19 ஜூலை, 2011

காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி


உலக சினிமா வரலாறு-மூன்றாம் பாகம் -நவீன யுகம்




முதல் பாகம்-1805முதல் 1927 வரை- மவுன யுகம்
இரண்டாம் பாகம் -1927 முதல் 1972 வரை-மறுமலர்ச்சியுகம்
இவற்றை தொடர்ந்து இந்த இதழிலிருந்து 1972 முதல் நவீன யுகம் துவங்குகிறது.

மவுன யுகத்தில் தனக்கான கலையை மொழியை வடிவம் கண்டு கொண்ட சினிமா மறுமலர்ச்சியுகத்தில் தனது கலையின் மகத்தான படைப்புகளையும் மகோன்னத கலைஞர்களையும் அடையாளம் கண்டு கொண்டது.இதுவரையிலான சினிமா வரலாற்றின் ஆகசிறந்த இயக்குனர்கள் மறுமலர்ச்சி காலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது போலவே படைப்புகளும்

அப்படியானால் நவீன யுகம் ?

கடவுளின் இன்மை தான் நவின யுகம் பிரதானபடுத்திய ஒற்றை கோஷம் .
கடவுள் இறந்துவிட்டார் எனற நீட்ஷே வின் புகழ்பெற்ற வாசகத்தை அந்த தத்துவத்துக்கு பின்னாலிருந்த அரசியல் காரணங்களை முன்னிறுத்துவதாக அமைந்தது நவீன யுகத்தின் ஆகசிறந்த திரைப்ப்டங்கள்.

அதுவரை கலைசினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையில் இருந்த கோடு மெல்ல அழிய துவங்கியது நவீன யுகத்தின் மிக முக்கிய விளைவு.. இரண்டுக்குமிடைப்பட்ட பேர்லல் சினிமா எனும் புதிய ரசனை உலக்மெங்கும் வரவேற்பை பெற துவங்கியது. இதனால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்க சினிமாக்கள்தான் இதனால வன்முறையின் மூலம் புதிய அறங்கள் அதிகம் வெளிச்சமிடப்ப்ட்டன.

அதுவரை மறுமலர்ச்சி யுகத்தில் பிரதானபடுத்தப்ட்ட மனித மனம் பின்னுக்குதள்ளப்பட்டது
வெற்று ரசனைகளை கடந்து சமூகத்தின் அவலங்கள் வன்முறை எனும் கவர்ச்சியின் மூலம் வெளிக்கொணரப்பட்டன.

..மேலும் தனி மனித இருப்பு குறித்த கேள்வி? .இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த தேடல்,ஆகியவற்றுடன் கற்பனையின் முழு வீச்சில் அறிவியலின் சாத்தியங்களை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படுத்துவது ஆகிய அமசங்கள் இந்தப் யுகத்தை ஆக்ரமித்திருந்தன.

சுருக்கமாக சொல்வதனால் வரவேற்பறையிலிருந்த காமிரா புழக்கடைக்கும் இடம் பெயர்ந்தது




நவீன யுகம் .1

காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி

”காட் பாதர் உண்மையிலே ..தலைசிறந்த படங்களில் ஒன்றா”?

இன்னமும் இந்த கேள்வி உலகம் முழுக்க சினிமாவிமர்சகர்களின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

ஒரு மாபியா கும்பல் தலைவனை பற்றிய கதை எப்படி கலைபடமாக அங்கீகரிக்கப்படும் ?

மேலும் வணிக சினிமாக்களின் குணம் என அது வரை கருதப்பட்ட மிகை கூறல்.,அதீத வன்முறை பிரம்மாண்ட தயாரிப்பு. பெரிய விநியோகம் போன்ற அத்தனை இலக்கணக்களும் கொண்ட இப்ப்டம் சிறந்த உலகப்ப்டம் என்றால் இத்ர படங்கள் என்ன ?

இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்று வரை யாரும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை ஆனாலும் இன்றும் உலக சினிமா தளத்தில் காட்பாதர் எல்லா காலத்திலும் ஆகசிறந்த பத்து படங்களுக்குள் ஒன்றாகவே கருதப்படுகிறது.


சினிமா நூற்றாண்டை ஒட்டி உலகம் முழுக்க நூறு முக்கிய விமர்சகர்களிடம் அவர்களுக்கு பிடித்த பத்து படங்களை ஒரு ஆங்கில இதழ் கேட்டு வாங்கி தொகுத்து வெளியிட்டிருந்தது. அதில் பரவலாக அனைவராலும் அங்கிகரிக்கப்பட்ட முதல் படம் காட்பாதர் தான்..


இதன் மூலம் காட்பாதர் படத்தின் வெற்றி சினிமா என்றால் என்ன கேள்விக்கு புதிய அர்த்ததை எழுதியுள்ளது.

அது வரை சினிமா மொழி .என்பது ஒளிப்பதிவு எடிட்டிங் என்ற இரு பதங்கள் மட்டுமே என்ற எண்ணத்தை இத்திரைப்படம் முழுமையாக மாற்றியது . சினிமா என்ற கலையின் ரகசியங்களில் அரங்க நிர்மாணம் , ஆடை வடிவமைப்பு, மேக் அப் எனப்படும் சிகை மற்றும் முக அலங்காரம் மற்றும் சப்தங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றின் கலை பங்களிப்பும் அதன் தரத்தை தீர்மானிக்க வல்லது என்பது இதன் மூலம் நீருபணமானது.


1972ல் முதல் பாகம் அடைந்த வெற்றி 1974ல் இரண்டாம் பாகத்தையும் 1987ல் மூன்றாம் பாகத்தையும் உருவாக்கிதந்தது. இந்த மூன்று பாகத்திற்கும் அமெரிக்க எழுத்தாளரான மரிய பூஸோ வின் காட்பாதர் எனும் நாவல்தான் அடிப்படை. . தீமையின் அறம் என்பது,பொருளாதாரத்தால் நசுக்கப்ப்ட்டவர்களின் ஒடுக்கப்ப்ட்ட வாழ்நிலை எனும் புதிய பரிணாமத்தை கவர்ச்சியான கதையாடல் மூலம் கூறிய இந்நாவலின் ஆசிரியர் மரியோ பூஸோ .அமெரிக்க வாழ் இத்தாலியர். வளர்ந்தது அமெரிக்காவில் மன்ஹாட்டனில் இருக்கும் ”நகரத்தின் சமயலைறையில்” ஆம். Hells kitchen. இதுதான் அந்த இடத்தின் பெயர்..


அமெரிக்காவில் ஹட்சன் நதியோரம் இருக்ககூடிய மன்ஹாட்டன் பகுதியின் 8 வது அவென்யூவில் 34 வது தெருவுக்கும் 54வது தெருவுக்கும் இடைப்பட்ட இந்த பகுதிதான் ஹெல்ஸ் கிச்சன் எனும் நகரத்தின் சமையலறையாக அழைக்கப்படுகிறது. எப்போதும் கொலை கொள்ளை வழிப்பறி ஆகியவற்றுக்கு ஆதிகாலம் முதலே அடைக்கலமாக இருந்த காரணத்தால் இதற்கு இந்த பெயர் வாய்த்துவிட்டிருந்தது. மஞ்சள் பத்திரிக்கையில் சிறிதுகாலம் வேலை செய்த மரியோ பூஸோ 1969ல் எழுதிய மூன்றாவது நாவல்தான் காட்பாதர். வெளீயான் நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெறத்துவங்கிய இந்நாவல் ஏற்க்குறைய எட்டு பதிப்பகங்களால். நிராகரிக்கப்ப்ட்டது. பெரும் சூதாடியும் குடிகாரனுமான மரியோ பூசோவுக்கு இருந்த கடன் தான் இந்த நாவலை எழுதவும் எழுதிய பக்கங்களை தூக்கிக்கொண்டு தயரிப்பாளர்களிடம் ஓடவும் வைத்தது .

அப்போது பாரமவுண்ட் சினிமாவுக்கு பொறுப்பிலிருந்த ராபர்ட் இவான்ஸ் மரியோபூஸோவின் நாவல்மீது ஒரு கண்வைத்து கணக்கு போட்டார். காரணம் அதில் இருந்த மசாலா வாசம் . கொள்ளைகூட்ட குண்டர்கள் பின்புலம் உடன் கொஞ்சம் இத்தாலிய கவுபாய் படங்களின் சாயல். இந்த காம்பினேஷனில் வெளிவந்தால் எந்த படமும் நிச்சயம் கல்லாபெட்டி கலகலக்கும் என கணக்கு போட்டார். அந்த கணக்குக்கு காரணம் அப்பொது செர்ஜியோனி லியோணியின் கவுபாய் படங்கள் கமர்ஷியலாக உலகம் முழுக்கவும் பெரு வெற்றி கொண்டாட்டத்தை நிகழ்திக்கொடிருந்தன..

அட்வான்ஸாக ஒரு தொகை கொடுத்து கதை உரிமையை வாங்கியவர் ராபர்ட் இவான்ஸ் இயக்குனராக யாரை போடலாம் என மண்டையை போட்டு உழப்பிக்கொண்டிருந்த போது ஆர்தர் பென், கோஸ்டா காவ்ரஸ், எலியா கஸன் , பிரட் ஜின்னமன் என பல பெயர்கள் பரீசலனைக்கு வந்தன. யாராக இருந்தாலும் ஒரு இத்தாலியர் இயக்கினால்தான் அந்த மாபியா குண்டர் தன்மையை படத்தில் கொண்டுவரமுடியும் என முடிவு கட்டினார்.ஆனால் அவ்ர் அழைத்த யாரும் முன் வரவில்லை. இறுதியா கவுபாய் படங்களை இயக்கி புகழ் உச்சத்தில் இருந்த செர்ஜியோ லியோனியையே இயக்குனராக முடிவெடுத்தார். ஆனால் அவருக்கோ தன் முன் வந்திருக்கும் வாய்ப்பு உலக சினிமாவரலாற்றில் அழுத்தமான முத்திரை பதிக்க போகும் படம் என தெரியவில்லை . இச்சமயத்தில்தான் வாய்ப்பு எனும் பகடை இத்தாலியை புர்வீக மாக கொண்ட இன்னொரு புதிய இயக்குனரான கொப்பல்லா வை நோக்கி உருண்டது .

இதற்கு முன் கொப்பல்லா நான்கு படங்கள் இயக்கியிருந்தார். அதில் ஒருபடம் மிகபெரிய வெற்றி. அப்படம் Finian's Rainbow, அப்போது பல பிரச்னை அவரும் அவரது நண்பரும் இயக்குனருமான ஜார்ஜ் லூகாசும் இணைந்து உருவாக்கிய ஜியோட்ரோப் எனும் ஸ்டூடியொ அப்பொது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. அதை சமாளிக்க உடனடியாக அவர் படம் பண்ணியாகவேண்டிய சூழல் . அதனால் ஒத்துக்கொண்டார்

சரி இயக்குனர் தேர்வாகிவிட்டது அடுத்தபிரச்சனை நடிகர் குறிப்பாக நாயகன் பாத்திரமான டான் கர்லோன் .

யாரை போடலாம் என்ற கேள்விக்கு பேரமவுண்ட் இயக்குனருக்கு சொன்ன ஒரே பதில் யாரை வேண்டுமானாலும் போடுங்கள் ஆனால் அந்த நபர் மட்டும் வேண்டாம் .. யார் அந்த நபர் .. பிராண்டோ மார்லன்பிராண்டோ . அந்த ஆள் ஒரு முசடன். எதற்கும் அடங்க மாட்டான் அவன் நடித்த சமீபத்திய படங்களும் தோல்வி வேறு. ஆனால் கெட்ட பந்தா வுக்கு மட்டும் குறைவில்லை . அவனை மட்டும் போடாதீர்கள் என திட்டவட்டமாக ஸ்டூடியோ நிர்வாகம் கொப்பலாவுக்கு சொல்லிவிட்டது.

ஆனால் எழுத்தாளரான் மரியோ பூசோவுக்கும் இயக்குனருக்கும் இந்த வேடத்தில் மார்லன் பிராண்டோ மட்டும்தான் அச்சு அசலாக பொருந்துவார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை .

தயாரிப்பாளர்களின் வறுபுறுத்தலுக்காக பலரையும் அழைத்து வசனம் பேசி காட்டசொன்னார்கள் . இத்தாலிய நடிகர்களான லாரன்ஸ் ஓலிவர் முதல் பைசைக்கிள் தீவ்ஸ் இயக்குனர் விட்டோரியா டிசிகா வரை எத்தனையோ பேரை வரவழைத்தார்கள். ம்ம்ஹூம் கொப்பல்லோ பிடிவாதமாக இருந்தார்.
மாரல்ன் பிராண்டோ ஒருவருக்குதான் இந்த பாத்திரம் பொருந்தும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனால் பேரமவுண்ட் நிர்வாகமோ மசியவே இல்லை. நாம் கேட்க போனால் அந்த ஆள் இன்னும் கொஞ்சம் திமிர் ஏறும். பிடிவாதமாக மறுத்துவிட்டனர் . இப்படியாக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் டான் கர்லோன் பாத்திரத்துக்கு இழுபறி நீடிக்க இன்னொருபுறம் இதரபாத்திரங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கபட்டனர்
டான் கர்லோனின் இளைய மகன் மைக்கேல் கர்லோன் பாத்திரத்துக்கு அல்பாசினொவும் மூத்த மகன் பாத்திரத்துக்கு மைக்கேல் கேன் உட்பட பலரும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதர தொழில் நுட்பகலைஞர்களும் முடிவாகிவிட்டது .ஆனால் இன்னமும் யார் அந்த நாயகன் ? அதுமட்டும் முடிவாகவில்லை. தயாரிப்பு நிறுவனம் கையை பிசைந்தது.

திறமையின் செருக்குக்கு முன் இறுதியில் பணம் பணிந்தது.
மார்லன் பிராண்டோ வுக்கு தகவல் சொல்லப்பட்டது . மரியோ பூசோ எப்போதோ அனுப்பியிருந்த நாவலை பிராண்டோவும் அவரது உதவியாளரும் தேடி எடுத்தனர். உதவியாளர் அலிஸ் இந்தவாய்ப்பை விட்டுவிடாதீர்கள் மிக சிறந்த பாத்திரம் என அழுத்தம் கொடுக்க பிராண்டோ கண்ணாடியில் முகம் பார்த்தார். தன் மேகப் மேனிடம் ஒரு க்ளீப்பை எடுத்துவரச்சொன்னார், .தலைக்கு ஜெல் போட்டு பின்னால் இழுத்து வாரினார். அடுத்த பத்தாவது நிமிடம் எதற்கும் அசையாத இரும்புத்தலையன். டான் கர்லோன் அங்கு தயாராக அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து கொப்பல்லோ வுக்கு அனுப்பி வைத்தார்.

படப்பிடிப்பு துவங்கியது. கொப்பல்லோ தன் கற்ப்னையின் அனைத்து ஜன்னல்களையும் திறந்தபடி காமிராமுன் இருந்தார். இதனால் படப்பிடிப்பில் நொடிக்கு நொடி மாற்றங்கள் தொடர்கதையாகின . இது தயரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது . பாரமவுண்ட் நிறுவனம் சட்டென கொப்பலோ வை இயக்குனர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அந்த இடத்தில் எலியாகஸானை கொண்டுவர முடிவு செய்துவிட்டது.

இளம் இயக்குனரான கொப்பல்லோவுக்கு இந்த செய்தி தெரியவந்தது. இது அவருக்கு பெரிய அவமானம் அது மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கைகே இது முற்றுபுள்ளியாகிவிடும் ..படப்பிடிப்பில் கொப்பல்லோவின் முகத்தில் தென்பட்ட சோகரேகை பிராண்டோவின் கூரிய விழிகளுக்குதப்பவில்லை.
விஷயம் அவருக்கு தெரிய வந்தது. ஒருதாளை கொண்டுவரச்சொல்லி அவசரமாக அதில் இரண்டு வரி எழுதி தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுத்தனுப்பினார்.

அதை படித்த தயாரிப்பாளர்கள் முகம் அதிர்ச்சியில் விக்கித்துக்கொண்டது.
“கொப்பல்லோ வைத்தவிர வேறு ஒரு இயக்குனர் இங்கு வந்தால் அடுத்த நிமிடம் நான் வெளியேறிவிடுவேன் ”.
.
பாரமவுண்ட் அடுத்த நாளே படப்பிடிப்பை தொடருமாறு கொப்பலோவுக்கு உத்தரவிட்டது.

கொப்பல்லோ யார் உண்மையில் சிறந்த இயக்குனரா..
பிராண்டோவே வியக்கும் அளவுக்கு அவரிடம் இருந்த திறமை என்ன..
(அடுத்த இதழில்)

கருத்துகள் இல்லை: