22 அக்டோபர், 2011

சாதி, மத பேதங்கள்

தொழிலாளர்கள் கணக்குத் தீர்த்துக் கொள்ள வேண்டிய எதிரிகளில் ஒன்றாகப் பார்ப்பனீயத்தைப் பார்க்க நமது விமர்சகர்கள் தவறிவிடுகின்றனர். எனவே, அவர்கள் விமர்சனம் ஒரு தலைச் சார்பாக அமைந்துள்ளது.

நாம் கணக்குத் தீர்க்க வேண்டிய எதிரி பார்ப்பனீயம் என நான் கூறும்பொழுது, அதைத் தவறான புரிதலில் கூறவில்லை.

ஒரு சாதி என்ற முறையில், பார்ப்பனர்கள் பெற்றுள்ள அதிகாரம், சலுகைகள் சுயநலன்கள் போன்றவைகளை மட்டுமே நான் பார்ப்பனீயம் என்று எடுத்துக்கொள்ளவில்லை. இப்பொருளில், நான் பார்ப்பனீயம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உணர்வுகளை மறுப்பதே பார்ப்பனீயம் என்பதே என்னுடைய புரிதல்.

- [டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்]
"சாதி, மத பேதங்கள் என்ற நம்டைய பழைய எதிரிகளுடன், பலதரப்பட்ட எதிரெதிர் நோக்கமுடைய அரசியல் கட்சிகள் பலவற்றை நாம் சந்திக்கப் போகிறோம். அவைகளின் நேர்மையான செயல்பாடுகள்தான் நமது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யும்''

- [டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்]
 நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு. அகிம்சை நமது நாட்டின் பண்டைய கலாச்சாரம். மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.

- [டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்]
"மதம் என்பது மனிதனுக்காக; மனிதன் மதத்திற்காக அல்ல."
 நான் காட்டாற்று வெள்ளத்தில் கரைந்துபோகும் களிமண் இல்லை, அக்காட்டாற்று வெள்ளத்தின் போக்கையே திசை திருப்பிவிடும் பாறை."
விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உணர்வுகளை மறுப்பதே பார்ப்பனீயம்.மனித குலத்தை ஒரு சீராக மதிப்பதை மத விரோதமாகக் கருதும் மதம் மதமே அல்ல. அது ஒரு மன நோய்"கல்வி அறிவற்றவன் அதே நிலையில் இருக்க வேண்டுமென்றும் ஏழை ஏழையாகவே நீடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்ற மதம் மதமே அல்ல; அது ஒரு தண்டனை." மதம் ஒழியாதவரை,
கடவுள் ஒழியாதவரை,
சாதியும் ஒழியாது. "இந்து ராஜ்ஜியம்" என்பது உண்மையில் நடைமுறைக்கு வருமேயானால் சந்தேகமின்றி அதுவே இந்நாடு அழிவதற்குக் காரணமாகிவிடும்.""சுதந்திரச் சிந்தனையையும் சுய முடிவெடுக்கும் உரிமையையும் பெண்களுக்கு மறுக்கும் "மனு" பார்ப்பனருக்கு "மங்களகரமான மகிழ்ச்சியைக் குறிக்கும் பெயரையும்", சத்திரியருக்கு "அதிகாரத்தைக் குறிக்கும் பெயரையும்", வைசியருக்குச் "செல்வத்தை உணர்த்தும் பெயரையும்", சூத்திரருக்கு "ஊழியத்தை உணர்த்தும் பெயரையும்" அடையாளமாகச் சூட்டுமாறு விதித்தான். ஆனால் பஞ்சமர்களுக்கு "வெறுப்பை ஏற்படுத்தும் பெயரையும்", அதிலும் குறிப்பாக மகளிருக்கு இழிவைச் சூட்டும் பெயரையும் சூட்டுமாறு செய்தான்."தாய்மொழியில் குறைந்தது ஆரம்பக் கல்வியைக்கூட பெறமுடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது."கடவுளாக இருந்தாலும், அவன் குற்றமற்றவன் அல்ல என்று நேருக்கு நேர் நின்று வாதிடத் துணியும் கலகக்காரர்களுக்கு இந்த உலகம் கடமைப்பட்டுள்ளது. முற்போக்கான எந்தவொரு சமுதாயமும் தன் கலகக்காரர்களுக்கு தர வேண்டிய மதிப்பு குறித்து எனக்குக் கவலை இல்லை.

இந்துக்கள் - இந்தியாவின் நோயாளிகள்; அவர்களின் நோய் மற்ற இந்தியர்களின் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது. இதை அவர்கள் உணரும்படிச் செய்துவிட்டால், அதுவே எனக்குப் போதும்.
மதமாற்றம் என்பது சிறுபிள்ளை விளையாட்டல்ல. இது ஒரு பொழுதுபோக்கும் அல்ல. இதன் நோக்கம் மனித வாழ்வை வெற்றிகரமாக்குவதே.

ஒரு படகுக்காரன் பயணம் தொடங்கு முன்னால் எல்லா முன்னேற்பாடுகளையும் எப்படிச் செய்து கொள்கிறானோ, அவ்வாறே நாமும் நமக்குரிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மறு கரையை அடைய நம்மால் முடியவே முடியாது.

படகில் சரக்குகளை ஏற்றுவதற்கு முன்னால் அந்தப் படகுக்காரன் எத்தனை பயணிகள் படகில் ஏறப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்கிறான். நானும் அதே நிலையில்தான் இருக்கிறேன்."சாதி, மத பேதங்கள் என்ற நம்டைய பழைய எதிரிகளுடன், பலதரப்பட்ட எதிரெதிர் நோக்கமுடைய அரசியல் கட்சிகள் பலவற்றை நாம் சந்திக்கப் போகிறோம். அவைகளின் நேர்மையான செயல்பாடுகள்தான் நமது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்யும்'' தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தின் மூலம் எழுச்சியடைந்தால் இந்துக்கள், அம்மக்களின் அத்தகையத் தலைவரை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடுகின்றனர். இதையும் மீறி யாருக்கும் விலை போகாமல் மக்களுக்காகப் போராடும் உண்மைத் தலைவரைத் தொடர்ந்து குறை கூறுவார்கள். "விழுமியக் குறிக்கோளில் ஒருவன் கொண்டுள்ள மெய்யான ஈடுபாடும் திறமையும் நிரூபிக்கப்படும்போது அவனுடைய எதிரிகள் கூட அவனை மதிப்பார்கள்."

கருத்துகள் இல்லை: