05 மார்ச், 2012

அவளைக் கொல்ல பத்து வழிகள்-மதியழகன் சுப்பையா 9

ஒன்பது




விபத்துக்குள்ளாக்கிக் கொல்வது ஒன்றும் பெரிய காரியமில்லைதான். ஆனால் இதில் எனது உயிரையும் பணயம் வைக்க வேண்டும். விபத்துக்கான சூழலில் நான் தப்பித்து அவளை மட்டும் சிக்க வைக்க வேண்டும். இதற்கு அதிக கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.



அதே நேரம் அவள் முழுமையாக செத்துப் போகாமல் கை, கால் ஊனத்துடன் தப்பித்துக் கொண்டால் சிரமமாகி விடும். பின் காதலித்த பாவத்திற்காய் அவளை ஆயுசு முழுக்க கவனிக்கும்படியாகி விடும். இந்த திட்டத்தில் நானும் கூட செத்துப் போக வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.



ஆனாலும் சில முயற்சிகளுக்குப் பின் இந்த திட்டத்தை கை விட்டேன்

கருத்துகள் இல்லை: