22 ஆகஸ்ட், 2010

desiyam

               தேசியம்
 ஆட்டுக்கார சிறுமியின்
 கிழிந்த பாவாடையிலும்
 உழவனின் கோவணதிலும்
 கதிர் சுமக்கும் பெண்ணின்
 நைந்த ரவிக்கையிலும்
 நமது தேசியக்கொடியின்
 வட்டம் தெரிகிறது !
 சோளக்கொல்லையில்
 குருவியோட்டும் -சிறுவனின்
 பசித்த குரலிலும்
 மூணாம் சாமத்தில்
 வீறிடும் ஏழைகுழந்தையின்
 வறண்ட ஓலத்திலும்
 நமது
 தேசியகீதம்
 ஒலிக்கிறது !
 விஷ சாராயம்
 குடித்து -கூட்டம்
 கூட்டமாக மடிவதில்
 நமது சமத்துவம்
 தெரிகிறது!
 அரசியல்வாதிகள்
 அள்ளிவிடும்
 கரன்சிமழையில்
 நம் பொருளாதார -உயர்வு
 தெரிகிறது !(இன்னும் )
          --தணிகைபாரதி

கருத்துகள் இல்லை: