08 நவம்பர், 2011

தலித்தியத்தை ஒடுக்கும் தமிழ் தேசிய உள்ளடக்க அரசியல்

"ஹிந்து ஹிந்துஸ்த்தான்"  "திராவிட திராவிடர் திராவிடநாடு" "தமிழ் தமிழர் தமிழ் தேசியம்"  எனும் பெயரில் ஆதிக்க ஜாதிகள் நடத்தும் ஆதிக்க வெறி அரசியல். நூறு ஆண்டுகளுக்கு முன்பு சாக்கியர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல. நாங்கள் தனி சமூகம் என்று சொன்ன போது, நீங்களும் இந்துக்கள் தான், நீங்கள்  ஒடுக்கப்பட்ட இந்துக்கள் உங்களை தனித்து பார்ப்பது இந்து சமூகத்தை பிரிப்பது என்று ஜாதி இந்துக்கள் இந்து மத ஒற்றுமையை பேசினார்கள்.ஹிந்து ஹிந்துஸ்தான்  தேசியத்தை எதிர்த்தவர்களை ஆங்கிலேயர்களின் அடிவருடிகள் தேச துரோகிகள் என்று பட்டம் கட்டி ஒடுக்கினர். ஜாதி இந்துக்களே கோயில் நுழைவு போராட்டம் நடத்தி சாக்கிய (தலித்) மக்களை இந்துக்களாக ஆக்கினார்கள். கோயில் நுழைவு போராட்டம் நடத்த அழைப்பு விட்டபோது, இந்துக்களே அல்லாத எங்களுக்கு கோயில் நுழைவு எதற்கு என்று கேட்டார்கள் சாக்கிய தலைவர்கள். கோயில் நுழைவு போராட்டம் நடத்தி வீரர்கள் ஆனார்கள் ஹிந்து மத பெரியார்கள். ஜாதி இந்துக்கள் தங்களை திராவிடர்கள் தமிழர்கள் என்று இன அரசியல் பேசியபோது நாங்கள் தமிழர்கள் அல்ல திராவிடர்கள் அல்ல அவர்களுக்கும் மூத்த குடிகள் என்று திராவிட தமிழ் இன வெறி அரசியலுக்கு எதிர் குரல் எழுப்பினார்கள் சாக்கிய மக்கள். திராவிட தமிழ் இன வெறியை எதிர்த்து குரல் கொடுத்தவர்களை இன துரோகிகள் என்றும் ஆரிய அடி வருடிகள்  என்றும் முத்திரை குத்தி அவர்களை அவமானப்படுத்தினர். மூத்த குடிகள் எனும் அர்த்தத்தில் சொல்லப்பட்ட ஆதிதிராவிடர்கள் ஆதிதமிழர்கள் எனும் வார்த்தைகளை. மூத்த தமிழர்கள் உண்மை தமிழர்கள் எனும் அழகிய வர்ணனைகளை உருவாக்கி ஹிந்து (மத) திராவிட (இன) தமிழ் (மொழி) எனும் பாசிச முகாம்களுக்குள்ளே அடைத்தனர். "ஹிந்து ஹிந்துஸ்த்தான்"  "திராவிட திராவிடர் திராவிடநாடு" "தமிழ் தமிழர் தமிழ் தேசியம்" எனும் பெயரில் ஆதிக்க ஜாதிகள் நடத்தும் ஆதிக்க வெறி அரசியலுக்கு ஒத்து போனவர்கள் எல்லாம் ஆதிக்க ஜாதியினரால் பெருமை படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் தான் உண்மையான சமூக போராளிகள் என்று பட்டங்கள் கொடுத்து பெருமைப்படுத்தப்படுகின்றனர். இன மொழி மத தேசியங்களுக்கு எதிரான, ஜன நாயகம், வர்க்க போராட்டம், ஜாதி எதிர்ப்பு என்பதெல்லாம் இந்திய தேசியம் அடைஞ்ச பிறகு நாமக்குள் பேசி தீத்துக்கொள்ளலாம் என்று சொல்லி சாக்கிய இயக்கத்தை ஒடுக்க்கியது போல தமிழ் தேசியம் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்கின்றனர். ஹிந்து-திராவிட-தமிழ் எனும் உள்ளடக்க அரசியலில் சாக்கிய மக்களுக்கு சமபங்கு கிடைக்காது என போராடுபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் பட்டங்கள் பிரிவினை வாதிகள், ஜாதிய வாதிகள், இன துரோகிகள், ஆங்கிலேயர்க்கும், ஆரியருக்கும். அடிவருடிகளான பச்சோந்திகள். ஆனாலும் இந்து திராவிட தமிழ் அரசியலில் சரணடையாத தலித்தியம் தனித்துவத்துடன் உயித்திருக்கிறது...

கருத்துகள் இல்லை: