25 செப்டம்பர், 2012

“The Appeasement of Radhika”

தஞ்சை மாவட்டம் நாகேஸ்வரத்தில் ஒரு தேவதாசிக் குடும்பத்தில் பிறந்த முத்துப்பழ‌னி என்ற‌ பெண் க‌விஞ‌ர்.தெலுங்கில் எழுதிய‌வ‌ர்.காம‌த்தின் ஆண்கள் பார்வையில் மேல்நோக்கிய‌ பார்வையில் வெளிவந்த 12ஆம் நூற்றாண்டில் ஜெயதேவர் இயற்றிய “கீதகோவிந்தத்தைத்” தழுவி தெலுங்கில் “ராதிகா சாந்தவனத்தை” வேறு கோணத்தில் இயற்றினார். ஆங்கிலேய‌ர‌ ஆட்ச
ியில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ நூல். தெலுங்கிலிருந்து ஆங்கில‌‌த்தில் மொழிபெய‌ர்ப்பின் நூல் பெய‌ர் “The Appeasement of Radhika” (Penguin Publications).
இதிலும் இத‌ழ் சுவை உண்டு. ஆனால் கவனிக்கவேண்டியது பெண்ணின் பார்வையில் க‌ண்ண‌னின் இத‌ழ் முறைய‌ற்ற‌ பாலிய‌ல் தொட‌ர்பில். (Incest).
ராதை க‌ண்ண‌னுக்கு அத்தை முறை.ராதை க‌ண்ண்னை நினைத்து வேட்கையின் வார்த்தை வெளிவ‌ருகிற‌து முத்துப்ப‌ழ‌னியின் பிர‌தியில்

“உன் உதடுகளால் என் உதடுகளை ரொம்ப அழுத்தாதே

வலிக்கிறது” என்பேன்

அவன் இன்னும் இன்னும் அழுத்துவான்

“என் கூந்தலை இழுக்காதே நமது ரகசியம் வெளிப்பட்டுவிடும்”

கூந்தலை மேலும் இழுத்து எரிச்சலூட்டுவான்

“முலைகளை அழுத்தாதே வெட்கமாக இருக்கிறது”……

ஓ..சொல்ல மறந்து விட்டேன்..இக்க‌ட்டுரையை எழுதிய‌வர் மீனா.. (Cimi Meena) தமிழின் இள‌ம் ப‌டைப்பாளி பெண்ணிய‌வாதி, க‌விஞ்ர். திருவ‌ண்ணாம‌லையில் ஆசிரிய‌யாக‌ பணியாற்றுகிறார். அபார‌மாக‌ எழுதியுள்ளார். மூல‌நூல் என‌க்கு கிடைக்க‌வில்லையால் மொழியாக்க‌த்தை ச‌ரிபார்க்க‌முடிய‌வில்லை. ஆனால் முக்கிய‌ அரிய‌/ஆளுமையையும்/வேறு கோண‌த்தையும் த‌மிழுக்கு அறிமுகப்ப‌டுத்தியுள்ளார். ஹென்றி மில்லர் வாசிப்பனுவம் எனக்கு கிட்டியது.
வாசிக்க‌லாம் மீனாவின் க‌ட்டுரையை ….
———————————————-

ராதிகா சாந்தவனம் : பெண்ணுடலும் பாலியல் வேட்கையும் – முத்துப்பழனி ஒரு முன்மாதிரி —மீனா

தஞ்சை மாவட்டம் நாகேஸ்வரத்தில் ஒரு தேவதாசிக் குடும்பத்தில் பிறந்த முத்துப்பழனியால் இயற்றப்பட்டது, புகழ்பெற்ற சிருங்காரக் காப்பியமான “ராதிகா சாந்தவனம்”. 12ஆம் நூற்றாண்டில் ஜெயதேவர் இயற்றிய “கீதகோவிந்தத்தைத்” தழுவி தெலுங்கில் “ராதிகா சாந்தவனத்தை” அவர் இயற்றினார். ஆனால் கண்ணனின் காதலையும் ராஸலீலைகளையும் முக்கியத்துவப்படுத்திய ‘கீதகோவிந்தம்’ முத்துப்பழனியின் “ராதிகா சாந்தவனத்தில்” தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. உண்மையில் ‘கீதகோவிந்தம்’ மட்டுமல்ல, காலங்காலமாய் கட்டமைக்கப்பட்டுவந்த ஆணாதிக்கப் பாலியல் மையவாதங்கள் அனைத்துமே தலைகீழாய்ப் புரட்டிப்
போடப்பட்டன ,சுக்குநூறாய் உடைக்கப்பட்டன.
ஆணுடலை முதன்மைப்படுத்திய ஜெயதேவருக்கும் பெண்ணுடலை முதன்மைப்படுத்திய முத்துப்பழனிக்குமான இந்த வேறுபாடு ஒரு ஆண் மொழிக்கும் பெண் மொழிக்குமான வேறுபாடு மட்டுமன்று. ஒரு ஆண் மொழிக்கும் தேவதாசியின் மொழிக்குமான வேறுபாடும்கூட. சங்க இலக்கியங்கள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என நமது பெண்கவிகளின் பாலியல் வெளிப்பாடுகள் பல நூறாண்டுகளுக்கு முன்பே இலக்கியத் தோற்றம் கண்டிருக்கின்றன என்றாலும் அவற்றின் மொழிக்கு ஒரு வரம்பு இருந்தது ; அவர்களின் தாபத்திற்கு வகுக்கப்பட்ட ஒரு வரையறை இருந்தது. ஆனால் – நிலப்பிரபுத்துவ அடிமைத்தனத்திற்கு ஆட்பட்டிருந்தாலும் – கல்வி, சொத்துரிமை ஆகியவற்றினூடாய் ஓரளவு பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றிருந்த தேவதாசிப் பாரம்பரியம் ஒப்பீட்டளவில் விடுதலை பெற்றிருந்தது. அந்த அடிப்படையில்தான் முத்துப்பழனியின் இந்தக்காதல் காவியம் தனக்கு முந்தைய பெண்கவிகள் எல்லாம் எட்டமுடியாத எல்லையைத் தொட்டுப்பார்த்தது.
“ராதிகா சாந்தவனத்தின்” கதைப்போக்கு, கண்ணன் – ராதை குறித்து வெகுமக்களிடம் படிந்துபோயிருக்கிற பிம்பங்களுக்கு முற்றிலும் நேரெதிரானது. கண்ணன் – ராதைக்கு இடையிலான உறவு என்பது கலாச்சாரசமூகம் அங்கீகரிக்கக்கூடிய – அனுமதிக்கக்கூடிய முறையான திருமண உறவு அன்று ; அது புனிதக்கட்டிற்குள் அடங்கமறுக்கும் இச்சைகளின் உறவு ; கலாச்சாரத்தைக் கொட்டிக் கவிழ்த்த காதலின் பிணைப்பு ; பொதுப்புத்தியின் மொழியில் சொல்வதானால் அது ஒரு “கள்ளத்தொடர்பு”. முறையற்ற (incestuous) தொடர்பும் கூட. ராதை ஏற்கனவே திருமணமானவள். கண்ணனைவிட வயதில் மூத்தவள். கண்ணனைத் தூக்கி எடுத்து வளர்த்தவள். எல்லாவற்றிற்கும் மேலாக, - கண்ணனின் வளர்ப்புத் தந்தை – நந்தகோபனுக்குத் தங்கை ; கண்ணனுக்கு அத்தை முறை. நமது இலக்கியங்கள், மரபு, மதம் ஆகியவற்றில் இத்தகைய முறையற்ற பாலியல் உறவுகளுக்கு ஒரு இடம் இருந்தது கவனிக்கத்தக்கது.
இந்த மரபை இழைபிரித்துக் காட்டுகிற வகையிலும் ஒரு முன்னோடி இலக்கியமாக “ராதிகா சாந்தவனம்” தன்னை நிறுவிக்கொள்கிறது. ஆணாதிக்கச் சமூகத்தின் இலக்கணம், கற்பு, ஒழுக்கவாதம் எல்லாவற்றையும் அத்துமீறிய இந்தக் காதலையும் அச்சம், மடம், நாணங்களை உதறித்தள்ளிய பெண்ணுடலையும் படைத்துக்காட்டிய முத்துப்பழனியின் ‘வன்மை’ உள்ளபடியே வியக்கத்தக்கது. பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்தக் காவியத்தின் கவிதை வெளிப்பாடும், சொற்செட்டும் பாலியல் விவரணைகளும் – இன்றைய பெண்ணிய உடல்மொழிகளுக்கு எல்லாம் முன்னோடியாகத் திகழும் பாங்கை அவசியம் படித்தறிய வேண்டும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட பிரதாபசிம்மனின் அரசவை நர்த்தகியாக இருந்த முத்துப்பழனி இயற்றிய இக்காவியத்தை தேவதாசி மரபில் உதித்த இன்னொரு அறிஞரும் கலைஞருமான புட்டலஷ்மி நாகரத்தினம்மாள் 1911 இல் முழுமையாக மறுபதிப்புச் செய்தார். அன்றைய தேசியவாதியும் தெலுங்கின் பெருங்கவியுமான கந்துகூரி வீரேசலிங்கம் போன்றோர் அச்செம்பதிப்பைக் கடுமையாக எதிர்த்ததும், அதன் பொருட்டு அன்றைய ஆங்கில அரசு அந்நூலுக்குத் தடை விதித்ததுமான வரலாறு ஏற்கனவே பலராலும் சொல்லப்பட்டுள்ளது.
வாவில்லா ராமசாமி சாஸ்திரலுவின் பதிப்பகத்தின் மூலம் ஆறணா விலையில் வெளியிடப்பட்ட (1911) இப்புத்தகத்தைப் பற்றி, தெலுங்கு இலக்கிய இதழான ‘சசிலேகா’ இவ்வாறு விமர்சித்தது : “ ஒரு விபச்சாரி இயற்றிய நூலை இன்னொரு விபச்சாரி வெளியிடுகிறாள்”.ஆனால் இத்தகைய எதிர்ப்புகளுக்கு மாறாக இந்நூலுக்கான ஆதரவும் இலக்கியவாதிகளிடம் இருந்து வெளிப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்பு சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த – ஆந்திர கேசரி என்று பரவலாக அழைக்கப்பட்ட – தங்குதுரி பிரகாசம் அவர்கள் இந்நூலின் மீதான தடையை நீக்கினார். தடையை நீக்கிய பின்பு அவர் பெருமிதத்தோடு சொன்னார் : “தெலுங்கு இலக்கியத்தின் அணிகலனில் சில முத்துக்களை மீண்டும் பதித்திருக்கிறேன்”.
நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் 584 பாடல்களாகத் தெலுங்கில் இயற்றப்பட்ட “ராதிகா சாந்தவனம்” தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “The Appeasement of Radhika” என்னும் நூலாக வெளிவந்திருக்கிறது. சந்தியா முல்சந்தானி மொழிபெயர்த்த இந்நூலை ‘Penguin Books’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. (விலை. 250).
மங்கல வாழ்த்து, நூல் எழுந்த வரலாறு, புரவலர் புகழ்ச்சி, கவிஞரின் குலப்பெருமை என வழமையான இலக்கிய மரபோடு எழுதப்பட்ட இந்நூல், மகரிஷி சுகமுனி, ஜனக மன்னனுக்கு இக்காதல் காவியத்தை விவரிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ராதை, கண்ணனோடு இக்காவியத்தில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கிய பாத்திரம் இலாதேவி. இவள் நந்தகோபனின் மைத்துனன் கும்பகாவின் மகள். கண்ணனைப் போலவே இலாவையும் ராதை தான் வளர்த்தாள். இலா ரொம்பவும் வெகுளித்தனமானவள். ராதை, கண்ணனோடு பூஞ்சோலைகளில் மட்டுமல்ல. அவர்களின் படுக்கை அறைகளிலும் நுழைந்து விளையாடுபவள். பருவமடைந்த சில நாட்களிலேயே கண்ணனுக்கும் அவளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவரையும் வளர்த்தெடுத்த ராதைதான் திருமணத்தை முன்னின்று நடத்தினாள். இலாவிற்குச் சில அந்தரங்க அறிவுரைகளைச் சொல்லிக்கொடுத்ததோடு கண்ணனிடமும் அறிவுறுத்தினாள் : “இலா ரொம்பவும் சின்னப்பெண், பார்த்து நடந்துகொள்”.
ராதையின் இந்தப் பெருந்தன்மையும் முதிர்ச்சியும் தாமரைக்கண்ணனை – தன் காதலனைப் பிரிந்த ‘முதலிரவிலேயே’ அற்றுப்போனது. ராதை இப்படிக் கண்ணனைப் பிரிந்ததேயில்லை. தன் கணவன், மாமனார், மாமியார், சகோதரர்கள், உற்றார், உறவினர் எல்லோரது ஏச்சுக்கும் பேச்சுக்கும் அப்பால் அவள் கண்ணனைக் கூடினாள் ; ஊடினாள் ; புணர்ந்து களித்திருந்தாள். இந்த ‘முதலிரவின்’ பிரிவு அவளை வாட்டி வதைத்தது. பொம்மை பறிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் போல் இரவெல்லாம் அரற்றினாள். பொழுது புலர்ந்த மறுகணம் – இரவெல்லாம் இலாதேவியோடு முயங்கிக்கிடந்த – கண்ணனைத் தேடி ஓடினாள். புணர்ந்து அணைத்து ஆற்றாமை தீர்ந்தாள். இப்படியான சந்திப்பும் நீண்டநாள் நிலைக்கவில்லை. கண்ணன் தனது மாமியார் வீட்டிற்கு – இலாவின் தாய்வீட்டிற்கு – மறுவீடு சென்றான். இலாவின் மீதான புதுமோகத்தில் மூழ்கித்திளைத்தான். மெய் மறந்துகிடந்தான். அதேவேளை பசலை படிந்த ராதையின் உடல் இளைத்துத் துரும்பானது. மன்மதன் வைத்த நெருப்பில் தேகம் பற்றி எரிந்தது. கண்ணனின் நினைவுகளைச் சுமந்த இரவுகளை அவளால் தாளமுடியவில்லை. பணிப்பெண்கள் குழைத்துத் தேய்க்கும் சந்தனம், சவ்வாது, வாசனை மலர்கள் அனைத்திற்கும் அப்பால் அவள் தணியாது கொதித்தாள். பொறுக்கமாட்டாது தான் வளர்த்துவந்த அன்புக்கிளியைக் கண்ணனிடம் தூது அனுப்பினாள்.மஞ்சத்தில் கிடந்த கண்ணன் இலாதேவியோடு ஆயகலைகளையும் அரங்கேற்றுவதைக் கண்ட கிளி வாயடைத்துத் திரும்பியது. தன்னிலை மறந்து தன்னையும் மறந்துகிடக்கும் கண்ணனின் நிலை அறிந்த ராதை கொதித்தாள் ; வெகுண்டாள் ; காமனைத் தூற்றினாள். கண்ணனைப் பழித்துரைத்தாள். தன் விதியை நொந்து புலம்பினாள்.
அவ்வேளை ராதையின் நினைவுகள் கண்ணனை உசுப்பத்தொடங்கின. ஆசை அறுபது நாளும் மோகம் முப்பது நாளும் கடந்தபிறகு கண்ணனின் மனம் இயல்பாகவே ராதையை நோக்கிப் பாய்ந்தது. ஆம். ராதையின் மேல் அவன் கொண்டது பழகப்பழகப் புளித்துப்போகும் வெறும் மோகமன்று, அள்ள அள்ளப் பெருக்கெடுக்கும் காதலின் ஊற்று ; நேசத்தின் வற்றாத ஜீவநதி ; அன்பாகி அகன்றதொரு ஆழிப்பெருங்கடல். கண்ணன் தன்நிலை உணர்ந்தான். ராதையை மறந்து கிடந்த நாட்களை எண்ணித் துடித்தான் ; புலம்பினான் ; இழைத்த துரோகத்திற்காய் கூனிக்குறுகினான். கண்ணனின் தவிப்புகளைக் கண்ட இலாவின் சகோதரன் ஶ்ரீதமன் எள்ளிநகையாடினான். “ அந்த அடங்காப்பிடாரி என் தங்கையை விட உயர்ந்தவளா? இருவருக்குமான வயதை ஒப்பிட்டுப் பார்த்தாயா? இப்படியான ஒழுக்கக் கேடான உறவுகள் இறுதியில் உனக்குத் துன்பத்தைத்தான் தரும்” என்று எச்சரித்தான். ஶ்ரீதமனின் வார்த்தைகளைக் கொஞ்சமேனும் பொருட்படுத்தாத கண்ணன் அவனுக்குப் பதிலுரைத்தான் : “ தன் மகளைத் – தான் படைத்த பெண்ணை- மணந்த பிரம்மன் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லப்படுகிறானா? தன் குருவின் மனைவி தாராவை கடத்திச்சென்ற சந்திரன் நெறிபிறழ்ந்தவன் என்று கருதப்படுகிறானா? தனது நண்பனின் மனைவியைப் புணர்ந்த சூரியன் ஏமாற்றுக்காரனா? பூமாதேவி ஹரியின் அத்தை இல்லையா? கங்கை சிவனின் அத்தை இல்லையா? அகல்யா இந்திரனின் அத்தை இல்லையா? சீதை ராமனைவிட மூத்தவள் தானே? ரேவதி பலராமனைவிட மூத்தவள் தானே? ரதிதேவியும் கூட மன்மதனைவிட மூத்தவள் தானே?” இப்படியெல்லாம் காலங்காலமாய் காதல் கட்டற்றுக்கிடக்க என்னைப்பற்றி சொல்லவந்துவிட்டாய் என்று திருப்பி அடித்தான்.
ராதை சாதாரணப் பெண் இல்லை. அவள் மன்மதனால் எய்யப்பட்ட அம்பு. மணம் நாறும் சம்பங்கிப் பூ, இந்தப் பூலோகத்தில் ஒப்பிடவேமுடியாத சுவை மிகுந்த பண்டம். அவளோடு வாழ்ந்து களித்த ஒருவன்தான் இவ்வுலகின் எல்லாப் பேறுகளையும் பெற்றவனாக இருக்கமுடியும் என்றெல்லாம் சொல்லி ராதையின் நினைவுகளில் ஏங்கினான்.
அதற்குமேல் பொறுக்க முடியாமல், இலாவை சில நாட்கள் கழித்து வரச்சொல்லிவிட்டு, பிருந்தாவனத்திற்குத் திரும்புகிறான்.அவன் காத்துக்கொண்டிருந்த இரவுப்பொழுது நெருங்கியது. பிச்சைக்குக் கையேந்தும் ஒரு யாசகனைப் போல் ராதையின் வாயிலுக்கு முன் தவம்கிடக்கிறான். கோபக்கனலில் கொந்தளிக்கும் ராதை தனது பணிப்பெண்களிடம் சொல்லி கண்ணனை – அந்த நயவஞ்சகக்காரனை - வீட்டு வாசலைக்கூட நெருங்கவிடாமல் காவல் இருக்கப் பணிக்கிறாள். ராதையின் விசுவாசிகளான அந்தப்பணிப்பெண்களிடமும் – தூது வந்த அதே கிளியிடமும் மன்றாடிக் கெஞ்சிக்கதறி, கண்ணன் அனுமதி பெற்றதெல்லாம் பெருங்கதை. வரம்பெற்ற பக்தனாக ராதையின் அறைக்குள் நுழைந்த கண்ணன், அங்கே கண்ட காட்சியால் அதிர்ந்து போகிறான். ராதை அலங்காரங்களின்றி, அணிகலன்களின்றி, நறுமண திரவியங்கள், அன்றலர்ந்த வாசனைப்பூக்கள் எதுவுமின்றி சோர்ந்து கிடக்கிறாள். கண்ணனை ஏறெடுத்தும் பார்க்க மறுக்கிறாள். “ராதே நான் இழைத்த குற்றம் என்ன? நீதான் என்னை வளர்த்தாய்.. நீதான் எனக்குத் திருமணமும் செய்வித்தாய்.. இப்போது நீயே கோபம் கொள்வது சரியா? உன் இனிய குரலால் ஒரு வார்த்தை பேசமாட்டாயா? உன் உள்ளத்தை எனக்கு அளிக்கமாட்டாயா? நம் உறவை மறந்தாயா? ராதே! கெஞ்சிக்கேட்கிறேன் இரக்கம் காட்டு, அன்பைக்கொடு, கருணை செய்..” அவனின் கதறல்களுக்குக் கடைக்கண் பார்வையைக் கூடக் காட்டாத ராதை இறுதியாகக் கேட்கிறாள் :
“சுயமரியாதை ஒரு பெருஞ்செல்வம், அருட்பேற
சுயமரியாதை பெண்ணின் பெருமைக்கு அணிகலன
ஒருமுறை அதை இழந்துவிட்டால
பிறகு ஏன் உயிரோடு வாழ வேண்டும், தாமரைக் கண்ணா?”
ராதையின் இந்தச் சுயமரியாதைக்கு முன்பு மண்டியிட்டு, மன்றாடிக் கசிந்து கண்ணீர் மல்கிய கண்ணன், ஏதொன்றுக்கும் அசைந்து கொடுக்காத ராதிகாவைச் சாந்தப்படுத்த (“ராதிகா சாந்தவனம்”) ஆகக்கடைசியாய் அவளின் அடிபணிந்து, பாதக்கமலங்கள் தொட்டு, மெய்வணங்கிச் சரணாகதி அடையும் அந்தக் காட்சியைத் தரிசிக்க உண்மையில் ஒரு இலக்கியப்பேறு பெற்றிருக்கவேண்டும். ஆனபோதும் ராதை மனமிரங்கவில்லை. கண்ணன் பணிந்து சரணடைந்தபோது…
“அவன் அவள் பாதங்களில் பணிந்து வீழ்ந்தபோத
காற் சிலம்புகள் பேரொலி எழுப்
அவள் தன் இடது காலை உயர்த்தினாள
பிரம்மனும் சிவனும் முனிவர்களும் வணங்கி
பீலி சூடிய அந்தச் சிரச
மிருக பலத்துடன
எட்டி உதைத்தாள
எதிர்காலத்தில் சத்யபாமாவின் கோபங்கள
எதிர்கொள்ள அவனுக்குப் பயிற்சி அளிப்பதுபோ
அது இருந்தது”
(“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்பதாக இந்தப் பாடுகளையெல்லாம் பெரும்பேறுகளாக எண்ணி மகிழ்ந்து திளைத்த கண்ணன் இறுதியில் ராதிகாவைச் சாந்தப்படுத்திக் கூடி முயங்கிய காட்சிகள் படித்து அறியத்தக்கவை.) “சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை” என்று மீசை முறுக்கும் வழமையான பாலியல் ஆண்மையவாதங்களை புரட்டிப்போட்ட இந்தக் கவிதைகளின் கலகங்களுக்காக மட்டுமல்ல… இவற்றிற்கும் அப்பால் இத்தொகுப்பில் உள்ள, விரல்விட்டு எண்ணக்கூடிய பாலியல் கவிதைகளுக்காகவே இந்நூல் பலத்த எதிர்ப்பையும் அடக்குமுறைகளையும் அன்று எதிர்கொண்டது. கலாச்சாரவாதிகளைக் கொந்தளிக்கச் செய்த அந்தப் பாலியல் கவிதைகளுள் சில இங்கே :

கவிதை 1 : கிருஷ்ணனின் புதிய துணையான இலாதேவிக்கு ராதிகா சொன்னது
உன் காதலன் உன்னைக் கட்டித் தழுவும்போத
முலைகளால் அவனை மென்மையாக அழுத்து.
உன் கன்னத்தில் அவன் முத்தமிடும் போத
வெட்கத்தோடு மெல்லத் திரும்ப
உன் உதடுகளால் அவன் உதடுகளைத் தீண்ட
உனக்குள் நுழையும் போத
வேட்கையோடு இயங்கி அவனைக் கிளர்ந்தெழச் செய்.
கூடிய களிப்பில் அவன் சோர்ந்து போனால
மேல் ஏற
விரைந்து கைப்பற்ற
சோர்வைக் கள
செயலுக்குத் தூண்ட
மறவாதே, காதலில் அவனை விஞ்ச ஆளில்ல
சகல கலா வல்லவன
அவனை மென்மையாகக் காதல
உண்மையாகக் காதல
அவனையும் உன்னைக் காதலிக்கச் செய
என் அறிவுரை இதுவ
உனக்கா சொல்லித் தரவேண்டும்?

கவிதை 2 : இலாதேவி - கிருஷ்ணன் முதலிரவுக் கொண்டாட்டம்
நீண்ட நேரத்திற்குப் பிறகு மலர்கள் பொலிவிழந்த
முத்துக்கள் நெகிழ்ந்த
கழுத்தணிகள் சரிந்தபோத
அவனைக் புணர்வதற்க
அவள் மேலெழுந்தாள
தனது கலைகளை அரங்கேற்றினாள
காதற் களத்தில் அவனுக்குத
தான் நிகர் என நிறுவினாள்.

கவிதை 3 : முதலிரவுக்குப் பின் கிருஷ்ணனிடம் ராதை வினவியது
“ம்ம்ம்… அவளை முத்தமிட்டாயா கிருஷ்ணா?
ஓ! இல்லை, அவள் உதடுகள் கசக்கின்றன ராதா!
அவளுடைய முலைகளைப் பற்றிக் கசக்கினாயா?
இல்லை, அவை ரொம்பச் சிறியவை!
அவளின் தொடைகளைச் சுவைத்தாயா?
அவை மெல்லியவை ராதிகா!
அவளின் அழகிய உடலைத் தழுவி அணைத்தாயா?
அவள் ஒரு கொடியைப் போல துவள்கிறாளே!
ஓ! அவளுடன் கூடலை எப்படித்தான் கொண்டாடினாய்?
‘புதிய உறவு மகிழ்ச்சியை அளிக்காத
கலவிக்கு முந்திய அவளின் விளையாட்டுகள
உன்னைக் கட்டிப் போட்டு விட்டனவோ?
கலவி விளையாட்டுகள் பற்றி முன்பின் தெரியா
ஒருத்தியிடம் எப்படி ராதே!

கவிதை 4: கிருஷ்ணனைப் பிரிந்த ராதையின் நிலை
“உன் உதடுகளால் என் உதடுகளை ரொம்ப அழுத்தாத
வலிக்கிறது” என்பேன
அவன் இன்னும் இன்னும் அழுத்துவான
“என் கூந்தலை இழுக்காதே நமது ரகசியம் வெளிப்பட்டுவிடும்”
கூந்தலை மேலும் இழுத்து எரிச்சலூட்டுவான
“முலைகளை அழுத்தாதே வெட்கமாக இருக்கிறது”
நகங்களால் கீறி விளையாடத் தொடங்குவான
“சீக்கிரம், குரல் கேட்கிறது, வேகமாக முடி”
இரவு முழுக்க ஓயமாட்டான
“அமைதியாக இரு”
மேலும் உளறுவான
“உன் சிரிப்பை நிறுத்து”
மேலும் மேலும் குரலெடுத்துச் சிரிப்பான
அவனது குறும்புகள் என் இதயத்தை வாட்டுகின்ற
அவன் ஏன் என்னை வதைக்கிறான்?

கவிதை 5 : உளவு பார்த்துத் திரும்பி வந்த கிளி கிருஷ்ணனின் படுக்கை அறையில் நடந்ததை ராதையிடம் சொல்கிறது
ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்த
எல்லாவற்றையும் மறந்து கிடக்கிறார்கள
ஆரத்தழுவுகிறார்கள
உதடுகள் ஒட்டிக்கொண்டுள்ள
களித்துத் திகட்டிக் கிடக்கிறார்கள
ஒருவரை ஒருவர் பார்த்தபட
ஒருவர் மற்றவரின் உதட்டிலிருந்து தாம்பூலம் தரிக்கிறார்கள
கன்னங்கள் ஒளிர்கின்ற
தீண்டுகிறார்கள் சரிசெய்கிறார்கள
உடைகளை நகைகள
கட்டிலைச் சுற்றிய திர
சரியாக மறைத்திருக்கிறத
என உறுதி செய்துகொள்கிறார்கள
84 காமக் கலைகளையும
பரிசோதித்துப் பார்க்கிறார்கள
நான் எப்படிக் குறுக்கிட முடியும்?
அழகிய பெண்ணே!
கிருஷ்ணனை எப்படி உன்னிடம் இழுத்து வர முடியும்?

கவிதை 6 : ராதிகாவைப் பற்றி கிருஷ்ணன் தன் நெஞ்சொடு கிளத்தல்
கட்டற்ற வேகத்தோடும் காமத்தோடும
அவளை மீண்டும் மீண்டும் புணரும்போத
பாதியளவு மூடிய தாமரைக் கண்களோட
புன்னகைப்பாள் ஊக்குவிப்பாள
“அற்புதம்…………. அப்படித்தான்………….
நல்லாருக்கு….. அட்டகாசம்… இன்னும் இன்னும் கொஞ்சம்….” முனகுவாள
சுண்டி இழுப்பாள்.
என்னைக் கவர்ந்து மயக்கி
அந்தக் குரலை எப்படி மறப்பேன்?

கவிதை 7: ராதையுடனான உறவை எண்ணி கிருஷ்ணன் உரைப்பவை
உணர்ச்சிகள் கொப்பளிக்க அணைப்பாள
எனது இடையின் ஆடைகளுக்குள் அவள் கை நெகிழும
என் தொடைகள் அவள் தொடைகளை அழுத்தும்போத
மேலுயர்த்திக் காமத்தைப் பகிர்வாள
பெருகும் வேட்கையோடு கட்டிஅணைப்பாள
ஆசை ஊற்றெடுக்க மேலேறுவாள
இறுக்கித் தழுவுவாள
என் ஆண்மை திருப்தியுறும
மரத்தைக் கொடி படர்வது போ
எங்களின் உடலை இணைத்திருப்பாள
உணர்ச்சிப் பெருக்கெடுக்க என்மீத
பாம்பென ஊர்வாள
அவளைத் தவிர யாரேனும் இதைச் செய்யக் கூடுமா?
யாருமில்லை, அவளைத் தவிர யாருமில்ல

கவிதை 8 : ராதிகாவுடனான கிருஷ்ணனின் நினைவுகள்
“முத்தமிடாதே அழுக்காகி விடுவேன்” நான் சொன்னால
வேண்டுமென்றே என்னை அழுத்தி முத்தமிடுவாள
“தொடாதே, நீராடி வந்துள்ளேன்”
அவள் தன் முலைகளால் உணர்ச்சி பொங்க அழுத்துவாள
“என்மேல் விழாதே, அது முறையல்ல” நான் சீறும்போத
வேகமாக என்மேல் குதித்துச் சரிவாள
“இன்று நான் விரதம், இன்றைக்கு முடியாது…
“உன்னோடு உறங்க முடியாது எனக்கு வேண்டாம்” நான் சொன்னால
அவள் இன்னும் தீவிரமாய் என்னைச் சேர முயல்வாள

கவிதை 12: ராதை தன் கால்களால் எட்டி உதைத்த பின்பு கண்ணன் கூறியவை
அவள் அழுதபோத
ஹரி மீண்டும் பணிந்தான
அவள் பாதங்களைப் பற்றி,
“அன்பே, ஏன் அழுகிறாய்?
நான் உன்னைவிட உயர்ந்தவனா?
நீ இன்னமும் கோபமாக இருந்தால்…..
நான் உன்னுடையவன
உன் விருப்பம்போல நடப்பவன்… எல்லாவற்றிலும்”
அவன் எழுந்தான
அவளை மார்போடு இறுக அணைத்துக் கொண்டான்.
கிட்டத்தட்ட இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முந்தைய இவ்விலக்கியம் அது எழுதப்பட்ட காலத்தில் பெரும் எதிர்ப்புகளைப் பெறவில்லை. ஒரு இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் புதிதாகத் தோன்றிய தேசிய எழுச்சிக்காலகட்டத்தில் இந்நூல் மறுபதிப்பு (1911) செய்யப்பட்டபோது, கொச்சை அவதூறுகளோடும் கடும் எதிர்ப்புகளோடும் தடைசெய்யப்பட்டது. இந்தத் தடை ஒரு தற்செயல் நிகழ்வல்ல என்பதை தேசியவாத அரசியலைக் கூர்ந்து கவனிப்போர் அறியலாம்.

கருத்துகள் இல்லை: