின் மூலம் காண்பிக்கபடுகிறது. இறுதிவரை ரோஸ்பட் என்ற அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை அந்த நிருபரால் முழுவதுமாக அறிந்துகொள்ளப்படமுடியாத நிலையில கேமரா கேனின் வீட்டுக்குள் பழைய பொருட்கள் எரிக்கப்படும் இடத்தை நோக்கி கேமரா நுழைகிறது ¢அங்கே எரியும் மரப்பொருட்களின் நடுவில் சுவாலைகளுக்கு நடுவே ஒரு மரப்பொருளின் மேல் நாம் காணும் எழுத்துக்கள் ரோஸ்பட.¢. படம் அத்தோடு ஒரு புதிரை நம் மனதில் உண்டாக்கிவிட்டு நிறைவு பெறுகிறது.வெறும்னே சில வரிகளுக்குள் இந்தபடத்தின் கதையை இப்படி எழுதிவிட முடிந்தாலும்¢ இப்படத்தின் திரைக்கதையை குறித்தும் திரைப்பட உருவாக்கமும் குறித்தும் எழுதப்போனால் அது ஆயிரம் பக்கங்களையும் தாண்டி எழுத வேண்டியதிருக்கும்.
அசாதாரணமான திரைக்கதை
¢ ஒரு த்டுப்புவேலியில்' யாரும் இங்கே அத்துமீறக்கூடாது 'என்ற உத்த்ரவு. அதனை கேம்ராவின்மூலம் மீறியபடி படத்தின் முதல் ஷாட் துவங்கி ஒருபங்களாவினுள் நுழைகிறது அங்கே முன்பே குறிப்பிட்ட படி நாயகன் கேன் மரணத்தருவாயில் படுத்திருக்கும் காட்சி. ரோஸ்பட் என்று நாயகனின் உதடு முணுமுணுப்பது க்ளோசப்பில்.தொடர்ந்து கிட்டத்ட்ட 20து நிமிடத்திற்கு விறுவிறுப்பான பல ஷாட்டுகளின்தொகுப்புடன் ஒரு செய்திப்ப்டம் ..அதில் சிறுவயதில் தந்தையை பிரிந்து தாயுடன் வறுமைக்கு ஆளாகும் சார்லஸ்கேன் தன் மேல் காலம் திணித்த தடைகளையும் இன்னல்களையும் எப்படி அடித்து நொறுக்கி பத்திரிக்கை உல்க ராட்சசனாகவும் கோடீஸ்வரனாகவும் வளர்ந்தான் என்பதை அது விவரிக்கிறது.படத்தை பார்க்கும் தயரிப்பாளர் படத்தில் ஏதோ ஒரு முக்கிய குறை இருப்பதாகவும் சார்லஸ் கேன் குறித்து மேலும் பல தகவல்களை திரட்டும்படியும் கூற நிருபர் ஒருவன் அப்பணியில் ஈடுபடத்துவங்குகிறான்.முத்லாவதாக அவ்ன் சந்திப்பது சார்லஸ் கேனினுடைய இரண்டாவது மனைவி சூசனை.முழுவதும்குடிகாரியாக மாறிப்போன சூசன் முதலில் அவனை விரட்டியடிக்கிறாள்.அதன்பிறகு இரண்டவதாக சார்லஸின் கார்டியன் ஒருவரை அந்நிருபர் சந்திக்க அவர்மூலம் சிறுவயதில் சார்லஸ் த்ன் தாயிடகிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து செல்லப்படும்காட்சி காண்பிக்கபடுகிறது. அத்னை தொடர்ந்து கேன் அதிர்ஷ்டத்தின்மூலம் பணக்காரனாகியதையும்,தொடர்ந்து பத்திரிக்கையுலகில் நுழைந்து போட்டி பத்திரிக்கையின் நிருபர்களை தந்திரமாக தன் வசம் இழுத்து அழிக்க முடியாத அசுரனாக தொழிலில் பெருவளர்ச்சியடைந்ததையும் முதல் திருமணத்தை செய்ததையும் அவரது பத்திரிக்கை பணியாளர்¢ செய்தியாளனிடம் சொலவதன் மூலாமாக் நாம் அறிந்துகொள்கிறோம்
அதன் பின் இரண்டவது மனைவியான சூசனை ஒரு மழைநாளில் சாலையோரம் சந்திக்கிறார் மிஸ்டர் கேன்.அன்று இரவே இருவரும் காதல்வசப்பட்டு ரகசிய திருமணம் செய்துகொள்ள கேனின் அழிவுப்படலம் ஆரம்பமாகிறது.அவரது மிதமிஞ்சிய அதிகார வெறி நியுயார்க நகர கவர்னர் தேர்தலுக்கு அவரை போட்டியிடவைத்து த்லைகுப்புற விழவைக்கிறது.ஆனாலும் அவரால் த்ன்னுடைய ஆணவத்திலிருந்து முழுவதுமாக தன்னை இறகிக்கொள்ள முடியவில்லை. தகுதியான் குரல்வளமில்லாத தன் புது மனைவியை பாடகியாக்க தானே ஒரு ஓபரா அரங்கினை கட்டி பாட ¢வைக்கிறார்.மறுநாள் த்னது பத்திரிக்கையில் அத்னை பாராட்டி எழுதாத ஊழியனை வேலையைவிட்டே விரட்டுகிறார்.அதேசமயம் இதரபத்திரிக்கைகளின் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனைவி சூசன் பெரும் குடிகாரியாகிறாள்.இந்த தொடர் தோல்விகளால் சுருங்கி போகும் தம்பதியர் இருவரும் ஒரு பிரம்மாண்ட மாளிகைகட்டி அதில் யாருமற்ற தனிமையில் வசித்துவருகின்றனர்.ஒரு கட்டத்தில தான் மிகவும் நேசித்த மனைவியும் பிரிந்துபோய்விட தனிமையில் பரிதாபமாக வாழும் கேன் கடைசியில் அனாதரவாக ரோஸ்பட் எனும் ஒற்றை சொல்லை உதிர்த்துவிட்டு இறந்து போகிறார்.
மேற்சொன்ன சம்பவங்கள் அவரது ஊழியர்கள் மற்றும் இரண்டாவது மனைவி செய்தியாளனிடம் சொல்வதன் மூலமாக நமக்கு காட்சிகளாக விவரிக்கபடுகிறது. என்றாலும் ரோஸ்பட் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை கடைசிவரை அந்த செய்தியாளனால் பெறமுடியவில்லை..இறுதியி.ல் நெருப்புகூட்டில்வைத்து எரிக்கப்படும் மரப்பொருள் ஒன்றில் ரோஸ் பட் என எழுதப்பட்டிருக்கிறது.அப்பொருள் அவன் சிறுவயதில் அவனதுதாயாரால் பரிசளிக்கப்பட்ட ஒரு விளயாட்டு பொருள்..ஒட்டு மொத்தமாக ஒருவன் த்ன் வாழ்க்கையில் எத்னை மகிழ்ச்சியான தாக கருதுகிறானோ அதுமட்டுமேதான் கடைசிவரை நினைவில் எஞ்சி நிற்கிறது அவ்வகையில் பார்க்கும் போது சார்லஸ் கேனின் வாழ்க்கையில் எஞ்சியிருந்தது எல்லாம் அந்த சிறுவயது நாட்கள் மட்டுமே என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதாக விமர்சகர்கள் அர்த்தப்படுத்திக்கொள்கிறார்கள்.உண்மையில அந்த கடைசி காட்சி மூலம் என்ன சொல்லவருகிறார் என்பதை ¢பார்வையாளனது அனுமானத்துக்கே விட்டுவிடுகிறார்.இப்படத்தை குறைந்தது இரண்டாவது முறையாக பார்க்கிறபோதுதான் நான் மேற்சொன்ன முழுகதையுமே ஒரு பார்வையாளனுக்கு புரியவ்ரும்.
சர்ச்சை
அதே போல ஒவ்வொரு முறை பார்க்கிற போதும் நாம் வியப்புறும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வ்டிவம் பெற்றிருந்தது இப்படத்தின் சிறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணம்.இந்த திரைக்கதை வடிவம் தான் பிற்பாடு வந்த அகிரகுரோசாவின் ரோஷாமான் உட்ப்ட பல படங்களுக்கு முன்னோடியாக இருந்தது. இத்த்னை சிறப்பு வாய்ந்த இப்படத்தின் திரைக்கதை யார் எழுதியது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்றுவரை இருந்துவருகின்றன.ஹாலிவுட்டின் பிரபல த்யாரிப்பாளர் கம் இயக்குனரான ஜோசப் மாணிக்வெச் சின் சகோதர் ஹெர்மன் மாணிக்வெச்தான் படத்தின் முழுதிரைக்கதை யையும் எழுதியது என்றும் இயக்குனரான ஆர்சன் வெல்ல்ஸ் அதில் துளிகூட பங்களிக்கவில்லை என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. இன்னொரு த்ரப்பில் படம் முழுகக முழுக்க ஆர்சன் வெல்ஸின் வாழ்க்கை சம்பவங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.இப்படத்தில்வரும் கதாநாயகனை போலத்தான் சிறுவயதில் இவரும் தன்அம்மாவை இழந்து பரிதவித்தார்.பதினைந்தாவது வயதில் அதே போல் அப்பாவையும் இழந்தார்.கதாபாத்திரம் குணாதிசயம் ஆகியவற்றில் கேன் ஆர்சன் வெல்ஸையே பிரதிபலிக்கிறார் ஆகவே இப்படத்தின் திரைக்கதை அவருக்கே மூழ்வதும் உரித்தானது. வெறுமனே ரெண்டு வசனம் எழுதிக்கேடக மாணிக்வெச்சிடம் போக வந்ததால் ஏற்பட்ட ¢வினை இது,என இன்னொருதரப்பும் கூறுகிறது.இது குறித்து ஹாலிவுட்டில் 1996ல் ஒரு டாக்குமெண்டரிபடமே வந்திருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
என்னதான் படத்தின் திரைக்கதையில் ஆர்சன் வெல்ஸ் மேல் இத்த்னை சந்தேகம் பலருக்கும் எழுந்தாலும் ஒரு விஷயம் அவர்களது அத்தனை பேருடைய வாயயையும் அடைத்து விடும் .அது படத்தில் பயனபடுத்தப்படிருக்கும் தொழில்நுடபம். கதையயை மிகவும் நேசித்த ஒரு இயக்குனருக்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் சாத்தியபடும் என்ற காரணத்தால் இந்த சர்ச்சையில் பெரும்பாலோனோரின் ஓட்டு இயக்குனர் ஆர்சன் வெல்ஸுக்கு சாதகமாகவே விழுகிறது.அந்த அளவிற்கு இப்படத்தின் திரைக்கதையை போலவே தொழில்நுட்ப கூறுகளும் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் ப்யனபடுத்தபட்டிருக்கின்றன.
தொழில் நுட்பம்¢
திரைப்படத்தை முழுமையாக கற்கும் மாணவன் ஒருவன் இப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மாதத்துக்கு ஆராய்ச்சி பண் ணினால் போதும் நிச்சயம் அவன் திரைப்ப்டத்துறையில் ¢மேதையாகிவிடமுடியும்¢ அந்த அளவிற்கு விவரித்து எழுதுவதற்கு படத்தின் ஒவ்வொருஷாட்டிலும் பல அமசங்கள் கொட்டிகிடக்கின்றன.இப்படத்தின் மிககுறிப்பிடத்தக்க அம்சம் ஒளிப்பதிவுக்காக பயன்படுத்தப்படிருக்கும் டீப் ஃபோகஸ் லென்ஸ்கள். படத்தளத்தில் கேம்ரா குவிமையம் கொள்ளும் பாத்திரம் அல்லது பொருள் ஆகியவ்ற்றின் முன்னும் பின்னுமாக உள்ள சகலமும் துல்லியமாக பதிவாக்கம் பெற்று தந்த விதத்தில் இந்த டீப் ஃபோகஸ் லென்ஸுகளின் பங்களிப்பு அளப்பரியது.மட்டுமல்லாமல்படத்தின்கேமரா கோணங்கள் மற்றும் நகர்வு ஆகியவை தஞ்சை பெரிய கோயில் போன்ற மகத்தான் கலைபடைப்புகளின் போது ஒருகலைஞன் படும் மெத்தனங்களுக்கு நிகரான கடப்பாடும்,உழைப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தவை.அதிலும் குறிப்பாக கேன் தானும் மனைவியும் தனித்துவாழும் பங்களா உள்ளறைகாட்சிகளில் ஒளி கட்டமைவும் , காமராநகர்வும் கோணங்களும் அனைவரையும் பிரமிக்க வைத்துவிடுகின்றன. இப்படத்தின் அதி முக்கியமான இன்னொரு கதாநாயகன் எனும் அளவிற்கு ஒளிப்பதிவாளர் க்ரேக் டொனால்டின் பங்கு வியக்கும் வண்ணத்தில் அமைந்திருந்தது.படத்தின் இறுதிக்காட்சியில் கேன் பங்களாவில் அவர் சேர்த்துவைத்த சொத்துக்கள் அனைத்தும் வெற்று பொம்மைகளாக நின்று கொண்டிருக்க பத்திரிக்கையாளர்கள் வெளியேறுகிற காட்சியின் போது மெல்ல அவர்களிடமிருந்து விலகி பின் நகர்ந்து வரும் காமரா அப்படியே கூரை உச்சிக்கு சென்று அங்கிருந்து பார்ப்பது போன்ற பரந்த காட்சி ஆகச்சிறந்த இலக்கியபடைப்புகளுக்கு ஈடானது.ஒளிப்பதிவை போலவே படத்தில் படத்தொகுப்பு மற்றும அரங்க நிர்மானம்¢ஆகிய இரண்டும் இப்படத்திற்கு இரண்டு தேர்ந்த கவசங்கள்.¢ படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் செய்தி படத்தில் காண்ப்படும் உயிர்துடிப்பு மிக்க எடிட்டிங் மற்றும் ஒன்று நீங்கிய கையோடுமற்றொன்று வரும் வைப, போன்ற பல உத்தி கள் இன்றைக்கு உருவாக்கப்படும் நவீன படங்களுக்கும் சவால்விடும் கலைநயமும் தொழில்நேர்த்தியும் கொண்டிருப்ப்வை.படத்தின் மூழு திரைக்கதையுமே நினைவலைகளின்மூலமாக தொகுப்பாக சொல்லப்படுகிற காரணத்தினால் இயல்பாகவே படத்தொகுப்பின் மேதமையை ¢படம் முழுவதும் வெளிப்பட்டுத்தபட்டுள்ளது.¢தனி பங்களாவில் நிகழும் சம்பவங்களில் ஒரு காட்சியில்¢ கேன் தன் மனைவியை கணவரும் சந்தர்ப்பத்தில் விஸ்தீரமான் ஹால் ஒன்று காண்பிக்கப்படுகிறது .அத்ன் மறுகோடியில் தரையில் அமர்ந்திருக்கும் மனைவியை நோக்கி கேன் இறங்கி வருவார்.அரங்கில் அப்போது பலத்ரப்பட்ட சிலைகள் காண்ப்படும் அவற்றில் தற்போது நம் இந்திய அரசின் சின்னமாக இருக்கும் கவிழ்ந்த தாமரை மீதமர்¢ந்திருக்கும் மூன்று சிங்கங்கள் கொண்ட அந்த சின்னம் ஒரு பிரமாண்ட சிலையாக நின்று கொண்டிருக்கும். இந்த சிலையை இந்திய அரசாங்கத்தின் சின்னமாக அங்கீகாரம் செய்த இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படட்தே 1946ல் தான். அத்ற்கு முன்பே 1941ல் இச்சிலை வடிவம் இப்படத்தில் பிரம்மாண்டமாக பயன்படுத்தப்பட்டிருப்பது ஆச்சர்யத்தை தருகிறது.பணத்தை கடந்து வெற்று கலைபொருள்களை உலகமெங்குமிருந்தும் சேகரித்துவைக்க்க துடிக்கும் ஒரு பண முத்லையின் தடித்த்னத்தை காண்பிக்க இயக்குனர் எவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்கிறார் என்பதும் இதன் மூலம் தெரியவருகிறது.
விருது வெகுமதி
இத்த்னை சிறப்பு பெற்ற இத்திரைப்படம் அன்று வெளியான காலத்தில் சுமாரன் வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது.ஆஸ்கார் விருதுக்கு பல துறைகளில் பரிந்துரைக்கப்படிருந்தும் திரைக்கதைகான ஒரே ஒரு விருது மட்டுமே இப்படத்திற்கு வழங்கப்பட்டது.அத்ன் பிறகு ஏறக்குறைய எவராலும் பொருட்படுத்தப்படாமல் இருந்துவந்த சூழலில் 20 வருடங்கள் கழித்து பிரான்சிலிருந்து ஒரு அதிசயம் நிகழ்ந்தது.நியூ வேவ் என அங்கு எழுந்த புதிய அலையின் கர்த்தாவான விமர்சகர் ஆந்த்ரே பஸின், மற்றும் இயக்குனர்கள் ட் ரூபோட்,கொடார்ட்,போன்ற்வர்கள் கதையாசிரியர் திரைகதையாசிரியர் ஆகியோரை கடந்து ஒரு படம் முழுக்க முழுக்க இயக்குனருக்கு மட்டுமே படைப்புரிமை பெற்றது என்ற கொள்கையை முதன்முறையாக வலியுறுத்தினர்.அத்ன்படி அவர்கள் இந்தபடத்தை பார்த்து விட்டு இதுதான் அசல் கலை சினிமா என தலையில்தூக்கிவைத்து கொண்டாட அப்போது துவங்கியது சிட்டிசன் கேனின் இரண்டாவது இன்னிங்க்ஸ்.
ஆர்ஸன் வெல்ஸ்
படத்தின் இயக்குனரான ஆர்சன் வெல்ஸுக்கு சிட்டிஸன் கேன் ஒரு ¢ முதல்படம் என்று சொன்னால் யாரால் நம்ப முடியும்? மட்டுமல்லாமல் அவரே அப்படத்தில் நாயகன் சார்லஸ் கேன் ¢ ஆகவும் நடித்து ஆகசிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவர்மட்டுமல்லாமல் படத்தில் நடித்த அத்த்னை பேரும் புதுமுகங்கள் என்பதுதான் இப்படத்தின் முக்கியசேதி. 1915ல் பிறந்த ஆர்சன்வெல்ஸ் சிறுவயது முதலே கலையின்மேல் தணியாத ஆர்வம் கொண்டிருந்தார் என்பதைவிட வெறிபிடித்தலைபவராக இருந்தார் என்பதுதான் முற்று முழுக்க சரி..தன் பதினைந்தாவது வயதிலிருந்தே மேடை நடகங்களில் நடிக்கதுவங்கிய ஆர்சன் வெல்ஸ் படிப்படியாக வளர்ந்து அப்போது பிரபலமாகி வந்த வானொலிநிகழ்ச்சிகளில் தயாரிப்பாளராக இருந்து புகழ்பெற்றார்.அந்த புகழ் அவரை ஆர்.கெ.ஒ ஸ்டுடியோவில் இயக்குனராக அழைக்கும் அளவிற்கு வேலை செய்தது. தன் 26ம் வயதில் சிட்டிசன் கேன் எனும் அசாத்தியமான படத்தை இயக்கி நடித்து வாழ்வில் அழியா புகழை பெற்றார். இப்படத்தில் வரும் மையகதாபாத்திரத்தின் நல்ல பகுதிகளுக்கு இவருடைய வாழ்க்கை ஒரு காரணமென்றாலும் கதாபாத்திரத்தின் மோசமான குணங்களை படத்தின் த்யாரிப்பாளரான ஹாரவெஸ்டையே அதிகம் ஒத்திருப்பதாக அனைவரும் கூறினர்.இரண்டாவது படமான 'மாக்னிபிஷியண்ட் ஆம்பர்சன் '¢அவரது திறமைக்கு கட்டியம்கூறினாலும் ஆர்சனுக்கு அடுதடுத்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.அத்ன்பிறகு ஐரோப்ப ஜப்பான் என அலைந்த வெல்ஸ் சிலபடங்களை இயக்கி நடித்திருந்தாலும் அதில் எந்த படமும் சிட்டிசன் கேன் அடிந்த கலையின் உச்சத்தில் ஒரு துளிய்யை கூட எட்ட முடியவில்லை. அக்டோபர் 11 1985ல் அமெரிக்க நாளிதழ்களில் நடிகர் யூல் பிரின்னர் ¢இறந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியான போது உடன் அருகில் மற்¢றொரு இறப்பு செய்தியும் வெளியானது தன் எழுபதாவது வயதில் சிட்டிசன் கேன் இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் மரணமடைந்தார் என்பதுதான் அந்த செய்தி.

உலக சினிமா வரலாற்று; மறுமலர்ச்சி யுகம் 13


நியோ ரியலிஸம்

நியோ ரியலிஸம் இந்த பேரை தெரியாமல் உலகசினிமாபற்றி யாராவது பேசினால் அவரை சுலபமாக விலக்கிவிட்டு நீங்கள் அடுத்த வேலை பார்க்கலாம்.அந்த அளவிற்கு உலக சினிமா எனும் அறிவுலகின் தெர்மா மீட்டராக இருக்கும் இந்த நியோரியலிஸ்ம் தான் கலைசினிமாஎனும் வகைப்பாட்டின் மையப்புள்ளி.மேலும் சினிமாவில் க்யூபிஸம் ,எக்ஸ்பிரஷனிஸம்,எக்ஸிஸ்டென்ஷியலிஸம்,ஸ்ட்ரகசுரலிஸம்,இறுதியாக வந்திருக்கும் பொஸ்ட்மாடர்னிஸம் என பலவேறு இஸங்கள் கலை இலக்கிய கோட்பாட்டாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டாலும் சினிமா தனக்குதானே கண்டுகொண்ட ஒரே இஸம் இந்த நியோரியலிஸம், சரி என்ன அது நியோ ரியலிஸம்

அப்படியானால் ரியலிஸம் என்ற ஒன்று இருந்திருக்க வேண்டுமல்லவா?. முதலில் அந்த ரியலிசத்தை பார்த்துவிட்டு பிறகு நியோரியலிஸத்துக்கு வருவது சரியாக இருக்கும்.
நான் எதர்த்தமாக ஒரு படம் எடுத்துவிட்டேன் என யாராவது சொன்னால் அவரை விட தற்குரி யாரும் இருக்க முடியாது,
அவர் மட்டுமல்ல உலகில் யாருமே எதார்த்தமாக படம் எடுக்க முடியாது. ஒருவேளை இடையில் கட் ஆகாமல் தொடர்ச்சியாக ஒரே ஷாட்டில் இரண்டரை மணிநேரம் எடுப்பதாக இருந்தால் ஒருவேளை அதனை எதார்த்த முயற்சி என கருதலாம்.மற்றபடி எதார்த்தம் எனபது, எதார்த்ததை போல படம் எடுப்பதுதானே த்விர அச்சு அசல் எதார்த்தமாக இருக்க முடியாது..என்றாலும் இலக்கிய வகைப்பாட்டை சேர்ந்த ரியலிஸம் சினிமாவுக்குள்ளும் புகுந்து வாழ்வை பற்றி கூறும் சில நல்ல சினிமாக்களுக்கு அடையாளமாக சூட்டப்பட்டது.ஆனாலும் இவையணைத்துமே .
1945க்கு முன்புதான் .

1945க்கு முன்பான திரைப்ப்ட உலகம் மனித வாழ்வை மேலும் சுவாரசியபடுத்தக்கூடிய, அனுபவத்தில் பல புதுமைகளை நிகழ்த்தக்கூடிய சினிமாவாக மட்டுமே இருந்துவந்தது.

இவர்களுள் கிரிபித்,சாப்ளின்,ப்ரிட்ச் லாங் என பல மேதைகள் தோன்றி வாழ்வின் சாரத்தை பல கோணங்களில் கதைகளாகவும் காட்சிகளாகவும் சினிமாகவும் மாற்றி தந்திருந்தாலும் அவை அனைத்துமே சினிமா எனும் தொழில் நுடபத்தை கலைவடிவமாக மாற்றுவதற்கும் அந்த கலைவடிவத்தின் மூலம் மனித உணர்ச்சிகளை ஆழ்ப்ப்டுத்தும் நல்ல கதையினை சொல்வதற்காகவும் மட்டுமேபயன்படுத்த பட்டு வந்துள்ளன.ஐசன்ஸ்டைனுடைய படங்களும் அரசியலை பின்னனியாக கொண்டிருந்தாலும் தொழில்நுட்பத்தின் கலைத்தன்மையை யே அவை பெரிதும்சார்ந்து இருந்தன. இப்படிப்பட்ட திரைப்படங்கள் அனைத்துமே பார்வையாளர்களிடம் த்ர வித்தியாசம் எதுவும் இல்லாமல் பொதுவான தளத்திலேயே வந்துள்ளன்

.இதற்குமுன் வந்த திரைப்ப்டங்களில் ஒன்று புறபாழ்வின் எதார்த்த சித்தரிப்புகள் இருந்திருக்க கூடும் ஆனால் கதாபாத்திரங்களின் அக உணர்வு சித்தரிப்பு இருந்திருக்கது .இதற்கு உதாரணமாக சாப்ளினது திரைப்படங்களை கூற முடியும் .
அதே போல பிரெஞ்சு இயக்குனரான ரெனுவார் போன்ற இயக்குனரின் திரைப்படங்களில் பாத்திரங்களின் அகசித்தரிப்பு
இருந்தது ஆனால் அதில் அரசியல் உண்மைகள் என எதுவும் இருப்பதில்லை,

அதே போல ஐஸன்ஸ்டைன் போன்ற ரஷ்ய இயக்குனரின் திரைப்படங்களில் அரசியல் இருந்த அளவிற்கு இயல்பான கதைசொல்லும் தன்மைகள் இல்லாது மிகைந்து கூறும் தனமைகள் இருந்தன

நாம் கண்களால் காணகூடிய புற உலகின் உண்மை(physical truth) தவிர கண்னுக்கு தெரியாத மன உணர்வு(psycological truth)சார்ந்த உண்மை.சமூக பார்வையோடு கூடிய அரசியல் உண்மை(political truth) என பல உண்மைகள் இருக்கின்றன.இவை மூன்றையும் உள்ளடக்கிய படங்களாக வெளியான காரணத்தால் அதுவரையிலான மரபான ரியலிஸம் என்பதிலிருந்து நியோரியலிஸம் எனும் புதிய பெயர் இவ்வகை படங்களுக்கு சூட்டப்பட்டன.
.
ஒரு பார்வையாளனை அவனை சுற்றிநடக்கும் உலகத்தை பற்றிய அறிவை விரிவாக்க அல்லது அவனது சிந்தனையை ஆழப்படுத்த, வெறுமனே கதை சொல்லும் அனுபவத்தை கடந்து காட்சிகளின் மூலமாக புதியதொரு ஒரு தரிசனத்தை அடைய திரைப்படங்கள் கலைப்படங்களாக உருக்கொண்டன.

இதன் முதல்விளைவு போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட இத்தாலியில்தான் துவங்கியது.அங்கிருந்தசில குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் இதற்குமுன் வந்தசினிமாக்களில் இல்லாத ஒரு எதார்த்தம் உண்மை கலையம்சம் பார்வையாளர்களின் சிந்தனையை அறிவை தூண்டும் வகையில் இருந்தன.அவ்வகைப்படங்களுக்கு அடையாளமாக வழங்கப்பட்ட பெயர்தான் நியோ ரியலிஸம்

இத்தாலியின் இந்த மகத்தான் கண்டுபிடிப்புக்கு மிக முக்கியமான காரணகர்த்தாக்களாக இருந்து அதனை வழிநடத்திசென்றவர்கள்
இன்று உலகசினிமா நன்கு அறிந்த இயக்குனர்கள் சிலர்.
மைக்கெல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி, லூச்சியான விஸ்கோண்டி,ரோபோர்ட்டோ ரோஸலினி, குஸப்பே டி சாண்டிஸ் விட்டோரியா டி சிகா மற்றும் செஸாரே ஸவாட்டினி
ஆகியோர்.இதில் விஸ்கோண்டி,மற்றும் ஆண்டினியோனி நற்றும் சபாட்டினி ஆகியோர் திரைப்ப்ட விமர்சகர்களாக இருந்து அதுவரையிலான இத்தாலிய மற்றும் சினிமாக்களை அக்கௌவேறு ஆணிவேராக அலசி விமர்சனங்களை எழுதிக்கொண்டிருந்தவர்கள்.இவர்களின் கட்டுரைகளை தாங்கி பரபரப்பை உருவாக்கிய சினிமா எனும் இதழின் ஆசிரியர் வேறுயாருமில்லை இத்தாலியின் சர்வாதிகாரியான பெனிட்டோ முசோலினி என்பதை கடந்த இதழ் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன்,இதில் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டனியோனியும் லூச்சியானா விஸ்கோண்டியும் பிரெஞ்சு இயக்குனரான ரெனுவாரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்கள் .அவர்கள் பணிசெய்துகொண்டிருந்த காலத்திலேயே ரெனுவார் அடுத்து ஒரு ஆங்கில நாவலை திரைப்ப்டமாக எடுக்கலாம் என முடிவெடுத்திருந்தார்.ஜேம்ஸ் கேய்ன் என்பவர் எழுதிய் ’’தி போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங் ட்வைஸ்” the postman always ring twice எனும் அந்த நாவல் கடைசி நிமிடத்தில் அவரால் எடுக்க முடியாமல் போக அவரது உதவியாளராக இருந்த லூசியானா விஸ்கோண்டி அந்த நாவலை ”ஓசெஸியானே” ossessione எனும் தலைப்பில் அக்கதையை படமாக எடுத்து 1945ல் வெளியிட்டிருந்தார். இத்திரைப்பட்த்தின் அணுகுமுறை பின்புலம் கட்டமைவு நடிகர்நடிகைகளை பயன்படுத்திய விதம் தொழிநுடப நேர்த்தி ஆகியவற்றை வைத்து பார்க்கிற போது இதுவே இத்தாலிய நியோரியலைஸத்தின் முதல் படம் என விமர்சகர்கள் இன்று கருதினாலும் இப்ப்டம் நாவலசிரியரின் திரைப்படமாக்க உரிமை ப்ரச்னையில் ஒருசிக்கல் எழுந்து வெளிநாடுகளுக்கு இப்படம் திரையிடும் வாய்ப்பை இழந்தது.

இச்சூழலில்தான் இன்று உலகம் முழுக்க நியோரியலைஸ அலையின் முதல் படமாக கருதப்படும் ரோபடோ ரோஸலினியின் ரோம் ஒபன் தி சிட்டி 1946ல் கென்ஸ் திரைப்ப்டவிழாவில் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை தட்டிசென்றிருந்தது.இதுவரை பார்க்காத ஒரு புதுவகை எதார்த்ததை திரையில் காண்பித்ததாக விமர்சகர்கள் புகழ்ந்தனர்.
1944 ல் நாஜிபடையினரால் கைப்பற்றப்பட்ட ரோம் நகரை பற்ரியது இத்திரைப்படம் இக்காலத்தில் ஹிடலர் ரோம் ஒரு திறந்த நகரம் என அழைத்ததை வைத்து இத்த்லைப்பை வைத்ததாக இயக்குனர் ரோபர்ட்டா ரோஸாலினி கூறினார். போர் நடந்துகொண்டிருக்கும் போதே படப்பிடிப்பையும் நடத்தியதால் படத்தின் பின்புலன் கட்டமைவு இயக்குனரின் முயற்சியை தாண்டிய எதார்த்ததை பிரதிபலித்தது. மேலும் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் நிதி நெருக்கடியை சமாளிக்க வேறுவழியே இல்லாமல் ரோஸலினி மிகவும் மலிவுவிலையில் கிடைக்க கூடிய தரக்குறைவான படச்சுருள்களை வாங்கி ஒளிப்பதிவுக்கு பயன்படுத்தியிருந்தார். இதன் காரணமாக திரைப்படத்தின் நடுவே விழுந்த கோடுகள் அச்சு அசல் ஒரு டாக்குமண்டரி படம் பார்ப்பது போன்ற உணர்வை பார்வையாளர்களுக்கு உண்டாக்கியிருந்தது.மேலும் படத்தில் நடித்த நடிகர்கள் அவசர அவசரமாக .அங்கே வேடிக்கை பார்க்க வந்தவர்களை கொண்டே தேர்ந்தெடுக்கப்பட்டு நடிக்கவைக்கப்பட்டனர்.மேலும் காட்சிகள் ஒளிப்பதிவு போன்றவை இதுவரை பார்த்திராத புது அனுபவத்தை பார்வையளனுக்குள் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருந்தன .வசனங்கள் இயல்பாகவும் காட்சி மைப்புகள் உணர்ச்சி மேலிடும் வகையிலும் அமைந்திருந்தது இப்படத்தின் சிறப்பு. இத்திரைப்படத்தில் உத்வி இயக்குனராக இன்னொரு இத்தலிய மேதை பணிபுரிந்தார்.அவர் பெயர் பெட்ரிக்கோ பெலினி
மட்டுமல்லாமல் ரோஸாலினியின் அடுத்தபடமான பைசா திரைப்படத்துக்கான திரைக்கதையை பெலினியும் இணைந்து எழுதியிருந்தார்.

இந்த இத்தாலிய நியோரியலஸ அலையில் ரோஸாலினிக்கு அடுத்ததாக வந்து உலக சினிமாவை .வியக்க வைத்தவர் விட்டோரியா டி சிகா,. 1949ல் வெளியான் பைசைக்கிள் தீவ்ஸ் உருவாக்கிய பாதிப்பும் ஏற்படுத்திய தாக்கமும் இன்றுவரை ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.இன்றும் உலகின் ஏதாவது ஒரு தெருவில் ஏதாவது ஒரு வீட்டில் புதிதாக யாரொ ஒரு இளைஞன் இப்படத்தின் தாக்குதலில் பாரம் தாளத இதயத்துடன் தவித்துக்கொண்டிருப்பான் . மொழி பேதமில்லாமல் உலகின் அனைத்து இதயங்களிலும் வாழ்வின் மீதான் ஈரத்தை ஊற்றெடுக்க செய்த திரைப்படம் பைசைக்கிள் தீவ்ஸ், உலகின் த்லைசிறந்த பத்து படங்களில் ஒன்றாக இன்றுவரை விமர்சகர்களின் பட்டியலில் தவிர்க்க முடியாமல் சிக்கும் படம் பைசைக்கிள் தீவ்ஸ்

1902ல் இத்தாலியின் சோவா நகரில் பிறந்த டி சிகா துவக்ககாலத்தில் இத்தாலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவந்தவர்.புகழ்பெற்ற ஆலிவுட் நடிகை சோபியாலாரனுடன் கூட அவ்ர் நடித்திருக்கிறார்.இவர் 1933ல் மனைவியுடன் இஐந்து திரைப்ப்ட நிறுவன்ம் ஒன்றை துவக்கினார்.துவக்க காலத்தில் நகைச்சுவை படங்களாக எடுத்திருந்த இவர் இரண்டம் உலகபோர் முடிவடைந்த சமயத்தில் நண்பர் ஒருவரை சந்திக்க அந்த சந்திப்பு அவரது வாழ்வில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திதந்தது.அன்று அவர் சந்தித்த நப்ர் நியோரியலைஸ யுகத்தின் மற்றொரு பிதா மகனான செஸாரெ ஸபாட்டினி

http://www.ajayanbala.in

பை சைக்கிள் தீவ்ஸ் அகமும் புறமும்-உலக சினிமா வரலாறு 14


நல்ல சினிமா எது என்பதில் உலகம் மூழுக்க ஆயிரம் விவாதங்கள் தொட்ர்ந்து நடைபெற்றுவருகிறது.

ஒவ்வொருவர் பார்வையிலும் நல்ல சினிமாவுக்கு புதுபுது இலக்கணங்கள் காலம் தோறும் எழுதப்பட்டு வருகின்றன. ஒருவர் வாழ்வை படம் பிடிப்பது நல்ல சினிமா என்றால் இன்னொருவர் நல்ல கதையை சொல்வது நல்ல சினிமா என்றும் இன்னும் நல்ல காட்சி அனுபவத்தை தருவது, தொழில்நுட்பத்தில் செறிவாக வடிவம் கொண்டிருப்பது,
காட்சி மொழி ஆளுமையை உள்ளடக்கியது காலத்தின் முகத்தை அப்படியே பிரதி எடுத்துதருவது என அவரவர் தமது ரசனைக்கு ஏற்ப நல்ல சினிமாவுக்கு விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அதே சமயம் இவர்கள் அனைவரிடமும் உலகின் தலைசிறந்த சினிமாக்கள் பத்தை பட்டியலிடச்சொன்னால் அனைவரது பட்டியலில்லும் இடம்பெறக்கூடிய ஒரே படமாக பைசைக்கிள் தீவ்ஸ் இடம் பிடிக்கும். இதுதான் அப்படத்தின் உலகபெருமைக்கு முக்கிய காரணம்.

இரண்டாம் உலகபோருக்கு பிறகு வறுமையிலும் வேலையில்லா திண்டாட்டத்திலுமாக சிக்கி தவித்த இத்தாலிதான் இதன்களம். சைக்கிளை திருட்டுகொடுக்கும் ஒருவனது ஒருநாள் பொழுதை சொல்லும் கதை இறுதியில் வேறுவழியில்லாமல் அவனே திருடனாக மாறும் துர்ப்பாக்கியத்தை , வாழ்வின் அவலத்தை நம்முன் இறுதியில் நிறுத்துகிறது. இந்த எளிமையான, உலகின் எல்லா இண்டு இடுக்கிற்கும் பொருந்தக்கூடிய கதைதான் படத்தின் மிகச்சிறப்பே.உலகின் எந்த மொழி பேசினாலும் எந்த கலாச்சாரத்தில்வாழ்ந்தாலும் மனித மனம் ஒன்று என்பதை நமக்கு உணர்த்தும் இந்தகதையின் எதார்ததமும் காவியத்தனமையும் படம் முழுக்க கொண்டுவர இயக்குனர் கொண்டுவர முயற்சித்த்தௌ தான் இப்படத்தின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. நியோரியலிஸ அலையின் முக்கிய அச்சாணியாக கருதப்படும் திரைக்கதை ஆசிரியர் செஸாரே ஜவாட்டினிதான் இப்படத்திற்கும் காதாசிரியர். மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா வுடன் இணைந்து ஜவாட்டினி திரைக்கதையிலும் தன்பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.இருவரும் ஒத்துபோனதற்கு அடிப்படை காரணம் இருவருமே தீவிர மார்க்சிய சிந்தனையாளர்கள். அன்று 1947களில் இத்தாலியின் நிலைமை மிக மோசமானதாக இருந்தது. அப்போதுதான் இரண்டாம் உலகபோர் நடந்து முடிந்த நிலை.முசோலினியின் தவறான போக்குகளால் தடுமாறிக்கிடந்த நாட்டில் பரவலாக அனைவரிடமும் மார்க்சிய சிந்தனை வலுப்பெற துவங்கியது. இதற்குமுன் கம்யூனிஸ்டுகளை தன் கறுப்பு சட்டை படையால் முசோலினி அடக்கி ஒடுக்கியிருந்த் காரணத்தால் அறிவார்ந்த சமூகத்தினரிடம் கம்யூனிஸ சிந்தனைகள் அதிகமாக காணப்பட்டன.இவர்கள்தான் நியோரியலிஸ அலை உருவானதற்கே காரணம்.அதிலும் கதாசிரியரான் ஜவாட்டினி தீவிர மார்க்சிய ஆதரவாளர் இதனால்தான் தன் கதைகள் அனைத்திலும் மக்கள் அரசியலை தூக்கலாக உயர்த்தி பிடித்தார்.பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் கதை அவருக்கு கற்பனையில் தோன்றியதே தனிக்கதை.

ஒருநாள் பொழுது போகாத மாலைபொழுதில் ரோமன் கஃபே எனும் ஓட்டல் வாசலில் அமர்ந்தபடி காபி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜவாட்டினி அப்போது ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க சைக்கிளை திருடிக்கொண்டு ஓடும் ஒரு இளைஞனை ஒரு கூட்டம் துரத்தி பிடிப்பதை பார்த்தார். திருடியவனின் முகம் மிகவும் பரிதாபமானதாக இருந்தது. அன்றுகாலையில்தான் தன் சைக்கிள் திருடுபோய்விட்டதாகவும் தன் ஒரே சொத்து அதுதான் என்றும் எங்கெங்கோ தெடி அலைந்தும் கிடைக்காத காரணத்தால் வீட்டுக்கு போனால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என பயந்து சைக்கிளை திருடியதாகவும் கூறி கூட்டத்தில் அழுதிருக்கிறான்.அதன் பிறகு அனைவரும் அவனை விட்டு விடுகின்றனர்.
இத்னை பார்த்த பாதிப்பில் ஜவாட்டினிக்கு மின்னல் வெட்டாக மூளையில் ஒருகதை ஒன்று தோன்ற அந்த நிமிடத்தில்தான் உலகசினிமாவின் வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. உஅடனே வீட்டுக்கு அவசரமாக சென்று அக்கதையை எழுத உட்கார்ந்த ஜவாட்டினி நான்கே நாட்களில் தன் பங்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். உடனே நெடுநாட்களாக கதையை கேட்டுக்கொண்டிருந்த இவரது நண்பரும் இயக்குனருமான டிசிகாவிடம் இக்கதையை கொடுத்திருக்கிறார். டி சிகா கதை பிடித்திருந்தாலும் அதில் முழு திருப்தியுறாமல் இவரது கதையை தன் நண்பரான லூயி பர்டோனியிடம் எடுத்துக்கூறி இத்னை நாவலாக எழுதிதரும்படி கேட்க அவரும் எழுதிகொடுத்தபின் ஒரெஸ்டொ ட்யோன்கொலி,சுசோ செச்சிடி,கெரார்டோகெரார்டி,ஜெரார்டோ கியூரரிடி
போன்றோருடன் இணைந்து திரைக்கதையை எழுதினார்.இருந்தும் தான் நினைத்த இறுதிவடிவம் வடிவம் கிடைக்காத காரணத்தால் மீண்டும் ஜெவாட்டினியிடம் திரைக்கதையை கொடுத்து மீண்டும் ஒழுங்கு படுத்திதரக் கூற அதன் பிறகு உருவான இறுதிவடிவத்தை வைத்துக்கொண்டு டிசிகா பல தயாரிப்பாளர்களிடம் ஏறி இறங்கினார். .நாடே வறுமையில் மூச்சுதிணறிக்கொண்டிருந்த போது படம் எடுப்பது என்பதே பெரிய காரியமாக இருந்தது.இறுதியில் அமெரிக்க தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை எடுக்க ஒத்துக்கொண்டார். உடன் ஒரு நிபந்தனை ஒன்றையும் வைத்தார். நாயகன் வேடத்துக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான கேரி கிராண்டை போடவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.ஆனால் டி சிகா மறுத்துவிட்டார். காரணம் நடசத்திரங்கள் தான் சொல்ல வரும் உணமைக்கு பொருந்த மாட்டார்கள் என எண்ணிணார்.
படத்தின் பட்ஜெட்டோ குறைவு .பார்த்தார் நண்பர் ஒருவர் .அவ்ரே தயாரிக்க முன்வந்தார்..தெருவில் போய்க்கொண்டிருந்த வேலையில்லாத சாதாரண ஆலைதொழிலாளியை அழைத்தார். டி சிகா. அவன் பெயர் லேம்ப்ரட்டோ மேக்னியோனி Lamberto Maggiorani அவனது முகம் நாயகனுக்கு கனகச்சிதமாக இருந்தது.அடுத்ததாக படத்தில் படத்தில் அடுத்த முக்கிய பாத்திரம் ரிசியின் ஏழுவயது மகன் ப்ரூனோ படு சுட்டியான பாத்திரம் ,இவனையும் தெர்வில் விளையாடிக்கொண்டிருந்த போது வளைத்து பிடித்தார். அவன்பெயர் என்ஸோ ஸ்டேலியோ Enzo Staiolaபின் இதர நடிகநடிகையர்களையும் இப்படியாக தேர்ந்தெடுத்தார். உடைகள் அனைத்தும் அவர்களுடையதே .திரைக்கதையில்காட்சிகள் ரோம் நகரின் எந்த முக்கிய பகுதிகளில் இடம்பெறுவதாக சித்தரிக்கப்படிருந்ததோ அதே இடங்களுக்கு கேமராவை கொண்டுபோனார். அவரோ படத்தின் செலவை குறைத்தார் ஆனால் தரமோ உயர்ந்துகொண்டே இருந்தது.
மூன்றுமாதங்கள் இடைவிடாத படப்பிடிப்பு முடிந்து இறுதியில் படம் நவம்பர் 24 1948அன்று இத்தாலியில் வெளியாகியது. இப்படத்திற்கு முன்பே ரோஸலினியின் ரோம் ஓபன் தி சிட்டி நியோரியலிஸ அலையை துவக்கியிருந்தாலும் பை சைக்கிள் தீவ்ஸின் வெற்றி அதனை உலகம் முழுக்க கொண்டு போனது. எதார்த்தம் என்பது படத்தைன் தோற்றத்தில் மட்டுமல்லாது படத்தின் சமூக பொருளாதார பின்புலங்கள் அனைத்திலுமாக காட்டியிருந்த விதம் தான் இதன் தனித்தனமையை நிரூபிக்க கூடியதாக இருந்தது..

வேலையில்லாமல் வறுமையில் வாடும் அந்த காலகட்டத்து இத்தாலியின் சூழலை தன் துவக்க காட்சியில் காண்பிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம், மற்றும் நயகனது குடியிருப்பு வீடு ,வீட்டின் அறை,சைக்கிள் கடை,காவல்நிலையம் .குறி சொல்லுபவளின் வீடு.,மாதாகோயில் உணவு விடுதி திருடியவனின் வீடு,அவனது குடியிருப்பை சார்ந்த மனிதர்கள் என தொடர்ந்து காணப்படும் ஒவ்வொரு இடத்திலும் காட்சியும் காட்சியில் இடம்பெறும் மாந்தர்களும் நம்மை அநதந்த உலகத்திற்குள் கொண்டுசென்றுவிடுகின்றனர். காட்சி எந்த களத்துக்குள் நுழைந்தாலும் அங்கிருக்கும் அரசியல்கள் பின்புலத்தின் எதார்த்த தனமைக்கு வலு சேர்க்கின்றன.
படத்தில் குண்டுமணியளவுக்கு யாரேனும் தலைக்காட்டினால கூட அவர்கள் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். சாத்தியப்பட்ட அளவில் அவர்களின் உலகத்தை சற்றே திறந்து காட்டிவிடுகிறார் இயக்குனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபத்திரங்களின் உளவியல் எதார்த்ததை வைத்துக்கொண்டு மிகபெரிய ஆய்வையே நாம் மேற்கொள்ளமுடியும். அதிலும் சைக்கிளை காணாமல் தந்தையுடன் தெருதெருவாக அலையும் ரிசியின் மகன் ப்ரூனோ வின் முகபாவங்களும் உணர்ச்சியை அவன் வெளிப்படுத்தியிருந்தவிதமும் தேர்ந்த நடிகர்கள் அனைவரையும் விஞ்சி நிற்ககூடியது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உளவியல் முரண்பாடுகளை ஆழமான வாசிப்புக்குட்படுத்தி அதனையே சுவாரசியத்துக்கான களமாகவும் பயன்படுத்திருக்கும் திரைக்கதையின் தொழில் நுட்பம் கூர்ந்த அவதானிப்பின் மூலாமாக மட்டுமே நம்மால் உணரமுடியும்.திரைக்கதையை முழுவதுமாக உள்வாங்கிய ஒளிப்பதிவு கோணங்கள் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்குக்கின்றன.படத்தொகுப்பை உள்வாங்கியபடி முன்பே எழுதப்பட்ட திரைக்கதை,ஒளிப்பதிவாளரின் கோணங்களுக்கு புதிய அர்த்தம் தரும் படத்தொகுப்பு,படத்தொகுப்பினுடைய வேகத்துக்கு அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்திசைவான திரைக்கதையின் மவுனங்களை மீட்டெடுக்கும் இசைக்கோர்வை
இசைக்கோர்வைக்கு தொந்தரவில்லாத சப்த சேர்க்கை போன்றவைகளுக்கு இப்படத்தை மிகச்சிறந்த உதாரணமாக கொள்ள முடியும்.
.

1948ல் திரைப்படவிழாக்களில் பங்கேற்ற இப்பட்டம் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அசர வைததது. இத்த்னை நேர்த்தியான் தொழில் நுடபத்துடன் இதுவரை உலக சினிமா வரலாற்றில் திரைப்படம் எதுவும் வந்ததில்லை என விமர்சகர்கள் புகழ்ந்து எழுதினர்.1949ல் அமெரிக்காவின் ஆஸ்கார் விருது சிறந்த வெளிநாட்டு படமாக இத்னை தேர்ந்தெடுத்துகவுரவிதது.
இந்த படத்தின் பாதிப்பில் உலகம் மூழ்க்க ஓவ்வொருநாளும் பல இயக்குனரகளும் பல திரைப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன.லண்டன் சென்ற போது இப்படத்தை பார்க்க நேரிட்ட நம் சத்யஜித் ரே அது உருவாக்கிய தாக்கத்தில் இந்தியாவுக்கு கப்பலில் திரும்ப வந்து இறங்குவதற்குள் தன் முதல் படமான பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையை எழுதிவிட்டார் என கூறுவார்கள்.இந்த படத்தை சார்லின் சாப்ளின் எனும் மேதைக்கு தன் எளிய சமர்ப்பணம் என அறிவித்தார் இயக்குனர். சிறுவயதில் தான் பார்த்த அவருடைய கிட் திரைப்படம்தான் இப்படத்திற்கு பின்னாலிருந்து தன்னை இயக்கியிருப்பதாக டி சிகா வெளிப்படையாக கூறினார்.



ப்டத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா 1902 ல் இத்தாலியின் சோவா நகரில் பிறந்தவர். சினிமாவில் நடிகராக துவங்கிய இவரது வாழ்க்கை சடசடவென ஒரு உயரத்துக்கு சென்றது.சோபியா லாரன், ஜீனா லோலா பிரிகிடா போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களுடன் நடித்த்வர் 1940ல் ரோஸ் ஸ்கேர்லட் படத்தின் மூலமாக இயக்குனராக பரிணமித்தவர்.
ஷூ ஷைன் Shoeshine,1946, மிராக்கிள் இன் மிலன் Miracle in Milan 1951 உம்பர்ட்டோ டி 1952 போன்றவை இவரது மிகச்சிரந்த படங்http://www.ajayanbala.in

லூசியோனோ விஸ்கோண்டி: நியோ ரியலிசத்தின் இறுதிக்காலங்களுடன்


http://www.ajayanbala.in


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 15
நியோரியலிஸம் என்பது திரையில் பெண்களுக்கு பதிலாக ஆண்கள் அழுதுவடிந்த காலம் என சிலர் கிண்டலாக கூறுவதுண்டு. உண்மையில் இக்கால படங்களில் பெரும்பாலும் வறுமை தான் மையபாத்திரமாக விளங்கியது. ரோபர்ட்டோ ரோஸலினி ,விட்டோர்ரியா டிசிக்காவை போல இக்காலத்தில் புகழ்பெற்ற மற்றொரு இயக்குனர் லூச்சியானோ விஸ்காண்டி.

1906 நவம்பர் 2ம் நாள் வடக்கு இத்தாலியில் மிலன் நகரில் மிகவசதியான பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த விஸ்காண்டியின் வாழ்க்கைக்கு தலைகீழானது அவர் இயக்கிய திரைப்படங்கள் . தன் வாழ்நாள் முழுக்க எளியமக்களையும் உழைக்கும் மக்களது வாழ்வையும் பின்புலனாக கொண்டு திரைப்படங்களாக ஆக்கிதந்த விஸ்காண்டியின் வாழ்வு சற்று ஆச்சர்யமூட்டக்கூடியது. இப்படியாக அவரது வாழ்வுக்கும் படைப்புக்கும் இடையிலான இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் அவர் சார்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் .

விஸ்காண்டியின் தாயாருக்கும் எல்லாசீமாட்டிகளையும் போல அலாதி இசை ப்ரியம். பத்துவயதிலேயே மகனுக்கு செலோ வாத்தியத்தை கற்று தந்துவிட்டார். பிற்பாடு மகன் மிகபெரிய இசை மேதை ஆவான் என எதிர்பார்த்து பதின் வயதில் அவனுக்கு இத்தாலிய இசையுலகில் புகழ்பெற்று விளங்கிய மேதைகளான டோஸ்கோணி, ப்யூசினி போன்றவர்களோடு அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் அவர்களோ அவரது மகனுக்கு இசையோடு சேர்த்து கம்யூனிசத்தையும் ஊட்டிவிட்டனர்.அதுவரை பணக்காரர்களின் வாழ்க்கைக்குள் மட்டுமே சுற்றிவந்த விஸ்கோண்டியின் கலைமனம் சாதாரண மக்களையும் கவனிக்க துவங்கியது. இயல்பில் இசை நாடகம் ஓபரா என பல்வேறு துறைகளில் திறமை பெற்றிருந்த விஸ் கோண்டிக்கு முப்பதாவது வயதில்தான் சினிமாவின் பால் ஈர்ப்பு ஏற்படத்துவங்கியது. தன் கலையுணர்வை மக்களிடம் கொண்டு செல்ல சினிமாவே சிறந்தவழி என முடிவு செய்தார். கோக்கொ எனும் தோழி மூலம் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ரெனுவாரிடம் Partie de campagne (1936),எனும் திரைப்பட்த்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார். சில படங்களில் பணிபுரிந்தபின் ஹாலிவுட் சென்று வந்து திரைப்பட இயக்கத்தின் புதிய அணுகுமுறைகளை கற்று திரும்பினார். அந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு 1942ல் அப்செஷன் எனும் முதல் படத்தை இயக்க துவங்கினார். ஜேம்ஸ் கேய்ன் எழுதிய The Postman Always Rings Twice,எனும் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது இத்திரைப்படம். இத்திரைப்படம் அப்போதைய பாஸிஸ்ட் அரசாங்கத்தின் கடும் தணிக்கைக்குபிறகு வெளியாகியது . இத்தாலியில் பெரிய வெற்றியைபெற்று விஸ்காண்டிய்யை நல்ல இயக்குனராக அறிமுகப்படுத்தியது.இக்காலகட்டத்தில் தன் வீட்டை கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ரகசியநடவடிக்கைகளுக்காக பயன்படுத்த அனுமதி அளித்த காரணத்தால் அக்காலத்தில் இத்தாலியை ஆகரமித்திருந்த ஜெர்மானியர்களின் நாஜிப்படையினரால 1944ல் சிறைக்கு அனுபப்பட்டார். இக்காலகடத்தில் தான்பட்ட வேதனைகளூக்கு பழிதீர்க்கும் விதமாக 1945ல் ஜெர்மன் ஆக்ரமிப்பை கண்டிக்கும் விதமாக Days of Glory.எனும் டாக்குமண்டரி படத்தை இயக்கி வெளியிட்டு பலரது கவனத்தை தன் வசம் குவியவைத்தார். இதன் காரணமாக இத்தாலியில் போருக்குபின் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் அரசாங்கம் அவரிடம் மீனவர்கள், சுரங்க தொழிலாளர்கள் ,மற்றும் விவசாயிகள் ஆகிய மூன்று உழைக்கும் வர்க்கத்தினரது வாழ்வை பின்னணியாக கொண்டு மூன்று டாக்குமண்டரி படங்களை இயக்ககோரியிருந்தது. இதனடிப்படையில் முழுக்க மீனவர்களது வாழ்வை பின்னணியாக கொண்டு ஒருபடத்தை இயக்க தயாரான விஸ்கோண்டி அவர்களது வாழ்வை புரிந்துகொள்ளவேண்டி சில நூல்களை புரட்டினார் அப்போது அவர்வசம் கிடைத்தது ஒரு நாவல் Giovanni Verga's the 1881 The house by the Medlar Tree

இந்ந்நாவலை ஒரே மூச்சில்படித்து முடித்த விஸ்கோண்டிதன் டாக்குமண்டரி திட்டத்தை கைவிட்டு அந்நாவலை அப்படியே முழூநீள படமாக்குவது என முடிவு செய்து களத்தில் இறங்கினார், நாவலில் இடம்பெற்ற அதே மீனவகிராமத்துக்கு சென்று வழக்கமான நியோரியலிஸ படங்களை போல சினிமாவுக்கு முன்பின் அறிமுகமில்லாத நடிகர்களை தேர்வுசெய்து படப்பிடிப்புக்கு இறங்கினார்.

கதை இதுதான் இத்தாலியின் சிசிலிநகரை ஒட்டிய ஒருமீனவ கிராமத்தில் ஏழைகுடும்பம் ஒன்று நான்கு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் அலைகடல்வாழவை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிறது..வீட்டின் மூத்தமகனுக்கு ஒருநாள் திடீர் யோச்னை .இன்னும் எத்த்னை நாள்தான் நாமும் இப்படியே யாரோ ஒரு முத்லாளிக்கு படகு ஓட்டி மீன்பிடித்து கொடுப்பது. நாமும் என்றுதான் முதலாளிஆகி கைநிறைய சம்பாதிப்பது என கேள்வி எழுகிறது. அதன் படி உடனடியாக வீட்டில் உள்ளவர்களிடம் தன் கனவை சொல்லி சம்மதமும் பெறுகிறான். வங்கியில் கடன் உதவியும் கிடைக்கிறது. முதலாளிஆகப்போகிறோம் என்பதற்காகவே மேலும் பணம் செலவு செய்து பணக்காரத்தனத்தை அதிகபடுத்தி மற்றவர்களுக்கு பொறாமையுண்டாகும் படி நடந்துகொள்கின்றனர்.ஊரே இவர்களது இந்த திடீர் மாற்றத்தை கண்டு பொறாமை கொள்கிறது. சொந்தபடகும் வருகிறது. கூலிவேலைசெய்யும் இதர தொழிலாளர்களிடமிருந்து விலகி இப்படி திடீர் முதலாளி ஆகிவிட்ட நாயகன் குடும்பத்தினருக்குள் பண்க்கார திமிர் கூடுகிறது. தங்கை தன் பழைய காதலனை மறந்து தன் இப்போதைய தகுதிக்கு ஏற்ப புதிய காதலனை தேடுகிறாள்
இந்நிலையில் ஒருநாள்......யாரும் எதிர்பாராத விதமாக கப்பல் புயலில்சிக்கி உடைகிறது.அதிர்ச்சி வெள்ளம் இவர்களது புதிய வீட்டுக்குள் அலையென புரண்டு வருகிறது. ஒரே நளில் பணக்கார வாழ்க்கை தலைகீழாக மாறி மீண்டும் படிப்படியாக பழைய வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். காலம் அவர்கள் மீது வரைந்த கோலம் காரணாமாக துக்கம் அவர்களை சூழ்கிறது மீண்டும் இதர தொழிலாளவர்க்கத்துடன் இணைந்து வேலைக்கு செல்கின்றனர்.

. La terra trema எனும் தலைப்பில் வெளியான இத்திரைப்படம்
உலகம் முழுக்க மீனவர்களதுவாழ்வு ஒன்றுதான் என்பதை நமக்கு ஆழமாக விவரிக்கிறது. 1948ல் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் ப்ரிக்ஸ் தங்க பரிசு பெற்ற இப்படம் இத்தாலி மீனவர்களதுவழ்வின் சிறந்த ஆவணமாக இன்றும் விளங்குக்கிறது. இதே போல 1960ல் இவர் இயக்கிய ரோக்கோ அண்ட் ப்ரதர்ஸ் திரைப்படம் கிராமத்து விவசாய குடும்பத்தை சேர்ந்த நான்கு சகோதரர்கள் பிழைப்புதேடி நகரத்துக்கு வந்து படும் அவல வாழ்வை நம்முன் விவரிக்கிறது.கண்வனை இழந்ததாய் பிள்ளைகளை வைத்துக்கொண்டு கரையேற்ற முனையும் வாழ்வு நம் இந்திய குடும்பங்களை நம் அக்கம்பக்கம் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே தோலுரித்துக்காட்டுவதாக இருக்கிறது.இவையல்லாமல் இவர்இயக்கியத்தில் 1951; The Most Beautiful 1953; We the Women 1963; The Leopard போன்ற படங்களும் விஸ்காண்டியின் அழகியல்கலந்த எதார்த்தபடைப்புகளுக்கு மிகச்சிறந்த உதாராணங்களாக விளங்ககுகின்றன.. 1967ல் புகழ்பெற்ற நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ எழுதிய அந்நியன் நாவலை திரைப்பட வடிவமாக்கினார் .1969ல் இவர் இயக்கத்தில்வெளியான The Damned,திரைப்படத்திற்க்காக ஆஸ்கார் கமிட்டியின் சிறந்த திரைக்கதைக்கான விருதயும் பெற்றார்

ஒருநாளைக்கு கிட்டதட்ட 75 சிகரட்டுகளை தொடர்ந்து பிடிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டிருந்த விஸ்கோண்டி 1976ல் உலகவாழ்க்கைக்கு முடிவுரை எழுதிக்கொண்டார். விஸ்காண்டியின் திரைப்படங்களில் அவரது சமகால நியோரியலிஸ்ட்டுகளான டிசிகா மற்ரும் ரோஸலினி ஆகியோரது படங்களில் காணப்பட்ட அரசியல் நுண்ணர்வுகள் புறசித்தரிப்புகள் ஆகியவை காண்ப்படாவிட்டாலும் வாழ்வை அச்சு அசலாக அப்படியே காண்பித்து பார்வையாளனுக்குள் படம்விரித்து ஒருநாவலின் உலகத்தை அவனுக்குள் சிருஷ்டித்தன.என்னதான் திரைப்படங்களில் இவர் ஏழை மக்களது அல்லது உழைக்கும் மக்களது வாழ்வை சிததரித்தாலும் பழக்கமாகிப்போன பணக்கார சுகபோகத்தைவிட்டு அவரது வாழ்வு இம்மியளவும் நகராதது குறித்து பலரும் இவரை விமர்சித்துள்ளனர்.

போருக்குபிறகு மெல்ல இத்தாலி தன் வறுமைநிலையிலிருந்து மாறிய போது சினிமாவும் மாற துவங்கியது.மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தியடைய துவங்கிய காரணத்தால் இப்போது மற்றவர்களை விட தம்மை உயர்த்திக்காட்டுவதில் ஆர்வமாக இருந்தனர். நல்ல ஆடைகளோடு நறுமணங்களை உடலுக்கு பூசுவதில் ஆர்வம் காட்டினர். வார்பிய்ந்த செருப்புக்களை தூக்கி எறிந்துவிட்டு குதிகாலை உயர்த்திக்காட்டும் நாகரீக செருப்புகளை அதிக்கபடியான பணம் கொடுத்து வாங்கி மகிழ்ந்து கொண்டையை தடவிவிட்டபடி சாலையில் உலாவரத்துவங்கினர்.இப்படியான மனோநிலையில் வறுமைய்யை சித்தரிக்கும் நியோரியலிஸ படங்களின் சுவரொட்டிகளை பார்த்தால் முகத்தை திருப்பிக்கொண்டனர். கலாரசனை இயல்பாக அழகுணர்ச்சிய்யை நாடிப்போனது. இதனாலேயே நியோரியலிஸ காலத்தின் பிதாமகன்களுள் ஒருவரான ரோஸலினி அப்போது புதிதாக வந்த ஊடகமான தொலைக்காட்சியின் பக்கம் தன் பாதைய்யை திருப்பிக்கொண்டார். இன்னொரு பிதாவான டி சிகாவோ கமர்ஷியல் படங்களில் தீவிரமாக கவனம் செலுத்ததுவங்கினார். மூன்றாமவரான விஸ்கோண்டிமட்டும்தான் இக்காலகடத்தில் தன்னிடமிருந்த கொஞ்ச நஞ்சமிருந்த அழகுணர்ச்சிய்யை வைத்துக்கொண்டு தப்பிப்பிழைத்தார். தொடர்ந்து எதார்த்ததோடு அழகியலை துக்கலாக கையாண்டு தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டார்.

என்னதான் 1950களில் இத்தாலியில் உருவான நியோரியலிஸத்தின் அலை தன் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தாலும் அப்போதுதான் உலகம் முழுக்க அதுதன் பாதிப்பை நிகழ்த்த ஆரம்பித்திருந்தது.பல்வேறுநாடுகளில்
கலாரசனைமிக்க இளம் இயக்குனர்கள் பலர் மேற்சொன்ன இயக்குனர்களின் படங்களை கண்னீர் வழியதிரும்ப திரும்ப பார்த்தனர். மைக்கேலெஞ்சலோ ஆண்டோனியோனி ,பவுலோ ப்ஸோலினி, பிரன்சிஸ்கோ ரோஸி ,பெட்ரிகோ பெலினி ,இங்க்மர் பெர்க்மன் , சத்யஜித்ரே,கிலோ போண்டோர்கோவா,பெர்னார்டோ பெர்டலூசிஎன உலகெங்கிலும் பல இளைஞர்களின் எதிர்காலத்தையே இத்திரைப்படங்கள் மாற்றி எழுததுவங்கியிருந்த அதே நேரம் இத்தாலிதன் முகத்தை முழுவதுமாக மாற்றிக்கொண்டிருந்தது.
தொடரும்

சத்யஜித்ரே: இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல்

உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம்
17




கல்கத்தாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிரம்ம சமாஜம் தீவிரமாக இயங்கிவந்த போது அத்ற்காக த்ன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவருக்கு அபாரமான கலை ஆற்றல். எழுத்துஇலக்கியம் ஓவியம் வானசாஸ்திரம் என பலதுறையில் சிறந்து விளங்கினார். ஆனாலும் அவரால் த்ன் திறமைக்கேற்ற புகழையோ அங்க்கீகாரத்தையோ அடையமுடியவில்லை. அவர் பெயர் உபெந்திரகிஷோர் தன்னால் நிறைவேற்றமுடியாமல் போன தன் கனவை மகனாவது நிறைவேற்றுவான் என எண்ணிண்னார். அவரது மகன் சுகுமார் ரே வும் தந்தைய்யை போல அபாரமான கலைஆற்றல் கொண்டவராகத்தான் இருந்தார். ஆனாலும் என்ன சாபக்கேடு அவராலும் தன் திறமைக்கேற்ற புகழை ஈட்ட முடியவில்லை. ஆனால் உபேந்திரகிஷோரின் கனவை அவரது மகன் நிறைவேற்றாவிட்டாலும் அவரது பேரன் அவர் கனவை நிறைவேற்றினான்.அந்த பேரனின் பெயர்தான் சத்யஜித் ரே. பின்னளில் புகழ்பெற்ற இயக்குனரானபோது தாத்தாவின் கதை ஒன்றையே திரைக்கதையாக்கி அத்னை படமாகவும் எடுத்து அவரது தாத்தா உபேந்திரகிஷோரின் கனவை நனவாக்கினார்.மட்டுமல்லாமல் தனது தந்தை சுகுமார் ரேவை பற்றியும் ஒரு ஆவண்ப்பட்த்தையும் எடுத்து அவருக்கு புகழஞ்சலி சேர்த்திருக்கிறார். இப்படி தாத்தா கண்ட கனவையும் அப்பா கண்ட கனவையும் ஒரு சேர ரே நனவாக்குவதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா ..ஒரு பெண் ஆமாம் அவர் ரேவின் தாயார். சுகுமார் ரேவின் மனைவி சுப்ரபா ரே. இத்த்னைக்கும் 1921 மேமாதம் 2ம் தேதி இருவருக்கும் மகனாக ரே பிறந்து மூன்றே வருடத்தில் அவரது அப்பா சுகுமார்ரே இறந்துவிட்ட நிலையில் தனியாளாக மகனை ஒரு கலைஞனாக மாற்றவேண்டும் என ஒரே பிடிவாதமய் இருந்து அத்னை சாதித்து காட்டியவர்தான் சுப்ரபா ரே

சுப்ரபா ரேவுக்கு உண்மையில் கலையின் மீதான் ஈடுபாடு கணவரிடமிருந்து பற்றியதோ அல்லது இயல்பாக இவருக்குள்ளும் ஊறிக்கிடந்ததோ தெரியவில்லை. கணவர் இறந்த நிலையில் கலையும் இலக்கியமும் சுபரபாரேவுக்குள் புதியவாசல்களை திறந்தன. மகனை பின்னாளில் சிறந்த கலைஞனாக உருவாக்கவேண்டும் எண்ணம் கொண்டார். இதன் காரணமாக அன்று வங்க உலகின் பெருமைமிக்க மகாகவியான தாகூரை சந்திக்க சிறுவன் ரேவை இழுத்து சென்றார். பின்னாளில் ரே இச்சம்பவத்தை தன் வாழ்க்கை வரலாற்றில் பதியவைத்துள்ளார். தன் அன்னையின் இலக்கிய ஈடுபாடுதான் தன்னை உலகமறிந்த இயக்குனராக்கியது என அச்சம்பவத்தை குறிப்பிடும்போது கூறியுள்ளார்.

பிற்பாடு பாலிகஞ்ச் ஹைஸ்கூலில் பள்ளிபடிப்பிலும் பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ.பட்டபடிப்பும் முடித்தபின் அவரது அம்மா ஓவியம் மற்றும் நுண்கலை படிக்கும்படி தாகூரின் சாந்தினிகேதனில் இயங்கும் விஸ்வ பாரதி பல்கலைகழகத்தை பரிந்துரைத்தார். ஆனால் ரேவுக்கோ சாந்தினிகேதனில் சேர விருப்பமில்லை. காலமாற்றம் அவருக்குள் உருவாக்கியிருந்த புதிய சிந்தனைகாரணமாக பழமையில் திளைத்த சாந்தினிகேதனை ரே வெறுத்தார். ஆனாலும் அன்னையின் விருப்பத்தை அவரால் தாண்டமுடியவில்லை. சாந்தினிகேதனிலேயே சேர்ந்தார். ஆனால் அவரது எதிர்பாரா அதிர்ஷ்டமாக நந்தலால் போஸ் பினோத் முகர்ஜி போன்ற நவீன பாணி ஓவியர்கள் அங்கு ஆசிரியர்களாக இருந்து அவருக்குள் ஊறிக்கொண்டிருந்த கலைஆற்றலை செழுமைப்படுத்தினர். அவர்களின் மீது கொண்ட அபிமானம் காரணமாகத்தான் பிற்பாடு ரே இவர்களை குறித்து இன்னர் ஐ எனும் ஆவணப்படத்தை இயக்கியிருந்தார்.

ஓவியபடிப்பு முடிந்தகையோடு மாதசம்பள்ம் 80 ரூபாய்க்கு டி.ஜெ கெய்மர் எனும் ஒரு பிரிட்டிஷ் விளம்பர கம்பெனியில் காட்சிபடுத்துபவர் வேலைகிடைத்தது. தொடர்ந்து D.K GUPTA என்பவர் நடத்திவந்த SIGNET PRESS எனும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் அங்கு பதிப்பிக்கப்பட்ட பல்வேறு புத்தகங்களுக்கு அட்டைபடங்களை வரைந்து தந்தார். ஜிம் கார்ப்பட்டின் குமாவும் புலிகள் ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற புத்தகங்களின் அட்டை ரேவின் கைவண்ணத்தால் மிளிர்ந்தன. இச்சமயத்தில்தான் பிபூதி பூஷன் பாந்தோபாத்யாயாவின் பதேர் பாஞ்சாலி நாவல் அவரது மேசைக்குவந்தது. அதனை படித்து அவர் லயித்துக்கொண்டிருந்த அதேநேரத்தில் அவரது வாழ்வில் இன்னொரு முக்கியமான காரியமும் நடந்தது. பிற்பாடு இயக்குனராக பரிணமித்த சித்தானந்த தாஸ் குப்தா என்பவருடன் இணைந்து கலகத்தாவில் திரைப்படசங்கமொன்றையும் ரே துவக்கியிருந்தார். இதன் வழி அவருக்கு உலகசினிமாக்களின் பரிச்சயம் தொடர்ந்து கிடைக்க துவங்கியது. இச்சமயத்தில் அவருக்கு இன்னொருபுதிய வெள்ளைக்கார நண்பர் அவருக்கு அறிமுகமானார்.அவர் ஒரு ராணுவ வீரர். அப்போது இரண்டாம் உலகபோர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காரணத்தால் அமெரிக்கபடைபிரிவிலிருந்து அவரங்கு வந்திருந்தார். நார்மன் கிளார் எனும் நபருக்கும் ரே வுக்குமிடையில் ஒருநட்பு துளிர்க்க இருவரும் சிகரட்டை ஊதிக்கொண்டு கலகத்தா வீதிகளில் உலகசினிமாக்களை பற்றி மணிக்கனக்கில் பேசிக்கொண்டிருந்தனர். நார்மன் கிளார் ரேவுக்கு அப்போது வந்துகொண்டிருந்த அமெரிக்க சினிமாக்களை பற்றி தொடர்ந்து தகவல்களை கொடுத்து ரேவின் அறிவையும் கனவையும் ஊதிபெருக்க செய்தார்.



1949ல் ரேவுக்கு பிஜோய தாஸ் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. இருவருக்கும் சந்தீப் என்ற ஒரு மகன் பிறந்தான். மகன் பிறந்த வேளையில்தான் ரெனுவார் தன் ரிவர் படத்தின் படப்பிடிப்புக்காக கலகத்தா வர ரேவுக்கு அவரோடு பழகவும் அவரது படப்பிடிப்பை பார்க்கவும் வாய்ப்புகிடைத்தது. தொடர் நிகழ்வுகள் காரணமாக அவரது வாழ்க்கை சினிமாவை நோக்கி தீவிரமாக உந்திதள்ளப்பட்டவேளையில்தான் லண்டன் பயணமும் நிகழ்ந்தது. அங்கு பைசைக்கிள்தீவ்ஸ் படத்தை காண நேரிட்டது இந்த தொடர்நிகழ்வுகளின் இறுதி முடிச்சு அல்லது கடைசி நிகழ்வாக லண்டனிலிருந்து கப்பலில் திரும்பிக்கொண்டிருந்த ரே தன் மனதுள் சித்திரங்களாக தேங்கிக்கிடந்த பிப்பூதி பூஷனின் நாவல் பதேர் பாஞ்சாலிக்கு திரைக்கதை எழுததுவங்கினார்.

பதேர் பாஞ்சாலி 1955ல் வெளியான போது டைம்ஸ் ஆப் இந்தியா இப்படம் இதர இந்திய திரைப்படங்களில்லிருந்து முற்றிலுமாக வேறுபட்டது என புகழ்ந்து எழுதியது. இங்கிலாந்தில் உலகப்புகழ்பெற்ற பிரபல சினிமா விமர்சகரான லிண்ட்சே ஆண்டர்சன் பதேர் பாஞ்சாலியை முழுவதுமாக அதனை அக்குவேறூ ஆணிவேறாக பிரித்து ஆராய்ந்து உலகின் தலைசிறந்தபடங்களில் ஒன்று என எழுதியிருந்தார்,.அதே சமயம்
படத்துக்கு மோசமான விமர்சனங்களும் கிடைத்தன. அதிலும் குறிப்பாக பிரெஞ்சு இயக்குனர் ட்ரூபோ ..கைகளால் உண்னும் ஏழைமக்களை பற்றிய படங்களை பார்ப்பது எனக்கு அருவருப்பானதாக இருக்கிறது என கூறினார். இந்தியாவிலும் சில தகுதியற்ற பார்வையாளர்கள் இன்றுவரை பலரும் ரே ஏழ்மையை உலகநாடுகளில் காண்பித்து பணம் சம்பாதிக்கிறார் என கூறிவருகின்றனர். இப்படி பலரும் பலவிதமான கருத்துக்களை சொன்னபோதும் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த பத்துபடங்களில் ஒன்றாக பதேர் பாஞ்சாலி இருப்பது ஒன்றே அதன் முழுமையான வெற்றிக்கு சான்று.

பதேர் பாஞ்சாலிக்கு பிறகு அதன் தொடர்ச்சியாக ரே அபராஜிதோ மற்றும் அபுசன்சார் என இரண்டுபடங்களை இயக்கியிருந்தார். இவற்றில் அபராஜிதோ வெனிஸ் திரைப்படவிழாவில் தங்க கரடி விருதை பெற்று பெருமை சேர்த்து. ரேவின் இணை சகாக்களான மிருணாள் சென் ரித்விக்கட்டக ஆகியோர் ரேவின் படங்களில் பதேர்பஞ்சாலியயைவிடவும் அபராஜிதோவையே தங்களுக்கு பிடித்த படங்களாக குறிப்பிடுகின்றனர். அபராஜிதோ எடுத்தபின் அவருக்கு இதேவரிசையில் அடுத்த படம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. இடையில் இரண்டுபடங்கள் இயக்கியிருந்தார். அதன்பிறகு 1959ல்தான் அபு வரிசையின் மூன்றாவதுபடமான அபுர்சன்சார் படத்தை இயக்கி வெளியிட்டார். இதுவரை உலகில் இது போல முப்பட வரிசைகள் பலவந்திருப்பினும் ரேவின் இந்த அபு வரிசைதான் மிகச்சிறந்த ஒன்று என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அபௌசன்சாரில் அவரால் அறிமுகப்படுத்தப்ட்ட அழகு தேவதை பின்னாளில் இந்தியாவே வியக்கும் உச்ச நட்சத்திரமாக மின்னியது. ஷர்மிளா டாகூர் என்ற பெயரே அக்காலத்தில் ரசிகர்களுக்கு பெரும் மயக்கத்தை தோற்றுவித்தது. தென்னிந்தியாவுக்கு ஆராதனாவின் மூலமாக அறிமுகமான அந்த நடிகையின் முக வாத்ஸல்யம் இன்றைக்கும் பத்திரிக்கை உலகில் மதிப்பிழக்காதது. இப்படியாக ரேவுக்கு அவரது அபு வரிசையின் மூன்றாவது படம் பல பெருமைகளை கொடுத்திருப்பினும் கலகத்தாவில் கடுமையான விமர்சனங்களையும் அது எதிர்கொண்டது.

ரே இதற்கு பிறகு அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட படம் சாருலதா. தான் எடுத்தவற்றுள் தலைசிறந்த படமென ரே அவர்களாலேயே குறிப்பிடப்பட்ட படம் அது. 1964ல் சாருலதா வருவதற்கு முன் தேவி, மகாபுருஷ், மகாநகர் தீன் கன்யா கஞ்சன் ஜங்கா போன்ற படங்களை அவர் இயக்கியிருந்தாலும் சாருலதா அவரது மேதமைக்கு தகுந்தசான்றாகவும் கருத்தியலாகவும் அதுதுணிசல்மிக்க படமாகவும் விளங்கியது. பொதுவாக ரேவின் திரைப்படங்களில் அவரது தனிப்பட்ட பார்வைகள் எதுவும் துருத்திக்கொண்டு வெளிவருவதில்லை. காட்சிகளை தன்னிச்சையாக நிகழவிட்டு, நுட்பங்களை கவனப்படுத்தி அதன் மூலம் பார்வையாளனின் மனதில் ஆழ்ந்த சலனங்களை உண்டாக்குவதில் மட்டுமே அவரது முழு கவனமும் இருக்கும். ஆனால் சாருலதாவில் இந்த விலகி நிற்கும் தன்மையை உடைத்துக்கொண்டு ரே தீவிரமான ஒரு கதையாடலை பார்வையாளனின் முன்வைக்க சிரத்தை எடுத்துக்கொள்வார். இதனாலேயே முந்தய படங்களில் இல்லாத வகையில் காட்சிகளில் ஒரு செயற்கைத்தன்மையும் இப்படத்தில் கூடியிருந்தது. இருப்பினும் நாயாகின் மன உணர்வுகளை ஆழமாக நாமே உணரும் வகையில் அவர் படமாக்கியிருந்தவிதம் மற்றும் நாயகியாக நடித்த மாதாபி முகர்ஜியின் முகபாவனைகள் ஆகியவை மற்றும் சுபத்ரோ மித்ராவின் அற்புதமான கறுப்புவெள்ளை ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய மதிப்பீட்டை உருவாக்கிதந்துள்ளன. கலாச்சாரமதிப்பீட்டில் இப்படம் கடுமையான தாக்குதல் தொடுத்திருந்ததை பலரால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. விமர்சனங்கள் கருத்தியலாக மட்டுமல்லாமல் படப்பாகத்திலும் எழுந்தன. இன்றும் பதேர்பாஞ்சாலியை ரசிக்கும் சிலர் சாருலதாவில் ரே நிறைய கீழே இறங்கிவிட்டதாகவே புலம்புவர்.


சாருலதாவுக்கு பிறகு ரே தன்படைப்பாற்றலை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக வெவ்வேறான கதைக்களங்களில் ஈடுபாடு கொண்டார்.
1962ல் இவர் சந்தெஷ் பத்திரிக்கையில் எழுதிய ஒரு சிறுகதையை படித்துவிட்டு கொலம்பியாபிக்சர்ஸ் திரைப்படமாக எடுக்க முன்வந்தது. Aliyen என அதற்கு தலைப்பிடப்பட்டது. பீட்டர் செல்லர்ஸ் மற்றும் மார்லன்பிராண்டோ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். என்ன காரணத்தாலோ படம் ஆரம்ப நிலையிலேயே சுழன்றுகொண்டிருந்தது. பிற்பாடு பிராண்டோவுக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். படம் அப்பொழுதும் நகரவில்லை. சத்யஜித்ரேவுக்கு பெரிதாக தொகையும் அவர்கள் தரவில்லை. இச்சூழலில் படத்திலிருந்து ரே வெளியேறினார். பிற்பாடு கொலம்பியா பிக்சர்ஸ் பலமுறை கேட்டுக்கொண்டபோதும் ரே கதையின் உரிமையை தரமறுத்துவிட்டார்.

இந்த பைசாபெறாததிட்டத்தால் ரேவுக்கு கிடைத்த ஒரே லாபம் மார்லன் பிராண்டோவின் நட்பு மட்டும்தான். பிராண்டோ பிற்பாடு யூனிசெப்பின் பிராண்ட் அம்பாசடராக இந்தியாவுக்கு வந்த போது கல்கத்தவில் ரெவைவந்து சந்தித்தார்

இது நடந்த சிலவருடங்களுக்குபிறகு ஹாலிவுட்டில் 1982ம் ஆண்டு ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி படம் வெளியானபோது ரே அதிர்ந்தார் காரணம். ரேவால் முன்பு எழுதப்பட்ட ஏலியன் கதையை லேசாக மாற்றி ஈ.டி படம் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஸ்பீல்பெர்க்கிடம் கேட்டபோது ஸ்பீல் பெர்க் திட்டமாக மறுத்துவிட்டார். ரே மற்ரும் ஸ்பீல்பெர்க் குறித்த இப்ப்ரச்னை குறித்து ரேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ரூ ராபின்சன் மேலும் பலதகவல்களை அப்புத்தகத்தில் கூறியுள்ளார்.

இடப்பட்ட காலத்தில் ரே குறிப்பிடத்தக்க சிலபடங்களைஎடுத்திருந்தார்.அதில் ஒன்று கோபி கைனே பாகே பைனே .தனது தாத்தா உபேந்திர கிஷோர் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி ரே 1969ல் வெளியிட்டார். தொடர்ந்து பாலிவுட் நடிகையான சிமிகாரேவால் நடித்த ஆரண்யர் தீன்ராத்திரி ,பிரதிவந்தி,சீமபதா, இவை கலகத்தா நகரமக்கலீன் அவல வாழ்வை மயப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்தன. 1977ல் தன் முதல் இந்திதிரைப்படமாக முன்ஷிபிரெம்சந்த் எழுதிய உருதுகதையான சத்ரன் கிக்கிலாரி படத்தை எடுத்துவெளியிட்டார். இதர்உமுன் அவர் எடுத்த அனைத்து படங்களும் வங்காள மொழியை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் அவர் இறப்பது வரை
கரே பாரே, கண் ஷத்ரு, ஷகபொரொஷ்கா, மற்றும் அக்ண்டுக் போன்றபடங்களை அவர் தொடர்ந்து இயக்கிவந்தாலும் அவை அனைத்தும் அவரது தரத்திலிருந்து சற்றும் குறையாமல் அவரது ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தது.

ஆவ்ணப்படங்களையும் சேர்த்தால் அவர் வாழ்நாளில் இயக்கிய படங்கள் மொத்தம் 35. ரே வெறுமனே ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளராகவும் .இசையின் நுட்பங்களைனைத்தையும் அறிந்தவர்.அவரே தனது படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.மட்டுமல்லாமல் அவர் ஒரு தேர்ந்த சித்திரக்காரர்.இதுமட்டுமா அவர் எழுதியகதைகள் இலக்கியதன்மை நிரம்பியவை வங்கால்ஹ்தின் குறிப்பிடத்தக்க ஐந்து சிறுகதை எழுத்தாள்ர்களூள் குறிப்பிடும் அளவிற்கு அவரது கதைகள் இன்றும் காலத்தை கடந்து நிற்பவை.இத்த்னை திற்மைகளில் தேர்ச்சி கண்ட இயக்குனர் உலக அரங்கில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே

ஆஸ்கார், வாழ்நாள் சாதனைக்கான் விருதையும் பிரெஞ்சு அரசாங்கம் லெஜண்ட் ஆப் ஹானர் விருதையும் தந்த பிறகுதான் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை அவருக்கு அவசரமாக வழங்கியது நாம் அனைவரும் நினைவில் கொள்ளதக்க விஷயம் ..


பொதுவாக ரேவின் திரைப்படங்க்ளில் வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு அவரது முந்தைய படங்களில் காணப்பட்டதாம் பிந்தைய படங்களினால் இல்லை என்பதுதான். அதற்கு காரணம் அவரது முந்தைய படங்களின் ஒளிப்பதிவாளரான சுபத்ரோ மித்ரா அவரை விட்டு பிரிந்தது. பிற்பாடு ரே சுபத்ரோவின் ஆளும்மையை மிகவும் புகழ்ந்துதள்ளுகிறார். செட்டில் காடாதுணியால் ஒளியை பிரதிபலிக்கசெய்யும் பவுன்ஸ் லைட்டிங் அவரது தனிச்சிறப்பு. அதே போல திரை தொழில் நுட்பத்தை பொறுத்தவரை கோடார்ட் மற்றும் ட்ரூபோ ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறுகிறார்

அவரது படங்கள் மிகவும் மெதுவாக நகர்கின்றன என்பது பொதுவாக ரேவின் மேல் பலரும் இன்றும் எழுப்பிவரும் குற்றச்சாட்டு. பலபிரபல விமர்சகர்கள் கூட இதனை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த குற்றசாட்டுக்கு ரேவின் சார்பாக அகிராகுரசேவா சொன்ன பதில் இங்கே கவனிக்கதக்கது. வாழ்வைமுழுமையாக உள்வாங்கிய அவரது படங்கள் மகாநதியை போன்றவை.அவை மெதுவாகத்தான் நகரும் .கைக்க்ட்டி கூர்ந்து கவனித்தால் அந்த ஆழமான நதி நமக்கு பல சேதிகளை சொல்லிச்செல்லும்.
அடுத்த இதழில்
ரோஷாமான், சினிமாக்களின் சிகரம்
நன்றி; புத்தகம் பேசுது நவம்பர் இதழ்


இதயங்களை ஊடறுத்து செல்லும் காட்சி ரயில் : பதேர் பாஞ்சாலி


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 16


நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரொப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948ல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக்கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. கல்கத்தாவில் திரைப்படச்சங்கத்தை நிறுவி வழிநடத்தி வந்த இளைஞர்கள் சிலர் ரெனுவாரை சந்தித்து ஆச்சர்யபடுத்தினர். இளைஞர்களுக்கோ திரைப்பட் சங்கம் மூலமாக கண்டுரசித்த ஒருபடத்தின் இயக்குனரை நேரில் சந்தித்த மகிழ்ச்சி, ரெனுவாருக்கோ தன் படப்பிடிப்புக்கான இடத்தேர்வுக்கு இனி கவலைப்ப்டவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி. வந்தவர்களில் சற்று உயரமாக மூக்கு நீளமாக இருந்த அதிகம் பேசாத ஒரு இளைஞனின் ஆர்வம் ரெனுவாரை வசீகரித்திருக்கும் போல . படப்பிடிப்புகளுக்கு தவறாமல் ஆஜாரான அந்த இளைஞன் தனக்கும் இயக்குனராகும் ஆசை இருப்பதாக கூறி தான் அப்போது அட்டைப்படம் வடிவமைத்துக்கொண்டிருந்த ஒரு நாவலின் கதையை கூறினான்.

அந்த இளைஞன் கூறிய கதையை கேட்டு ரெனுவார் அப்போதைக்கு அந்த இளைஞனை தட்டி கொடுத்து உற்சாகபடுத்தினாலும் அவரே கூட அந்த கதை ஐந்தாறுவருடங்களுக்கு பிறகு உலகமே வியக்கும் அழியாக காவியமாக பதேர் பாஞ்சாலி எனும் பெயரில் படமாக வெளியாகி கேன்ஸ் திரைப்ப்டவிழாவில் பலரையும் வியக்கவைக்க போகிறது என்பதை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

. இக்காலக்ட்டத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்துமே சினிமா எனும் புதிய மொழிக்கு தங்களாலான அணிகலனை புதுபுது இயக்குனர்கள் மூலம் அழகு பூட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியசினிமா மட்டும் ராஜாக்களையும் அவர்களது பிரம்மாண்ட செட்டுகளையும் விட்டு வெளியே வரவில்லை..இல்லாவிட்டால் மேடைநாடகத்தை ஒத்த நீளமான வசனம் மிகுந்த சமூகப்படங்களாகவே இருந்தன. இச்சூழலில். பிமல்ராய்,ரித்விக்கட்டக்,சேத்தன் ஆனந்த் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் சற்று வித்தியாசமான படங்களை எடுத்துவந்தாலும் அவர்களும் கூட இந்தியாவை விட்டு வெளியில் தாண்ட முடியாத சூழ்நிலை.இந்த நேரத்தில் 1950 ல் கல்கத்தவில் ரே அப்போது பணிசெய்துகொண்டிருந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜே கெய்மர் அவரை தொழில் நிமித்தமாக லண்டனுக்கு அனுப்பி வைத்தார். கிட்டதட்ட ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்த சத்யஜித்ரே லண்டனைவிட்டு புறப்படும்போது முழுக்க வேறு ஆளாக மாறியிருந்தார்.மனம் மிகுந்தபதட்டத்தில் இருந்தது அதற்கு காரணம் கிடைத்த குறைந்த அவகாசத்தில் அங்கு அவர் பார்க்க நேர்ந்த 90 திரைப்படங்கள். அதில் சிலகுறிப்பிட்ட படங்கள் அவரது உலகைமுற்றிலுமாக மாற்றின.அப்படி அவருக்குள் பாதித்த படங்கள் எவை தெரியுமா இத்தாலியின் நியோ ரியலிஸ அலையில் உருவான திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக ஒரு திரைப்படம்.விட்டோரியா டிசிகா வின் பை சைக்கிள் தீஃப் தான் அந்த அந்தபடம். படத்தின் அச்சு அசலான எதார்த்த்தை கடந்து படத்தில் சித்தரிக்கப்பட்ட சிறுவன் ரிசியின் அக உலகம் ரே வை வெகுவாக கவர்ந்திருந்தது.இப்போது ரிசி இருந்த இடத்தில் தான் எடுக்கவிருந்த நாவலின்கதையில் வரும் அபு இருந்தான் .

.சிறுவயது முதலே ரேவுக்கு குழந்தைகளின் உலகத்தோடு ஒருவித தீவிர ஈடுபாடு இருந்துகொண்டே இருந்தது..உண்மையில் வாழ்க்கை பெரியவர்களுக்கானது மட்டுமல்ல அங்கு குழந்தைகளும் சிறுவர்களும் வயதான பாட்டிகளும் இருக்கிறார்கள்.அவர்களின் உலகங்கள் பொதுபுத்தியில் இயங்கும் பெரியவர்களின் (இளைஞர்கள் மற்றும் நடுத்தரவயதுடையோரின்)
உலகங்களிலிருந்து வேறானவை.இதை உணர்ந்ததாலோ என்னவோ ரேவின் கேமராபார்வை எப்போதும் சிறுவர்களை குறிவைத்தே சுழன்று வந்தது, ஆனால் அன்றைய திரைப்படங்கள் உலகம் முழுக்கவும் அவரது பார்வைக்கு தலைகீழாகத்தான் சுழன்றன. இதனால்தான் முதல் முறையாக குழந்தைகளின் உலகத்தை ஓரளவுக்காவது அங்கீகரித்த பைசைக்கிள் தீஃப் அவரை மிகவும் தொந்தரவு செய்திருந்தது,லண்டனிலிருந்து கப்பலில் இந்தியாவுக்கு புறப்படும்போது இத்தகைய மனஅவசத்துடன் புறப்பட்டவர் கல்கத்தா வந்து இறங்குவதற்குள் முழு திரைக்கதைய்யையும் எழுதி முடித்திருந்தார்.படம் எடுக்க பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் இறுதியில் வேறு வழியேஇல்லாமல் அவரது மனைவியின் நகைகள் அவரது கழுத்தைவிட்டு இறங்கி அடகு கடைக்குள் ஓட அடுத்த நாள் காமிரா சுழலத்துவங்கியது. ரே தானே இப்படத்தை தயாரிக்க துவங்கினார். ஒளிப்பதிவாளராக சுப்ரதோ மித்ரா வை நியமித்தார் ரேவை போலவே சுப்ரதோ மித்ராவுக்கும் முன்பின் எந்த திரைப்பட அனுபவமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்வரை சினிமா கேமராவை தொட்டது கூட கிடையாது. ரெனுவாரின் ரிவர் படப்பிடிப்பின் போது வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்ட ரேவை போலத்தான் மித்ராவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள மட்டும் அனுமதிக்க பட்டார். அப்போது இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட கைக்குலுக்கிக்கொண்டு நண்பர்கள் ஆயினர் இருவரும். மித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரே தான் படம் எடுக்கும் போது நிச்சயம் உதவி கேமராமேனா சேர்த்துக்கொள்கிறேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் படம் துவங்கும்போது ரே சொன்ன தொகை கட்டுபடியாகாத காரணத்தால் பலரும் வர மறுக்க இறுதியில் வாய்ப்பு 21 வயதே ஆன சுப்ரதோமித்ரா ஒளிப்பதிவாளராகவே நியமிக்கப்பட்டார். அதே போல கலை இயக்குனரையும் ரிவர் படத்தில் பணி புரிந்த பன்சிதாஸ் குப்தாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். படத்தில் முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைப்பது என முடிவு செய்த ரேவுக்கு அபுவின் தந்தை பாத்திரத்துக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் வங்காள படங்களில் ஏற்கனவே நடித்து அனுபவம் பெற்ற நடிகரான கானு பாணர்ஜிய்யை ஓப்பந்தம் செய்ய வேண்டியதாகிப்போனது. அவரது மனைவி சரபோஜியாவாக நடிக்க ரேவின் மனைவி தன்னுடைய தோழி ஒருவரை கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார்.அவருக்கு முன்பே நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்கவே அவரை தேர்வு செய்து கொண்டார்.சிறுமி துர்காவாக நடிக்க நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. உமா தாஸ் குப்தா எனும் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆனால் அபு பாத்திரத்திற்கு மட்டும் சரியான சிறுவன் கிடைக்காதபோது அப்போதும் ரேவின் மனைவி வீட்டின் அருகில் இருந்த சிறுவன் ஒருவனை கொண்டு வந்தார்.
இறுதியில் பாட்டி இந்திர் பாத்திரத்துக்குத்தான் ஆளே கிடைக்கவில்லை. பின் ஒரு விப்ச்சார விடுதி ஒன்றில் அவர் எதிர்பார்ப்புக்குய் ஏற்றார் போல ஒரு வயது முதிர்ந்த கூன் விழுந்த பெண் இருப்பதை கேள்விப்பட்டு அவரை சென்று பார்த்த ரேவுக்கு அவரை பிடித்து போக அதன் பிறகுதான் படப்பிடிப்பு தளத்துக்கே ரே புறப்பட்டார்.

27 அக்டோபர் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பல பொருளாதார தடைகளால் அடிக்கடி நின்று போனது வருடங்கள் ஓடின. மீதிபடப்பிடிப்புக்கு தேவையான போதியபணம் கிடைக்காத சூழலில் ரே கைய்யை பிசைந்து கொண்டு நின்றபோது அவரது தாயார் ஒரு ஆலோசனை தந்தார். அதன்படி அப்போதைய வங்காள முதல்வர் பி.சி.ராய்க்கு தாயரின் வேண்டுதலுக்கிணங்க போட்டுகாண்பித்தார்.படத்தை பார்த்த முதல்வர் அதன் கவித்துவமான அழகியல்வசம் ஈர்க்கப்பட்டு மீதபடத்தை வங்காள அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் எடுக்க முடிவு செய்து அதற்குண்டான பொருளுதவிக்கு ஒத்துழைத்தார்.இறுதியில் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பின் மீண்டும் இரண்டுவருடங்களுக்கு பின் தொடரப்பட்டு முழுமையாக முடிந்தது. இது குறித்து ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசிய ரே உண்மையில் இடைப்பட்ட காலங்களில் மூன்று அதிசயங்கள் நிகழ்ந்தன. ஒன்று அபு வளரவில்லை, இரண்டு துர்காவும் வளரவில்லை, மூன்று இந்திர்பாட்டி இறக்கவில்லை.இந்த மூன்றில் ஒன்றுநடந்திருந்தாலும் இன்று பதேர் பாஞ்சாலிக்கு கிடைத்திருக்கும் பெயரும் புகழும் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே. நல்ல கலை என்பது திறமையுடன் சேர்ந்து சில அசந்தர்ப்பங்களாலும் ஆனதுதானோ என பதேர் பாஞ்சாலிகுறித்து ரே சொன்ன மேற்சொன்ன கூற்று நம்மை யோசிக்க வைக்கிறது.



படத்தின்கதை அபு எனும் சிறுவனின் பால்ய காலத்தை அவனது வாழ்நிலத்தை,சூழலை,அவனோடு வளர்ந்த புல் பூச்சி மரம் செடி கொடிகளை,அவனால் உட்கிரக்கிக்க முடியாத குடும்ப அவலத்தை வறுமையை விவரிக்க கூடியதாக இருந்தது. அபுவின் தந்தை ஹரிஹர ரெ காலம் காலமாக நிஷிந்பூர் கிராமத்தில் மத சடங்குகளை நிகழ்த்தி பிழைப்பு நடத்துபவர். வருமானம் மிக குறைவு ஆனாலும் அதைபற்றி கவலைப்படாமல் எப்போதும் பாட்டு கவிதைகள் என எழுதி என்றாவது ஒருநாள் அதன் மூலம் பெரிய பணம் ஈட்டிவிடமுடியும் என கனவு காண்பவர். இதனாலேயே குடும்பம் போதியவருமானம் இல்லாமல் கடன் வறுமை ஆகியவற்றில் சிக்கி தத்தளிக்க துவங்குக்கிறது. கணவன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாரே என மனைவி சரபோஜாயா விசனப்படுகிறாள் காரணம் அவர்களது மூத்தமகள் துர்கா. பத்துவயது நிரம்பியசிறுமிதான் என்றாலும் பெண் அல்லவா. துர்காவின் தம்பிதான் அபு .இருவருக்கும் நெருக்கமான இன்னொருவர் வயதான கண்தெரியாத இந்திர் எனும் பாட்டி . இந்திர்பாட்டிக்கு கூன் முதுகு பொக்கைவாய். பாட்டியின் மேல் ப்ரியம் கொண்ட துர்கா அடிக்கடி அடுத்தவீட்டுக்காரர்களின் மரங்களிலிருந்து கொய்யாபழங்களை திருடிக்கொண்டுவந்து தருவாள். இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் துர்காவை அடக்கி ஒடுக்கும்படி சர்பாஞ்சாவிடம் அடிக்கடி சண்டைக்கு வருவது வழக்கம்.ஒருமுறை மணி மாலை ஒன்றை துர்கா திருடிவிட்டதாக புகார் வருகிறது .ஆனால் துர்கா அதை அப்போதைக்கு மறுத்துவிடுகிறாள்..

எப்போதாவது சர்போஜயா கோபத்தில் திட்டும்போதெல்லாம் இந்திர்பாட்டி கூன் விழுந்த முதுகுடன் பக்கத்து வீடுகளில் சென்று தஞ்சம் புகுவாள். இதுதவிர துர்காவின் உலகம் முழுக்க தம்பி அபுவை சார்ந்தது. அது போலத்தான் அபுவுக்கும் அக்காவைத் தவிர வேறு உலகம் இல்லை. அவர்களது உலகத்தில் அந்த சிறுகிராமத்தின் வயல்வெளி ,குளம் அங்குவசிக்கும் உயிரினங்கள் மற்றும் எப்போதாவது மாலை நேரங்களில் மணி அடித்தபடி வரும் மிட்டாய்காரன் கிராமத்தின் இதர பணக்கார சிறுவர்கள் இவைகளால ஆனது. அவர்கள் இருவரும் தங்களது வயல்வெளிகளில் விளையாடும் போதெல்லாம் எப்போதாவது தொலைவில் ரயிலின் ஓசை கேட்கும் . ஒரு நாள் அக்கா தம்பி இருவரும் ரயிலின் ஓசையை கேட்டு அதனை பார்க்க வயல் மற்றும் தோப்புகளின் வழியே ஓடுகின்றனர். ஓரிடத்தில் அவர்களின் எதிரே சற்று தொலைவில் புகைவிட்டபடி ரயில் போய்க்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.
வறுமை காரணமாக ஹரிஹரபாபு வெளியூருக்கு சென்று பஞ்சம் பிழைக்க புறப்படுகிறார். திரும்ப வரும் போது கைநிறைய பணத்துடன் வருவதாக மனைவியுடன் கூறுகிறார். எப்போதுமே குடும்பகவலையால் வருத்தமுற்றிருக்கும் மனைவி சரபோஜயாவுக்கு கணவனின் வார்த்தைகள் சிறிதளவு மகிழ்ச்சி யூட்டுவதாக இருக்கிறது. ஆனால் கணவன் சென்ற பின் தான் குடும்பசூழல் மேலும் வறுமைக்கு ஆளாகிறது. ஓருபக்கம் தனிமை இன்னொருபக்கம் வறுமை இதனால் சரபோஜயாவின் வாழ்க்கை மிகுந்ததுயரத்தை பாரமாக சுமக்கிறது. ஒருநாள் விளையாட போகும் துர்காவும் அபுவும் திரும்பும் வழியில் தங்களது இந்திர்பாட்டி பிணமாக வழியில் இறந்துகிடப்பதை பார்க்கின்றனர்.
இதனிடையே பருவம் மாறுகிறது. மழைக்காலம் துவங்குகிறது. துர்கா மழையில் நீண்டநேரம் நனைகிறாள். விளைவு மறுநாள் அவள் படுத்த படுக்கையாகக்கிடக்கிறாள். வறுமையில் அவதிப்படும் சரபோஜாயா தனக்கு தெரிந்த வைத்தியங்களையெல்லாம் செய்து பார்க்கிறாள். இறுதியில் காலத்தின் சதியின் முன் தோற்றுபோகிறாள். இச்சூழலில் பணம் சம்பாதிக்க வீட்டைவிட்டு வெளியூர் போன கணவன் ஹரிஹரரே மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறான். ஆவலுடன் வீட்டுக்குள் நுழைபவன் மனைவி சிலைபோல அமைதியாக இருப்பதை பார்க்கிறான் அடுத்த நொடிஅவனது காலில் விழுந்த மனைவி வீறிட்டழுவதை பார்த்தபின்தான் மகள் துர்கா தன்னை விட்டு போய்விட்டதை ஹரிஹர பாபு உணர்கிறான்.

இறுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரை விட்டு வெளியேற ஹரிஹரரே முடிவு செய்கிறார். பொருட்கள் மூட்டைகட்டப்படுகின்றன. அப்போது அபு வின் கைகளில் துர்கா தான் திருடவில்லை என மறுத்த மணிமாலை கிடைக்கிறது. அதனை தானும் துர்காவும் அடிக்கடி சுற்றி விளையாடிய குளத்தில் அபு எறிகிறான். அது மூழுகுவதையே பார்க்கிறான். திரைப்படம் இத்தோடு முடிகிறது.
( அடுத்த வாரம் ரே... இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல் )

.

ரோஷாமான்: சினிமாவின் நுழைவாயில்

உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் : 18



குலை வெளிவந்த கையோடு வாழை இறந்துபடுவது போல இயற்கையின் சில நியதிகள் பலசமயங்களில் நம் முதுகில் குத்துவதாக இருக்கிறது. நல்ல சிறுகதை எழுதுகிறவர்கள் நாற்பதாவது வயது வரும் போது அவர்களாகவே படுத்துக்கொண்டு கண்னை மூடி நிம்மதியாய் மண்ணில் புதைந்து விடவேண்டும் என்பதும் அப்படி ஒரு விதி. இந்தவிதிக்கு உட்பட்டு இறந்த பல எழுத்தாளர்களில் ஒருவர் தான் ஜப்பானை சேர்ந்த Ryūnosuke Akutagawa ரியோன்ஸுகே அகுட்கவா

ஜப்பானிய சிறுகதை உலகின் தந்தையான இவர் எழுதிய இரண்டு சிறுகதைகள்தான் ரோஷமான் எனும் மா காவியம் உருப்பெற அடிப்படை காரணம். அதில் ஒன்றுதான் 1914ல் அகுட்கவாவினால் எழுதப்பட்ட ’இன் எ குரோவ் ” எனும் சிறுகதை. இதுகுறித்து பின்னாளில் ஒரு பேட்டி ஒன்றின்போது பதிலளித்த குரசேவா..அகுட்குவாவின் இக்கதை மனித மனங்களை கீறி கீறி ஆராய்ந்து கொண்டே செல்கிறது.அது நமக்கு வெளிப்படுத்தும் ப்யங்கரத்தை என் பார்வையாளனுக்கு சொல்ல நினைத்தேன் ரோஷமான் எனக்குள் பெரும் மனஅவசத்தை உண்டாக்கியதற்கும் இதுவே மூலகாரணம் .எனகூறியிருந்தார்.

அப்படிப்பட்ட இக்கதையை இவருக்கு முதன் முதலாக எடுத்துச்சொல்லி அதற்கான திரைக்கதையுடன் முதலில் குரசேவாவிடம் கொண்டுவந்தவர். Shinobu Hashimoto ”ஷினோபு கஷி மொட்டோ” .இவர் குரசேவாவின் நண்பர். அவரோடு இகிரு, இடியட் போன்ற படங்களில் இணை திரைக்கதையாளனாக பங்கு வகித்தவர்.அவர் தந்த திரைக்கதை குரசேவாவுக்குள் மெல்ல ஒரு சலனத்தை உண்டாக்கிகொண்டிருந்தது. அடுத்தபடம் என்ன என்ன என நச்சரித்த தயாரிப்பாளரிடம் இதுதான் கதை என கூறி அனுமதியும் பெற்றுவிட்டார்.

.பன்னிரண்டாம் நூற்றாண்டை கதைகளனாக கொண்ட இக்கதை ஒரு சாமுராய் வீரன், அவனது மனைவி. ஒரு வழிப்பறித்திருடன் மற்றும் ஒரு மரவெட்டி ஆகிய நான்கு கதாபாத்திரங்களையும் உடன் ஒரு கற்பழிப்பு மற்றும் கொலை எனும் இரண்டு சம்பவங்களையும் பின்னணியாக க்க்கொண்டு கதை கட்டமைக்கப்ப்பட்டிருந்தது. கதைக்குள் ஆழம் பூடகத்தன்மை ,நாடகீயம் என அனைத்தும் இருந்தாலும் திரைக்கதையாக குரசேவாவுக்குள் இது முழுதிருப்தி அளிக்கவில்லை.

கதைக்குள் இருக்கும் மர்மத்தை காட்சி ரூபமாக உணர்த்த இன்னும் ஏதாவது சேர்த்தால்தான் திரைக்கதையில் கூடுதல் ஆழமும் பரிணாமமும் கிட்டும் என்பதை உணர்ந்தார். அத்ன்பிறகு இருவரும் இதற்கான இணைகதையை தேடிய போதுதான் அவர்களுக்கு கிடைத்தது மற்றொரு சிறுகதை .அந்த கதையின் தலைப்புதான் ரோஷமான்.. ரோஷமான் என்றால் கோட்டை வாயில் பிரம்மாண்டமான அந்த கோட்டைவாயிலில் மழைக்கு ஒதுங்கும் மூன்றுபேர் தங்களுக்குள் சமீபத்தில் நடந்த, தாங்கள் சாட்சிகளாக பங்கேற்ற ஒரு கொலைவழக்கை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இதனூடே பிரம்மாண்டமான அந்த கோட்டைவாயிலும் அதன்மீது பொழிந்து வழியும் பேய் மழையும் இதர இரு பாத்திரங்களாக ஆசிரியரால் வருணிக்கப்பட்ட்டிருந்தன.

இந்த கோட்டையும் மழையும் கதையின் உட்பொருளை உணர்த்துவதாக இருக்க இதனை முதல்கதையாகவும் அகுட்கவாவின் முதல்கதை இன் எ குரோவ் கதையை ப்ளாஷ் பேக்கிலும் வைத்து இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க துவங்க குரோசவா எனும் இயக்குனரின் கனவில் பிரம்மாண்டமாக விரியத்துவங்கியது ரோஷமான்.

திரைப்படம் பேய் மழையிலிருந்து துவங்குகிறது.ரோஷாமான் எனும் பிரம்மாண்டமான நுழைவாயிலில் மழை கொட்டுகிறது.அதன் இண்ண்டு இடுக்குகளில் மழை சீறிபாய்கிறது. நுழைவாயிலை ஒட்டிய மண்டபத்தில் நானகைந்து குடியானவர்கள் தஞ்சம் புகுந்து பேசிக்கொள்கின்றனர். அப்போது இருவர் தாங்கள் நேரில்கண்ட விசாரணையை வியப்புடன் இன்னொருவனுக்கு சொல்ல துவங்குக்கின்றனர்.. விசாரணைக்கூடம் காண்பிக்கப்படுகிறது. வழிப்பறிதிருடன் ஒருவன், கொல்லப்பட்ட சாமுராய், சாமுராய் வீரனின் மனைவி , வழிப்போக்கனாக இவை அனைத்தையும் கண்ட மரவெட்டி ஆகியோரின் சாட்சியங்களின் வழி அவரவர் கொலையை பற்றி விவரிக்கின்றனர். இதில் கொலையுண்ட சாமுராய் வீரனின் சாட்சியம் ஆவி உருவில் அவனது மனைவியின் வாயிலாக காண்பிக்கபடுகிறது . ஒரு சம்பவத்துக்கு ஒரு உண்மைதான் இருக்க முடியும் ஆனால் இங்கோ அவரவர் கொலையை அவரவர் கோணத்தில் விவரிக்கின்றனர் . நால்வர் சொலவதும் நம்பக்கூடியதாகத்தான் இருக்கிறது.ஆனால் ஒருவர் சொல்வதற்கு முற்றிலும் த்லைகீழான உண்மையாகவும் இருக்கிறது. இறுதியில் யார் சொல்வது உண்மை என கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாமல் படமும் முடிகிறது. ரோஷ்மான எனும் பிரம்மாண்ட கட்டிடமும் மழையும் அனைத்திற்கும் சாட்சிகளாக நட்ந்த சம்பவங்களை கேட்டும் கேளாமல் நின்றுகொண்டிருக்கிறது.

அதுவரை ஜப்பானிய சினிமாவில் இல்லாத உள்ளழுத்தமும் பூடகமும் வெளிப்பாடாற்ற தன்மையுமாக அகிராகுரோசாவா இப்படத்தை இயக்கிருந்தார். இதனாலேயே ஜப்பனிய திரைப்பட உலகம் இத்திரைப்படத்தை அதன் ஆரம்ப நிலையிலிருந்தே நிராகரித்து வந்தது. தயாரிப்பாளர்கள் கதையில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை என குறைகூறினர். அகிராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்கள் கூட திரைக்கதையின் பலம் குறித்து போதிய புரிதல் இல்லாமல் படப்பிடிப்பிலிருந்தே விலகிக்கொண்டனர்.இப்படி பலராலும் ரோஷமான் வெறுக்கப்பட்டதற்கு காரணம் படத்தில் திட்டமான ஒருவரிக்கதையில்லை. கதை பார்வையாளனின் யோசனைக்கு தள்ளப்படுகிறது. இதற்குமுன் இப்படியான திரைக்கதைகள் அவர்களது அனுபவ உலகத்தில் இல்லாததால்தான் இதெல்லாம் ஒரு கதையா என சுண்டு விரலால் அத்னை ஒதுக்கிதள்ளினர்.

ஆனால் குரசேவா திட்டமாக இத்திரைக்கதைய்யை நம்பினார்.கதையின் ரகசியம்தான் திரைக்கதையின் வெற்றி அது பார்வையாளனுக்கு தெளிவாக கூற வேண்டிய அவசியமில்லை காட்சிகளின் மூலம் அவனது ஆழ்மனத்தில் உணர்த்தினால் போதுமானது என குர சேவா நம்பினார்.இதனாலேயே படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான் நுழை வாயிலுக்காக குரசேவா மிகவும் மெனக்கெட்டார்.தனது கற்பனையை விட அது பிரம்மண்டமானதாக இருக்கவேண்டும் என விரும்பினார்.

பல புத்த கோவில்களுக்கு சென்று இறுதியில் ஒன்றை தேர்வு செய்தார்.புராதன நகரமான கியோட்டோவின் வடக்கு மூலையிலிருந்த நுழைவாயில் அவரை மிகவும் கிளர்ச்சியுறசெய்தது.பின் அது போன்ற ஒன்றை நிர்மாணிக்கும் படி தன் கலை இயக்குனர்களுக்கு அவர் கட்டளையிட அது அத்னையும் விட பிரம்மாண்டமானாதாக அமைந்து காட்சிக்குள் ஒரு புதிர்த்தன்மையை இயல்பாக வடித்து தந்தது.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்து திரைப்படம் 1950ல் வெளியானபோது ஜப்பனில் பலரும் கடுமையாக எதிர்த்தனர். ஜப்பானியர்கள் தத்துவங்களை காட்டிலும், வாழ்க்கையையும் உறவுகளையுமே அதிகம் நேசிக்கின்றனர். ஆனால் யாருக்கும் புரியாத இத்திரைப்ப்டம் குரசேவாவுக்கு மேற்கு நாடுகளின் கலாச்சாராத்தின் மீதான் ஈடுபாட்டையே காண்பிக்கிறது . என பொறிந்துதள்ளினர். ஆனால் படத்தை பார்த்த ஒரு இத்தாலிய ஆசிரியர் ஒருவர் இப்படத்தை இத்தாலியின் வெனிஸ் திரைப்ப்டவிழாவுக்கு பரிந்துரை செய்தார்.ஆனால் ஜப்பான் அரசாங்கமோ குரசேவாவை விட எங்களின் இயக்குனரான ஓசு தான் எங்கள் வாழ்க்கைய்யை திறம்ப்ட சொல்கிறார் அவரது படத்தை வேண்டுமானால் அனுப்புகிறோம் என முரண்டு பிடித்தது.
இப்படியாக பல ப்ரச்னைகளை கடந்து இப்ப்டம் இறுதியாக போட்டியில் கலந்து கொள்ள,இறுதியில் விழாவின் சிறந்த படத்துக்கான தங்க சிங்கம் விருது இப்படத்துக்க வழங்கப்பட்டது. அன்று அரங்கில் எழுந்த பலத்த கைதட்டலுடன் மேடையில் உயர்ந்தது குரசேவா எனும் பெயர் மட்டுமல்ல போரினால் உருக்குலைந்த ஜப்பானியர்களின் மனோதிடமும் உறுதியும் தன்னம்பிக்கையும் தான். அதே போல ரோஷ்மானுக்கு பிறகுதான் உலக அரங்கில் ஜப்பான் சினிமாவுக்கு முக்கியத்துவம் கிடைக்க துவங்கியது.
தொடர்ந்து அமெரிக்காவிலும் இன்னும் பல படவிழாக்களில்லும் கலந்து கொண்டு இத்திரைப்ப்டம் பரிசுகளை அள்ளிக்குவித்துக்கொண்டே இருக்க குரசேவா உலகின் த்லை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக குறுகிய காலத்தில் அறியப்பட்டார்.

ரோஷ்மான் திரைப்ப்டத்திற்கு கிடைத்த பெருமைகளுக்கு அத்ன் திரைக்கதை மட்டுமே காரணமல்ல. மாறாக அதன் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சப்த ஒருங்கிணைப்பும் கதாபாத்திரங்களின் நடிப்பும் மிக முக்கிய காரணிகளாகும்.குறிப்பாக ஒளிப்பதிவில் ரசம் பூசப்பட்ட கண்னாடிமூலம் வெளிச்சத்தை நடிகர்களின் முகங்களில் பிரதிபலைக்கச்செய்யும் உத்தி முத்ன முதலாக இப்படத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல சூரியனை நேரடியாக காமிராமூலம் படம்பிடிதத்தும் இப்படத்தில்தான் முதல் முறை.


படத்தில் வழிப்பறி திருடனாக நடித்த மிஃபுனே குரசேவாவின் நிரந்தர நாயகானாக தொடர்ந்து நடித்து வந்தார். ஒரு முறை படப்பிடிப்பினூடே குரசேவா குழுவினருடன் மார்டின் மற்றும் ஓசா ஜான்சன் ஆகியோர் இயக்கிய ஆப்ரிக்கா எனும் படத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அதில் ஒருகாட்சியில் சிங்கம் ஒன்று நடந்து போக உடனே மிபுனே என கத்தினார் குரசேவா .மிபுனே குரசேவாவை திரும்பிபார்க்க அதோ திரையில் நடக்கும் சிங்கத்தை பார்.நம் படத்தில் நீ இது போலதான் நடக்க வேண்டும் என உத்தரவிட மிபுனேவுக்கு அந்த நிமிடமே மூக்கின் கீழ் மீசை சிலுப்பிக்கொண்டு உருவெடுக்க துவங்கியது. ப்டத்தில் மிபுனேவின் உடலில்கட்டுதெறிக்கும் அசாத்திய முறுக்குக்கெல்லாம் பின்னணியாக குரசேவாவின் இந்த கட்டளைதான் இயங்கியது. ஒரு நடிகனுக்குள் இயக்குனர் எவ்வளவு ஆழமாய் ஊடுருவ முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்.

நன்றி: புத்தகம் பேசுது ..டிசம்பர் மாத இதழ் http://www.ajayanbala.in

உலக சினிமா வரலாறு;

குரசோவாவும் ஜப்பானிய சினிமாவும்






வாழ்க்கையில் சில குத்து கள் மறக்க முடியாதது.
சிறுவயதுகளில் பள்ளிவிட்டு வீடுதிரும்பும்போது அதுவரை உடன் வந்த சக தோழன் தன் வீட்டிற்கு திரும்பும் இடம் வந்ததும் நாம் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஓங்கி முதுகில் ஒரு குத்து குத்திவிட்டு இந்த அடியை எப்பவுமே மறக்காதே என சொல்லிவிட்டு தலைதெறிக்க ஓடுவான். அந்த சமயங்களில் நடுமுதுகில் உண்டாகும் வலியைவிட அவன் மூல்மாக கிடைத்த ஏமாற்றம்,உடனடியாக அவனி பிடிக்க முடியாமல் போஒன இயலாமை போன்ற மன வலிகளும் சேர்ந்து கண்ணீரை வரவழைக்கும்

அதூபோன்ற மறக்க முடியாத முதுகு குத்தல்களை
உலகின் எல்லா தேசங்களுக்கும் எல்லா இனக்குழுக்களுக்கும் வரலாறு எப்போதாவாது கொடுத்து கதிகலங்க வைக்கும். அப்போழுது எழும் அம்மக்களின் வேத்னை ததும்பும் கண்ணீரானது அவர்களது பிற்கால எழுச்சிகளுக்கெல்லாம் காரணமாக அமையும்.ஒன்று அது போராகவோ,பூகமபமாகவோ, கொள்ளை நோயாகவா,பெரும் பொருளாதார வீழ்ச்சியாகவோ அல்லது சுனாமியாகவோகூட அந்த குத்து இருக்கலாம்

அது போலத்தான் ஜப்பானியரின் எழுச்சிக்கு அடிப்படை காரணமாக இரண்டு முதுகு குத்தல்களை வரலாறு வழங்கியிருக்கிறது. ஒன்று அனைவரும் அறிந்த இரண்டாம் உலக்போரின் இறுதியில் நிகழ்ந்த ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு சம்பவம் . இன்னொன்று அதற்கும் முன்பாக 1923 ல் ஏற்பட்ட பெரும் பூகம்பம். கிtடதட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட ஜப்பானியர்களை அந்த பூகம்பம் பலிவாங்கியது. இந்த வரலாற்று துயரமான சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குபின் பூகம்பம் நடந்த இடங்களை பலரும் சென்று பார்த்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். சுற்றிலும் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருந்த அந்த இக்கட்டான சூழலினூடே இரண்டு சிறுவர்களும் உள்ளம் நடுங்கியபடி நடந்து சென்ற்னர். அதில் ஒருவர் அகிரா குரசேவா இன்னொருவர் அவரது அண்ணன். அகிராவுக்கு அப்போது 13வயது அண்ணன் ஹெய்கோ வுக்கு 17 வயது. சுற்றிலும் உயிருக்கு போராடியபடி கேட்கும் மனிதர்களின் மிருகங்களின் அழுகுரல்களை கேட்டதும் அகிரா தலையை திருப்பி பார்க்க முயற்சிக்க அண்ணன் ஹியூகோ திரும்பாதே அவரிடம் கத்தி தலையை முன்னோக்கி திருப்புவாரம் .


பிற்காலத்தில் தன் படங்களில் அதிகமாக காணபடும் அந்த காரம் திகிலுண்ர்வு மற்றும் பயமூட்டும் தன்மைகளுக்கு தன் மனதில் ஆழப்பதிந்த அந்த சிறுவயது நிகழ்ச்சிதான் காரணம் என குரசேவா பிற்பாடு கூறியிருக்கிறார். மட்டுமல்லாமல் தொடர்ந்த அவரது வாழ்வும் ஒருபயங்கரத்தை அவருக்கு முதுகில் சுமக்கவைத்தபடியேதான் இருந்தது.

1910ல் இசாமு,மற்றும் ஷிமா குரசேவா எனும் தம்பதியின் நான்காவது மகனாக டோக்கியாவை அடுத்த ஒரு புறநகர் ஒன்றில் பிறந்தவர் குரசேவா.
அவரது அண்ணன் ஹியூகோ தன் இளவயதில் பென்ஷியாக வேலைசெய்துவந்தவர். ஊமை ப்படங்கள் ஓடும்போது பின்னாலிருந்து கதையை விவரிப்பவருக்கு பெயர் தான் பென்ஷி. ஒரு கட்டத்தில் சத்த சினிமா வந்தபிறகு பென்ஷிக்கள் வேலை இழந்து வீதிக்கு வந்தனர். ஸ்டூடியோக்களின் முன் ஒன்று கூடிபெரும் போராட்டத்தை நிகழ்த்தினர். அகிராவின் அண்ணன் ஹியூகோ தான் அதற்கு தலைமைதாங்கி போராட்டங்களை நடத்தினார்.ஆனாலும் என்ன பலன் ..போன வேலை போனதுதான் .அந்த மன உளைச்சலில் அகிராவின் அண்ணன் ஹ்யூகோ
தற்கொலை செய்து கொள்ள நான்குமாதங்கள் கழித்து காரணமே இல்லாமல் அவரது சகோதரர்கள் மற்ற இருவரும் ஒன்றன் பின் ஒருவராக சொல்லி வைத்தார் போல இறந்து போக அகிரகுரோசோவா திகிலுடன் தனிமரமாக நின்றார். மரணம் அவர் முதுகின் பின்னால் ஒரு கேள்வியாக நிற்க பீதி அவரது ஒவ்வொரு நிமிடத்தையுமாக ஆக்ரமித்துக்கொண்டது.

அதன்பிறகு அவர் மெல்ல திரைப்பட்த்துறைக்குள் நுழைந்து அப்போது புகழ்பெற்றவராக விளங்கிய இயக்குனர் யமமோட்டொ விடம் உதவியாளராக இணைந்து பின் 1943ல் சஞ்சுரோ சுகாட்டா திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானபின் அவரது சிறுவயது பீதி, மரணத்தின் விளிம்பு, அச்சத்தின் மறு எல்லை அவரது திரைப்படங்களில் காட்சிமொழிகளில் பரிணமிக்க துவங்கியது.அவரது பெரும்பானமையான படங்கள் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இயற்கைக்குமான போரட்டமாக இருப்பதற்கும் இதுவே காரணமாக கருதப்படுகிறது.

1950 ல் அவர் இயக்கத்தில் ரோஷமான் வெளியானபிறகுதான் உலகசினிமாவுக்கு ஜப்பான் பரிச்சயமாக துவங்கியது என்றாலும் பல நல்ல இயக்குனர்கள் அவருக்கும் முன்பாக ஜப்பானிய சினிமாவையும் அத்ன் கலாச்சாரத்தையும் போற்றி பாதுகாத்து வந்துள்ளனர்.இத்த்னைக்கும் சினிமாஜப்பானுக்குள் 1896லேயே நுழைந்து மெல்ல படங்களை த்யாரிக்க துவங்கியிருந்தாலும் அவை பெரும்பாலும் அவர்களது காபுகி நாடகவகை போலவே இருந்த்ன. கென்ஷி மிசோகுச்சி Kenji Mizoguchi,
மற்றும் யசுஜிரொ ஓசு Yasujiro Ozu ஆகியோர் தான் ஓரளவு அத்னை மவுன படங்களின் காலத்திலேயே மீட்டெடுத்தவர்கள். அதிலும் ஓசு ஜப்பானிய சினிமாவின் நியோரியலிஸ தந்தை என போற்றப்பட்டவர். அவரதி திரைப்படங்களில் மனித உறவுகள் மற்றும் ஜப்பானிய கலாச்சராத்தின் தொன்மங்கள் ஆகியவை அழுத்த்மாக்வும் எதார்த்த பாணியிலும் பின்பற்றப்பட்டு வந்தன.ஆனாலும் அவர்களது படங்கள் உலக அரங்கை அது வரை எட்டாமல்தான் இருந்தது. ரோஷ்மான் வெளியாகி உலகசினிமாரசிகர்களின் பார்வை ஜப்பானியசினிமாவின் மேல் கவனத்தை குவிக்க துவங்கியபின்தான் ஓசுவுடன் இன்னும் சில இயக்குனர்கள் அறியப்பட துவங்கினர்.

இன்றும் இந்தியாவில் எப்படி சில நல்ல சினிமா ரசிகர்கள் ரே வை ஏற்காமல் கட்டக்கை தீவிரபடைப்பாளியாக முன்னிறுத்துகிறார்களோ அது போல ஜப்பானில் இன்றும் பலர் பலர் குரோசாவை ஏற்காமல் ஓசுதான் ஜப்பானிய சினிமாவின் தந்தை என புகழ்வர். ரோஷமானின் வெற்றிக்கு பிறகு அடுத்த பத்து வருடத்தில் மூன்று ஜப்பானிய திரைப்படங்கள் உலகசினிமாவை உலுக்கி எடுத்த்ன. அதில் ஒன்று அகிராகுரசேவாவின் செவன் சாமுராய் Seven Samurai, இன்னொன்று ஓசுவின் டோக்கியோ ஸ்டோரி Tokyo Story
இன்றுவரை உலகின் தலைசிறந்த நூறுபடங்களுக்குள் இந்த இரண்டு படங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்றாவது திரைப்ப்டம் ஒருவணிகப்படம் .அணு ஆயுத எதிர்ப்பை முன்னிறுத்தி வெளியான கோஜ்ரா Gojira, எனும் இப்ப்டம் பிற்பாடு ஹாலிவுட்டில் காட்சில்லா Godzilla. என பெயரிடப்பட்டு உலகம் முழுக்க பட்டி தொட்டி எங்கும் ஓடி ஜப்பானிய சினிமாவுக்கு பெரிய வணிக சந்தையையும் ஏற்படுத்திக்கொடுத்தியது மட்டுமல்லாமல் ஹாலிவுட்டுக்கு நிகராக தங்களாலும் படமெடுக்க முடியும் என ஜப்பானியர்கள் இப்படத்தின் மூலம் காலரை தூக்கிவிட்டு போரின் முலம் இழந்த தன்னமபிக்கையை மீட்டுக்கொண்டனர்.

ரோஷமான், செவன் சாமுராய், ரெட் பியர்ட் போன்ற குரசேவாவின் த்லைசிறந்த படைப்புகளின் வெற்றிக்கு பிறகு அதில் நடித்த மிபுனே எனும் கலைஞனை உலகின் தலைசிறந்த நடிகர்ளூள் ஒருவராக உலகசினிமா அடையாளம் கண்டு கொண்டது.

அடிப்படையில் குரசேவா இலக்கியங்களின் மிகப்பெரும் காதலராக இருந்தார்.ஷேக்ஸ்பியரின் படைப்புகளீல்லிருந்து மட்டுமே மூன்று திரைப்பட்ங்களை மீட்டுருவாக்கம் செய்தார். அவரது கிங்லியர் King Lear, நாட்கம் ரான் Ran திரைப்படமாகவும்,மேக் பெத் நாடகம் Macbeth த்ரோன் ஆப் ப்ளட்ட்டாகவும் Throne of Blood,ஹேம்லட் Hamlet நாடகம் பேட்ஸ்லீப் வெல் The Bad Sleep Well எனும் படமாகவும் உருவாக்கம் செய்தார். மட்டுமல்லாமல்
தஸ்தாயெவெஸ்கியின் மற்றொருபடைப்பான இடியட் எனும் நாவலை யும் மற்றும் மாக்ஸிம் கார்க்கியின் நாடகத்தை தழுவி லோயர் டெப்த்ஸ் போன்ற படைப்புகளையும் எடுத்தார்.அவரது மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படும் இகிரு கூட டால்ஸ்டாயின் சிறுகதை ஒன்றை அடிப்படையாக் க்கொண்டு எடுக்கப்பட்டதிரைப்படம் .அது போல அவரது ஓவ்வொருபடத்திலும் பருவநிலைகளில் ஏதானும் ஒன்று பிராதான பாத்திரமாக இடம் பிடிக்கும் ரோஷ்மானில் மழை, டெர்சு உஜாலாவில் பனிப்புயல், ஸ்ட்ரே டாக் படத்தில் வெப்பம் ஆகியவை குறியீடுகளாக படம் முழுக்க பின்புலத்தில் இயங்கும்.

குரசேவாவின் திரைப்படங்கள் ஒரு சினிமாகற்கும் மாண்வனுக்கு மிகச்சிறந்த பாடம். உலகின் வேறேந்த இயக்குனரின் படங்களையும் இதற்கான முழுதகுதியுடன் ஏற்க முடியாது.கதை திரைக்கதை ஒளிப்பதிவு எடிட்டிங் கலை ஒலிப்பதிவு மற்ரும் இயக்கம் என அனைத்து துறைகளுக்கும் அவரது படங்கள் மட்டுமே இலக்கணம்.அவரது திரைப்படஙக்ள் அனைத்துமே மனிதவாழ்வின் அவலங்களை அத்ன் புதிர்களை குழப்பங்களை மாயைகளை,கற்பனைகளை அழுக்கை வெளிச்சத்தை அத்ன் இருட்டை மட்டுமே தொடர்ச்சியாக தேடிக்கொண்டிருந்தன.இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அதன் சமன்பாட்டை இடையறாமல் தேடுவதாக அவரது திரைப்படஙக்ள் இருந்தன. அதன் காரணமாகத்தான் உலகைன் த்லைசிறந்த இயக்குனர் என பலராலும் இன்றுவரை ஏகமனதாக கருதப்படுகிறார்.அவரது திரைப்படங்கள் வடிவத்தில் மேற்கையும் உள்ளடக்கத்தில் கிழக்கையும் ஒரு புள்ளியில் இணைப்பவையாக இருப்பதும் அவருக்கு கிடைத்த ஒருமித்த கைதட்டல்களுக்கு இன்னொரு காரணம்

எல்லாகாலத்திலும் சூரியனால் ஒளி மறைக்கப்படும் பகல் விண்மீன்கள் போல சில அதீத மேதைகளின் புகழானது பல திறமையாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான புகழை தடுத்துவிடும் . இது போன்ற விபத்து மொசார்ட் காலத்தில் பல இசை மேதைகளுக்கு நிகழ்ந்ததாக கூறுவர் .அது போலத்தான் குரசேவாவின் அதீத புகழ் காரணமாக கிடைக்கவேண்டிய நியாயமான பேரும் புகழும் கிடைக்காது போன ஜப்பானிய சினிமாவின் மற்றொரு கலைஞர் கோபயாஷி. கோபாயாஷியின் படங்களும் பெரும்பாலும் சாமுராய் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கபடுவை ஆனாலும் அதில் அகிராவின் படைபாளுமைக்கு இணையான ஒரு செறிவான காட்சிமொழி அவரது படங்களில் காணப்படும்.இன்னும் சொல்லப்போனால் செறிவிலும் காட்சி அணுகுமுறையிலும் கோபாயாஷியிடம் குரசேவாவைவிடவும் கூடுதலான இறுக்கம் தொனிக்கும்.ஆனால் குரசேவாவிடம் இருந்த இலக்கியத்தன்மை மற்றும் உலகளாவிய பார்வைகள் ஜப்பானின் இதர இயக்குனர்களின் படங்களில் தேடிப்பார்த்தாலும் காணக்கிடைக்கவில்லை.

குரசேவாவின் காலத்தில் அவருக்குபின்னால் வந்து பரவலான கவனத்தை ஈர்த்த மற்ற சில இயக்குனர்களில் நகிஷா ஓஷியாமாவும் ,ஷோகை இமாமுராவும் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்கள் .இவர்கல ஓஷியாமவின் திரைப்படங்களின் பாலுறவுகாடசிகளையும் அத்ற்கு பின்னால் இயங்கும் மனித மனத்தின் நுண்மைகளையும் சித்தரித்தன.உலகம் காதல் வழியாக காமத்தை அடைந்த போது காமத்தின் வழியாக காதலையும் அதன் உயிர்பறிக்கும் தன்மையையும் அவரது படங்கள் விவரிப்பதாக அமைந்தன.ஹிரோஷி டேஷிகரா என்பவர் இயக்கத்தில்வெளியான வுமன் இந்த டூன்ஸ் Woman in the Dunes (1964)எனும் படம் 1964ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த படத்துக்கான பரிசை வென்று ஜப்பானியசினிமாவின் தரத்தை தக்கவைத்துக்கொண்டது.

இப்படியாக குரசேவாவின் காலத்திலும் அவருக்கு முன்னும் பின்னுமாக பல இயக்குனர்கள் ஜப்பானிய சினிமாவின் தரத்தை உலகுக்கு எடுத்துசென்றிருப்பினும் எவரும் குரசேவா அளவுக்கு படைப்பில் உச்சத்தை அடையவில்லை. உலகில் வடிவம் மற்றும் உள்ளடக்கத்திலும் தொடர்ந்து இலக்கியதரத்தையும் மனிதவாழ்வின் பேருண்மைகளையும் தேடிய இயக்குனர்கள் பட்டியலில் குரசேவாவுக்கே முதலிடம். அவரது திரைப்படங்கள் ஒன்றிலிருந்து ஒன்று அனைத்திலிருந்தும் முழுமையாக வேறுபட்டன.அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உலக் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனர்களான பெர்க்மன் ,தார்க்கோஸ்க்கி போன்றவர்களிடமிருந்து அவர் விலகிநிற்கும் இடம் இதுதான். மேலும் அவர்கலது படங்கள் உண்மையை இய்ற்கையின் வழியாகவும் ஆன்மீகத்தின் வாயிலாகவும் தேடியபோது குரசேவா மட்டுமே அதனை எளிய மனிதர்களின் துயரத்தின் வாயிலாக அவர்களது வேத்னையின் முனகல் வழியாக இத்னை இடையறாது தேடினார். அது போல படைப்பொழுங்கின் மீதான் அவரது காதல் அண்டசராசரத்தின் வடிவங்களுக்கு அப்பாலும் இயங்க கூடியது.அதன் காரணமாக அவர் பல துன்பங்களையும் துயரங்களையும் அவராகவே வருத்திக்கொண்டார்.1975ல் வெளியான டெர்சு உசாலாவில் அவர் எதிர்பார்த்த பனிப்புற்கள் வளர்வதற்கு ஏற்க்குறைய ஓரிருவருடங்கல் வரை வெறுமனே காத்திருந்தார். 1971ல் அவர் ஒருமுறை ஜப்பானிய மரபுப்படி ஹரகிரி எனும் தற்கொலைமுயற்சிக்கு ஈடுபட்டு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார்.

அகிராகுரசேவாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள்.ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரிகளான ஸ்பீல்பெர்க்,ஜார்ஜ் லூகாஸ்,மற்ரும் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா ஆகியோர் அகிராவை தங்களது குருவாக கருதினர்.குரசேவாவின் படங்கள் பெரும்பாலும் அமெரிக்க இயக்குனரான ஜான் போர்டின் தீவிரபாதிப்பிலிருந்து துவங்கியவை என்பது கூட இதற்கான உளவியல் காரணமாக இருக்கலாம்.தனது குருவுக்கு செய்யும் காணிக்கையாக ஸ்பீல்பெர்க் ஒருபடத்தை எடுக்க அன்பு அழைப்புவிடுத்தார்.1990ல் வெளியான குரசேவாவின் ட்ரீம்ஸ் எனும் அத்திரைப்படத்தில் ஹாலிவுட்டின் இன்னொரு பிரபல இயக்குனரான மார்டின் ஸ்கோர்சி ஒரு முக்கிய பாத்திரத்தில் பங்கேற்று தன்பங்கிற்கு குருகாணிக்கை செய்துகொண்டார்.

குரசேவா பெற்ற பரிசுகள் எதுவும் அவரது படங்களுக்கு ஈடாகாது.அவர் பற்றிய தகவல்கள் பகிரவேண்டியவை ஆல்லது தேடிக்கண்டடைய வேண்டியவை இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.அவற்றை அவரே எழுதிய some thing like an autobiography எனும் நூலை படிப்பதன் மூலம் ஓரளவு நிறைவேறும்.
வரும் ஆண்டு மார்ச் 23 லிருந்து அகிராகுரசேவின் நூற்றாண்டு துவக்கம் பெறுகிறது .இன்றும் அவர் அறிவு உலகிற்கு இள்மையானவராகத்தன் காட்சியளிக்கிறார்.

அடுத்த இதழில்
(இத்தாலியின் இரண்டு இள்மை காற்று;) http://www.ajayanbala.in

இத்தாலியின் இரு இளமைக்காற்று ;பெலினி, ஆண்டோனியோனி



உலக சினிமா வரலாறுhttp://www.ajayanbala.in
மறுமலர்ச்சி யுகம் : 20

இத்தாலியின் இரு இளமைக்காற்று ; பெலினி, ஆண்டோனியோனி


கலை உலகிலும் இலக்கியத்திலும் புகழ்பெற்ற மனிதர்களை இருவகையினராக பிரிக்கலாம்

நட்சத்திரங்கள், ஆளுமைகள்

நட்சத்திரங்கள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு அதன் மூலம் ஊடகங்களின் வெளிச்சம் பாய்ந்து வாழுங்காலத்திலேயே புகழையும் பெருமையையும் அடைந்துவிடுவர்.

ஆனால் ஆளுமைகள் என்பவர்கள் வேறு.
இவர்கள் தாங்கள் மேற்கொண்ட கலையை தங்களது உயிரினும் மேலாக நேசிப்பவர்கள் . அதற்காக தொடர்ந்து போராடி அதனை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்பவர்கள். அதனால் வாழும் காலத்தில் வெகுஜன ஊடகங்களின் வெளிச்சம் இவர்கள்மேல் விழுவதில்லை. அதே சமயத்தில் இவர்களும் காலத்தில் மைல்கற்களாக நிறகவே விரும்புகின்றனர். பெரும்பாலும் இவர்கள் தங்களது சமகாலத்திய ரசனைகளுக்கு எதிர்திசையிலேயே பயணிப்பர் அத்தகைய ஆளுமைகள்தான் குறிப்பிட்ட கலை தேங்கிய குட்டையாகும் ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றனர். மேலும் தொடர் ஓட்டவீரர்களை போல பொறுப்பை இன்னொருவருக்கு கைமாற்றி அக்கலை வளர தொடர்ந்து பாடுபடுகின்றனர்


அப்படியாக சினிமா எனும் கலைவடிவத்தின் அதன் மொழியின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்த் ஆளுமைகளுள் எடிசன், லூமியர்.ஜார்ஜ் மிலி, டி .டபிள்யூ.கிரிபித், ஐஸன்ஸ்டைன் ஜான் போர்ட் ஆர்சன் வெல்ஸ் அகிராகுரசோவா ஆகியோர் மைல்கற்களாக இன்றும் காலங்களால் மேலும் மேலும் புகழை அடைந்துவருகின்றனர்.அவர்கள் விட்ட இடத்திலிருந்து அதனை அடுத்த்கட்டத்துக்கு எடுத்துச்சென்ற ஆளுமைகளுள் இத்தாலியின் இரு இயக்குனர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.அதுவும் ஒரேகால்கட்டத்தில் ஒரே இயக்குனரிடம் பணிபுரிந்த ஒரே தேசத்தைசேர்ந்த இருவர் ஒரேசமயத்தில் உலகசினிமாவை தம்பக்கம் திருப்பிபார்க்கசெய்ததும் அதிசயமான ஒன்றுதான். . அவர்கள் தங்களது கவித்துவமான சினிமாமொழியால் அழுத்தமான தடங்களை உலகசினிமாவில் பதித்துக்கொண்டனர். ஃபெட்ரிக்கோ பெலினி ,மற்றும் மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி ஆகிய இருவர்தன் அந்த குறிப்பிடதகுந்த இயக்குனர்கள் .
உலகசினிமா வரலாற்ரின் இரண்டு முக்கியகாலகட்டங்களான நியோரியலிஸம் மற்ரும் பிரெஞ்சு நியூவேவ் ஆகிய இரண்டு அலைகளுக்குமிடையே பாலமாக இருந்தவர்கள் .


பெட்ரிக்கோ பெலினி Federico Fellini


உலகசினிமாவுக்குள் கவித்துவமான வெளிப்பாட்டை கொண்டுவந்த இயக்குனர் பெலினி இத்தாலியில் ரெமினி எனும் சிற்றூரில் 1920ல் ரோமன் கத்தோலிக்க பெற்றோர்களுக்குமகனாக பிறந்தவர். பெலினியை பால்யத்தில் பெரிதும் கவர்ந்தவை கார்டூன் புத்த்கங்கள். அதில்வரும் சாகசவீரர்களும் கோமாளிகளும் தேவதைகளும் அவரது மூளையின் கற்பனைபிரதேசத்தை சிறுவயதிலேயே அபகரித்துக்கொண்டனர். தொடர்ந்து அவ்ற்றை ஓவியங்களாக தீட்டிபழகிய பெலினியின் வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை உருவாக்கியது அவர்கள் ஊருக்குள் திடீரென முளைத்த ஒரு சர்க்கஸ் கூடாரம்.சர்க்கஸ் அவருக்குள் புதியகதவுகளை திறந்துவிட்டது .கனவுகளில் கோமாளிகள் அவரை சுற்றீ சூழ்ந்தனர் .திடுமென ஒருநாள் அவருக்கு அதிர்ச்சி.சர்க்கஸ் ஆட்கள் கூடாரத்தை காலிசெய்துகொண்டு புறப்பட்டு வரிசையாக வண்டிகளுடன் சென்றனர். சிறுவன் பெலினிக்கு தன்கனவுகள் தன்னிடமிருந்து முழுவதுமாய் பிடுங்கப்பட்டு பாரவண்டியாக ஊர்ந்துசெல்வது போன்ற வேத்னை . அந்த சோகத்துடன் வண்டியை பின் தொடர்ந்தான். அவர்கள் சென்ற ஊரிலேயே இவனும் அவர்களுடன் இரண்டுநாட்கள் தங்கிவிட்டு வீடு திரும்பியதாக அவரை பற்றி ஒருபால்யகதை கூறுகிறது.பெலினியின்படங்களை ப்பார்ப்பவர்கள் அவரை சிறுவயதில் பாதித்த அந்த சர்க்கஸ் உலகத்தின் மிச்ச சொச்சங்களை உணரமுடியும்.அந்த சிறுவயது நிகழ்வுக்கு பின் அந்த ஏக்கத்தோடு .கோமாளிகளையும் தேவதைகளையும் சித்திரங்களாக வரையத்துவங்கிய பெலினி மெல்ல ஓவியராக மாறினார்.

பிற்பாடு பெலினி பதினாறம் வயதில் ரோம் நகருக்கு சென்றபோது அவரது வாழ்க்கையும் அகன்ற திரைக்கு மாறத்துவங்கியது.பத்திரிக்கைகளுக்கு கார்ட்டுன் களை வரைந்து கொடுத்துக்கொண்டிருந்த பெலினிக்கு நகைச்சுவை துணுக்குகள் எழுதுவதில்தான் ஆர்வம் மிகுந்திருந்தது. இச்சமயத்தில் ஒரு பத்திரிக்கை சந்திப்பு நிமித்தமாக பெலினி நியோரியலிஸத்தின் முக்கிய பிதாமகரும், மார்க்ஸிய சிந்தனையாளரும், பைசைக்கிள்தீவ்ஸ் உட்பட பல படங்களின் திரைக்கதையாசிரியருமான ஜவாட்டினியை சந்திக்க சென்ற போதுதான் பெலினியின் வாழ்க்கை சினிமாவுக்குள் நுழைய துவங்கியது. தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதைகளை எழுத துவங்கியவர் கிட்டதட்ட 20படங்களில் இணை திரைக்கதையாளாரக பணிபுரிந்தபின் முதல் நியோரியலிஸ படமாக கருதப்படும் ரோம் ஓபன் தி சிட்டி படத்தில் அதன் இயக்குனர் ரோபர்ட்டா ரோஸலினியிடம் இணைஇயக்குனராகவும் இணை திரைக்கதையாசிரியராகவும் பணிபுரிந்தார்.அவரது முதல் வெற்றி என்று சொல்லும் வகையில் இப்படம் ஆஸ்கார் விருதில் சிறந்த திரைக்கதைக்கான பிரிவில் பரிந்துரைக்ககப்பட்டது. இதே இயக்குனரிடம்தான் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனியும் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதகுந்தது. அதன்பிறகு வேரிட்டி லைட்ஸ் Variety Lights (1950), படத்தின் மூலமாகஇயக்குனராக தன்னை தகவமைத்துக்கொண்டாலும் பெலினிக்கு இரண்டாவது படமான The White Sheik தான் அவரை இயக்கும்னராக அங்கிகரித்தது. ஆண்டோனியோனி எழுதிய கதையை வைத்துக்கொண்டு தனது நண்பர் Tullio Pinelli யுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருந்தார். ஆனால் என்ன காரணத்தாலொ ஆணடனியோனிக்கு அவர்கள் எழுதிய திரைக்கதையில் திருப்தியில்லை. அத்திரைப்ப்டம் The White Sheik பிற்பாடு வெளியாகி வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்த படமாக் அங்கீகரிக்கப்பட்டு பெலினிக்கு உலக அந்தஸ்தை உருவாக்கிதந்தது.ஆனால் அதனைக்காட்டிலும் பெரும்புகழையும் அழுத்தமான அவரது முத்திரையையும் தக்கவைத்த திரைப்படம் லா ஸ்ட்ராடா.

பெலினியிடம் ஒரு திரைப்படவிழாவின்போது நிருபர் ஒருவர் இப்படிக்கேட்டார்
மனித குணங்களில் சிறந்த ஒன்றாக எதை மதிப்பிடுவீர்கள் ?
பெலினியின் பதில்
-சக மனிதனின் மீதான அவனது நேசம்
உடனடியாக அடுத்த் கேள்வியும் வந்தது

அப்படியானால் மனிதனின் ப்ரச்னையாக நீங்கள் கருதுவது
-அவனுடைய ஈகோ

லா ஸ்ட்ராடா வில இந்த இரண்டு கூறுகளும் எதிரெதிர் புள்ளியில் இருந்து கதையை நகர்த்துவதை நம்மால் சுலபமாக உணரமுடிகிறது. இந்த இரு கூறுகளை வைத்து அவரது மொத்த திரைப்படங்களையும் கூட மதிப்பிட முடியும்.ஒரு நாடோடி வித்தைக்காட்டுபவனுக்கும் ஒரு தற்குறி அபலைபெண்ணுக்குமிடையிலான் உறவை இப்படம் சித்தரித்தது. ஆண்டனி க்வின் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாசினா. பிற்பாடு தொடர்ந்து அவரது படங்களில் நாயகியாக நடித்த மாசினா அவரது மனைவியாகவும் வாழ்க்கையில் பங்கேற்று இறுதிவரை உடனிருந்தார்.இது போலவே இப்படத்தின் இசையமைப்பாளரான நினோ ரோட்டா பெலினியின் திரைப்படங்கள் அனைத்திலும் தொடர்ந்து பங்களிப்பு செய்தார்.

சர்க்கஸை போலவே பெலினியை மிகவும் வசீகரித்த இன்னொரு விஷ்யம் அமெரிக்க சினிமாவில் அப்போது அதிகம் வந்த பரபரப்பு பத்திரிக்கையாளர்களை நாயகனாக கொண்ட படங்கள் .அதில் அவர்கள் அணியும் கோட்டு தொப்பி ஆகியவை பெலினியை மிகவும் வசீகரித்த்ன அதன் வெளிப்படுதான் 1956ல் வெளியான லா டோல்சே விட்டா La Dolce Vita (1960). இப்படத்தில் நாயகனாகநடித்தவர் பெலினியின் ஆஸ்தான நாயகனான மார்சலோ மாஸ்ட்ரியானி. Marcello Mastroianni.

நியோரியலிஸ அலையின் கடைசிபடமாககூட கூறலாம் .இப்படம் வெளியான சமயங்களில் இத்தாலியின் வறுமைநிலை முழுவதுமாக மாறி மீண்டும் தன் பகட்டான கோட்டை அணியத்துவங்கிய காலகட்டமாக இருந்ததால் மக்களின் ரசனையிலும் மாற்றம் வரத்துவங்கியது. சூழலுக்கெற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் கலைமனம் பெலினியினுள்ளும் கவித்துவ ஊற்றை அவரது அதீத கற்பனைகளை திரைப்படமாக மாற்ற முயற்சிக்க துவங்கியது. பிற்பாடு இதுவே அவரது முத்திரையுமாக மாற துவங்கியது.

தொடர்ந்து அந்த புதியபாணியில் அவர் எடுத்தபடம் 8½.
இப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமானது.ஒரு இயக்குனர் தனது அடுத்தபடத்திற்கு என்ன கதை என தெரியாமல் குழம்புவதுதான் கதை.
தன் படங்கள் அனைத்துமே ஒருவகையில் தன் சுய சரிதைதான் என பெலினி சொல்வதை இப்படம் அப்பட்டமாக நமக்கு நிரூபிக்கிறது. தொடர்ந்து இதே பணியில் வெளியான் படங்கள் Juliet of the Spirits (1965), Satyricon (1969), Casanova (1976), மற்றும் City of Women (1980).[33]மூலம் பெலினிபடங்கள் என்றாலே அவை கனவுத்த்னமை நிரம்பியவை எனும் அழுத்த்மன முத்திரையை அவருக்குபெற்றுதந்தன. இந்த அவரது கனவுலக பயணம் அவரது "VOICE OF THE MOON" 1990 எனும் இறுதிபடத்துடன் முடிவுக்குவந்தது.
வாழ்நாள் சாதனையாளராக அவரை அங்கீகரித்த ஆஸ்கார் விருதுகமிட்டி அவரை 1993ல் கவுரவித்தது. அடுத்த சிலநாட்களில் மரணம் அவரை அணைத்துக்கொண்டது. அவர் இறந்த ஆறவாது மாத்திலேயே இறந்து போன அவரது மனைவியும் மிக்கச்சிறந்த நடிகையுமான மாசினா தன் இறப்பின் மூலம் தங்களுக்கிடையிலான உறவை உலகிற்கு முன்னுதாரணமாக விட்டுச்சென்றார் அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டில் மறைந்த மாசினா சிறந்த நடிப்புக்காக ஆஸ்காவிருதை பெற்றவர் என்பது குறிப்பிடதகுந்தது





.

மைக்கேல் ஏஞ்சலோ ஆண்டோனியோனி Michelangelo Antonioni

நம் வாழ்வின் மிகப்பெரிய தடைகளே நமக்குநாமே போட்டுக்கொண்டிருக்கும் இந்த ஒழுக்கவிதிகள்தான். நம்மை சுற்றி அறிவியல், பொருளாதரம் அனைத்திலும் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிற போது வாழ்க்கை மட்டும் பழைய கட்டுக்களில் உழல்வது நம்மை கோழைத்த்னத்திற்கும் அசமந்ததுக்குமே இட்டுச்செல்கிறது என கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்தஇயக்குனருக்கான உரையில் மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டோனியோனி தன் படங்கள் குறித்த அபிப்ராயத்தை கூறினார்.அவர் மட்டுமல்ல இந்த இருத்தலியல் ப்ரச்னைதான் இரண்டாம் உலக்போருக்குபின் ஐரோப்பாவையே உலுக்கி எடுத்துக்கொண்டிருந்தது. ஒருபக்கம் காம்யூவும் சார்த்தரும் இலக்கியத்தில் இந்தப்ரச்னைகளை அலசிக்கொண்டிருக்க தன் படங்களின் மூலம் சத்தமில்லாமல் கலையாக மாற்றிக் கொண்டிருந்தார் ஆண்டோனியோனி. இத்தாலியின் பெராரா நகரில் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆண்டோனியோனிக்கு அவரது பண்காரவாழ்க்கை உருவாக்கிய தடைகள்தான் அவரை கலைஞனாக மாற்றியது. பிரம்மாண்டமான அவரதுவீட்டு இரும்பு வாயில்கதவுகள் அவரது குழந்த்மையின் ஏக்கத்தை
ஜன்னல் வழியாக ஒருபிஞ்சுக்கைபோல நீளச்செய்தன.அந்த ஏக்கம் வீட்டினுள்ளேயே விளையாட்டுபொருட்கள் மூலம் கட்டிடங்களையும் வீதிகளையும் சமைக்க வைத்து. தனக்கு பிடித்த்மான வகையில் கட்டிடங்களை மாற்றிமாற்றி கட்டியதன் மூலம் படப்பு மனோநிலை தூண்டப்பெற்ற ஆண்டோனியோனி தொடர்ந்து ஓவியத்திலும் இசையிலும் தன் கவனத்தை குவித்தார்.அது அவரை பதினோராவது வயதில் வயலின் இசைக்கலைஞராக மாற்றி தந்தது.

தொடர்ந்து 1940ல் ரோம் நகருக்கு சென்ற ஆண்டோனியோனியும் பெலினியை ப் போலவே துவக்கத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்தார்.பின் ரோபட்டா ரோஸலினியிடம் உதவி இயக்குனராக இணைந்துகொண்ட ஆண்டோனியோனி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் படம் Cronaca di un amore (Chronicle of a Love, 1950)
பெலினியை போலவே நியோரியலிசத்திலிருந்துதான் ஆண்டோனியோனி தன் கணக்கை துவக்கினார்.ஆனாலும் அடுத்த பத்து வருடங்கள் வரை அவருக்கு அந்த பாணி கைக்கொடுக்க வில்லை. பின் மெல்ல தடம் மாறினார் 1960ல் வெளியான் அவரது லாஅவெஞ்சுரா L'avventura (1960),கேன்ஸ் விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்து இப்படம் எதார்த்த்த்திலிருந்து விலகி அழுத்தமான உணர்வுகளை காட்சிபடிமங்களாக மாற்றும் மிகு அழகியல் தன்மையுடன் தன் உணர்வுகளை சினிமாவாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் இடம் பெற்ற அவரது நீளமான டேக்குகள் உலகசினிமாவில் அதுவரையில்லாத ஒரு அழகை கூட்டித்தந்தன. இதன் வெற்றியைத்தொடர்ந்து தன் பாணியைகண்டுகொண்ட ஆண்டோனியோனி . La notte (1961), L'eclisse (1962),என் அடுத்தடுத்த படங்கள் மூலம் இப்பாணியை கைக்கொண்டார். இதில் மார்சிலோ மாஸ்திரியானி நடித்த லா நோட்டி படம் 11வது பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்தபடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.. லா எக்ளிஸ் திரைப்படத்தில்தன் அவர் அவர் காலத்தால் மாறாத ஒரு அழகுபெட்டகத்தை நாயகியாக கண்டெடுத்தார். மோனிகா விட்டி எனும் அந்த நடிகை தொடர்ந்து அவரது பல படங்களில் நாயகியாக நடித்தார்.
தொடர்ந்து கார்லோ புயண்டி எனும் த்யாரிப்பாளர் அவரை அவர் இஷ்டத்துக்கு பூரண சுதந்தரத்துடன் இயக்கிதருமாறு அழைப்புவிடுக்க ஆண்டோனியோனிக்கு
தன் மனதிலிருந்த இலக்கியவாதியை உசுப்பிவிட்டார். அர்ஜெண்டைன எழுத்தாளரான் ஜூலியா கொத்தஸார் எழுதிய ப்ளோ அப் எனும் சிறுகதையை அடிப்படையாகக்கொண்டு ப்ளோ அப் எனும் பெயரிலேயே ஒருபடத்தை இயக்கினார்.உண்மையில் திரைப்பட் மாக்கலுக்கு சவாலான் ஆழ்ந்த மொழிச்செறிவும் இல்லகிய புலமையும் கொண்ட கதையை முழுக்கவும் தன்பணியில் எடுத்து அறிவுலகுக்கு தன் திறமையை எடுத்துக்கூறினார்.
திரைப்பட மொழ்யில் கவித்துவம் எப்படி சாத்தியம் என்பதற்கு இப்பபடம் ஒரு நல்ல உதாரணம் . 1972ல் இவரது மார்க்ஸிய ஈடுபாடுகாரணமாக சீனா இவரைதன் நாட்டிற்கு அழைத்து தங்களது நாட்டைப்பற்றி Chung Kuo, Cina,எனும் டாக்குமண்டரி படத்தை எடுத்து தருமாறு பணித்தது. உடன் .தங்களது நாட்டில் திரைப்படத்துக்கான சரியான பாதையை போட்டுத்தருமாறு அழைத்தது.ஆனால் அந்த படத்தை பார்த்த்தும் இது சீனாவின் கம்யூனிஸ கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி அப்படத்தை முடக்கி வைத்த்து.
பிறகு 2004ல்தான் அவரது படத்தின் பெருமையை தாமதமாக உணர்ந்த சனாஇ அவருக்காக ஒரு விழாசை எடுத்து அதில் அப்படத்தை முத்ல்முறையாக காட்சிபடுத்தியது.
பிறகு ழான் காக்டோ எனும் பிரெஞ்சு நாவலாசிரியரின் The Eagle With Two Heads. எனும் கதையை அடிப்படையாக கொண்டு மோனிக்கா விட்டிநடிக்க The Mystery of Oberwald 1980ல் எனும் பட்த்தை இயக்கினார். 1985ல் பக்கவாதத்தால் மூளை பாதிக்கப்பட்டு செயலிழந்த ஆண்டோனியோனி மீண்டும் 1995ல் ஒருபடத்தை இயக்கினார் Beyond the Clouds (1995),.எனும் அப்படத்தை அவரால் தொடர்ந்து இயக்க முடியவில்லை உடல் நலம் உழைக்க மறுத்து. இத்னால ஜெர்மன் இயக்குனர் விம் வெண்டர்ஸிடம் மீதிபடத்தை இயகுமாரூ பணித்தார்.ஆனால் அவர் எடுத்த ஷாட்டுகள் பிடிக்கவில்லை என பலவற்றை எடிட்டிங்கில் ஆண்டோனியோனி வெட்டித்தள்ளினார்.வெனிஸ் திரைப்படவிழாவில் இப்படம் சிறந்த படத்துக்காக தேர்ந்தெடுத்து பரிசை இருவருக்கும் பகிர்ந்தளித்து. 1994ல் சிறந்த பஃப்ங்களிப்புக்காக அவருக்கு வாழ்நாள் சாதனை விருதை அளித்து கவுரவித்து.
ஆனாலும் அவரது திறமைக்கேற்ற அங்க்கிக்காரம் இன்னும் கிடைக்கவில்லை என சக உலகசினிமா சிற்பியான் ஸ்வீடன் இயக்குனர் பெர்க்மன் ஒரு முறை ஆதங்கப்பட்டார். ஆச்சர்யப்படும்படியாக பெர்க்மனும் ஆண்டோனியோனியும் ஒரேநாளில் 2007 ஜூலை 30ல் தங்களது உடலைவிட்டு பிரிந்து உலக் சினிமாரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர்
தொடரும்