05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 6

ஆறு




எந்த தீக்குச்சியை கொழுத்தினாலும் உடனே ஒரு பங்கு வாயு சுவாசத்தில் கலக்கும். இது இயல்பு. பெரும்பாலும் இதை கட்டுப் படுத்த முடியாது. மிக கவனமாக இதைத் தவிர்க்க திட்டமிட்டால் மட்டுமே தடுத்துக் கொள்ள முடியும்.





சைனைடு தடவிய தீக்குச்சியை பயன் படுத்திக் கொல்ல திட்டமிட்டேன். விஷ தீக்குச்சி ரெடி. சமீபமாக நானே அவளை அழைத்துக் கொண்டிருந்த படியால். இந்த முறை அவளாக வீட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தேன். விடுமுறையொன்றில் வருவதாக தொலைப்பேசினாள். சொன்னபடி வந்தும் சேர்ந்தாள். தேனீர் போட்டுத் தாவெனக் கேட்டேன். வாயு அடுப்பின் லைட்டரை மறைத்து வைத்து விட்டு தீப்பெட்டியை அடுப்பருகில் வைத்திருந்தேன்.



பாத்திரத்தில் பாலை எடுத்துக் கொண்ட அவள் லைட்டரைக் காணாது தீப்பெட்டியிலிருந்து குச்சியை எடுத்து உரசினாள். தீப்பெட்டி கையிலிருந்து விடுபட்டு பாலில் விழுந்தது. ’ஐய்யோ’ என்று பதரியபடி எடுத்து உதரினால். தீப்பெட்டி பாலில் விழுந்து விட்டதாகவும் அதனை வெயிலில் காய வைக்கும் படியும் என்னை அழைத்துக் கேட்டுக் கொண்டாள்.



மேலும் லைட்டரைத் தேடித்தா அல்லது வேறு தீப்பெட்டி வாங்கி வா என்று விரட்டினாள். எனது கொலைத்திட்டங்கள் இப்படி வேடிக்கையாய் தோல்வியடைந்து கொண்டிருப்பதை நினைத்து அழுகையாய் வந்தது. வேறு வழியில்லாமல் வேறு தீப்பெட்டி வாங்கி வந்தேன்.



தீப்பெட்டி விழுந்த பாலை சாக்கடையில் ஊற்றிவிட்டு பாத்திரத்தை நன்கு தேய்த்து கழுவிய பின் புதுப் பாலில் மணக்கும் தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். கோப்பையை ஏந்தியபடி ஒரு மாதப் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள்.



ஐரோப்பாவின் அந்த கால ஓவியப் பெண்ணைப் போல் உடலை சோபாவில் கிடத்தியிருந்தாள். அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். தேனீரின் ஒவ்வொரு மிடரும் எனக்குள் திடப் பொருளாய் இறங்கிக் கொண்டிருந்தது.



கருத்துகள் இல்லை: