19 ஜூலை, 2011

சத்யஜித்ரே: இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல்

உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம்
17




கல்கத்தாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் பிரம்ம சமாஜம் தீவிரமாக இயங்கிவந்த போது அத்ற்காக த்ன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒருவருக்கு அபாரமான கலை ஆற்றல். எழுத்துஇலக்கியம் ஓவியம் வானசாஸ்திரம் என பலதுறையில் சிறந்து விளங்கினார். ஆனாலும் அவரால் த்ன் திறமைக்கேற்ற புகழையோ அங்க்கீகாரத்தையோ அடையமுடியவில்லை. அவர் பெயர் உபெந்திரகிஷோர் தன்னால் நிறைவேற்றமுடியாமல் போன தன் கனவை மகனாவது நிறைவேற்றுவான் என எண்ணிண்னார். அவரது மகன் சுகுமார் ரே வும் தந்தைய்யை போல அபாரமான கலைஆற்றல் கொண்டவராகத்தான் இருந்தார். ஆனாலும் என்ன சாபக்கேடு அவராலும் தன் திறமைக்கேற்ற புகழை ஈட்ட முடியவில்லை. ஆனால் உபேந்திரகிஷோரின் கனவை அவரது மகன் நிறைவேற்றாவிட்டாலும் அவரது பேரன் அவர் கனவை நிறைவேற்றினான்.அந்த பேரனின் பெயர்தான் சத்யஜித் ரே. பின்னளில் புகழ்பெற்ற இயக்குனரானபோது தாத்தாவின் கதை ஒன்றையே திரைக்கதையாக்கி அத்னை படமாகவும் எடுத்து அவரது தாத்தா உபேந்திரகிஷோரின் கனவை நனவாக்கினார்.மட்டுமல்லாமல் தனது தந்தை சுகுமார் ரேவை பற்றியும் ஒரு ஆவண்ப்பட்த்தையும் எடுத்து அவருக்கு புகழஞ்சலி சேர்த்திருக்கிறார். இப்படி தாத்தா கண்ட கனவையும் அப்பா கண்ட கனவையும் ஒரு சேர ரே நனவாக்குவதற்கு முக்கிய காரணம் யார் தெரியுமா ..ஒரு பெண் ஆமாம் அவர் ரேவின் தாயார். சுகுமார் ரேவின் மனைவி சுப்ரபா ரே. இத்த்னைக்கும் 1921 மேமாதம் 2ம் தேதி இருவருக்கும் மகனாக ரே பிறந்து மூன்றே வருடத்தில் அவரது அப்பா சுகுமார்ரே இறந்துவிட்ட நிலையில் தனியாளாக மகனை ஒரு கலைஞனாக மாற்றவேண்டும் என ஒரே பிடிவாதமய் இருந்து அத்னை சாதித்து காட்டியவர்தான் சுப்ரபா ரே

சுப்ரபா ரேவுக்கு உண்மையில் கலையின் மீதான் ஈடுபாடு கணவரிடமிருந்து பற்றியதோ அல்லது இயல்பாக இவருக்குள்ளும் ஊறிக்கிடந்ததோ தெரியவில்லை. கணவர் இறந்த நிலையில் கலையும் இலக்கியமும் சுபரபாரேவுக்குள் புதியவாசல்களை திறந்தன. மகனை பின்னாளில் சிறந்த கலைஞனாக உருவாக்கவேண்டும் எண்ணம் கொண்டார். இதன் காரணமாக அன்று வங்க உலகின் பெருமைமிக்க மகாகவியான தாகூரை சந்திக்க சிறுவன் ரேவை இழுத்து சென்றார். பின்னாளில் ரே இச்சம்பவத்தை தன் வாழ்க்கை வரலாற்றில் பதியவைத்துள்ளார். தன் அன்னையின் இலக்கிய ஈடுபாடுதான் தன்னை உலகமறிந்த இயக்குனராக்கியது என அச்சம்பவத்தை குறிப்பிடும்போது கூறியுள்ளார்.

பிற்பாடு பாலிகஞ்ச் ஹைஸ்கூலில் பள்ளிபடிப்பிலும் பிரசிடென்சி கல்லூரியில் பி.ஏ.பட்டபடிப்பும் முடித்தபின் அவரது அம்மா ஓவியம் மற்றும் நுண்கலை படிக்கும்படி தாகூரின் சாந்தினிகேதனில் இயங்கும் விஸ்வ பாரதி பல்கலைகழகத்தை பரிந்துரைத்தார். ஆனால் ரேவுக்கோ சாந்தினிகேதனில் சேர விருப்பமில்லை. காலமாற்றம் அவருக்குள் உருவாக்கியிருந்த புதிய சிந்தனைகாரணமாக பழமையில் திளைத்த சாந்தினிகேதனை ரே வெறுத்தார். ஆனாலும் அன்னையின் விருப்பத்தை அவரால் தாண்டமுடியவில்லை. சாந்தினிகேதனிலேயே சேர்ந்தார். ஆனால் அவரது எதிர்பாரா அதிர்ஷ்டமாக நந்தலால் போஸ் பினோத் முகர்ஜி போன்ற நவீன பாணி ஓவியர்கள் அங்கு ஆசிரியர்களாக இருந்து அவருக்குள் ஊறிக்கொண்டிருந்த கலைஆற்றலை செழுமைப்படுத்தினர். அவர்களின் மீது கொண்ட அபிமானம் காரணமாகத்தான் பிற்பாடு ரே இவர்களை குறித்து இன்னர் ஐ எனும் ஆவணப்படத்தை இயக்கியிருந்தார்.

ஓவியபடிப்பு முடிந்தகையோடு மாதசம்பள்ம் 80 ரூபாய்க்கு டி.ஜெ கெய்மர் எனும் ஒரு பிரிட்டிஷ் விளம்பர கம்பெனியில் காட்சிபடுத்துபவர் வேலைகிடைத்தது. தொடர்ந்து D.K GUPTA என்பவர் நடத்திவந்த SIGNET PRESS எனும் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தவர் அங்கு பதிப்பிக்கப்பட்ட பல்வேறு புத்தகங்களுக்கு அட்டைபடங்களை வரைந்து தந்தார். ஜிம் கார்ப்பட்டின் குமாவும் புலிகள் ஜவஹர்லால் நேருவின் டிஸ்கவரி ஆப் இந்தியா போன்ற புத்தகங்களின் அட்டை ரேவின் கைவண்ணத்தால் மிளிர்ந்தன. இச்சமயத்தில்தான் பிபூதி பூஷன் பாந்தோபாத்யாயாவின் பதேர் பாஞ்சாலி நாவல் அவரது மேசைக்குவந்தது. அதனை படித்து அவர் லயித்துக்கொண்டிருந்த அதேநேரத்தில் அவரது வாழ்வில் இன்னொரு முக்கியமான காரியமும் நடந்தது. பிற்பாடு இயக்குனராக பரிணமித்த சித்தானந்த தாஸ் குப்தா என்பவருடன் இணைந்து கலகத்தாவில் திரைப்படசங்கமொன்றையும் ரே துவக்கியிருந்தார். இதன் வழி அவருக்கு உலகசினிமாக்களின் பரிச்சயம் தொடர்ந்து கிடைக்க துவங்கியது. இச்சமயத்தில் அவருக்கு இன்னொருபுதிய வெள்ளைக்கார நண்பர் அவருக்கு அறிமுகமானார்.அவர் ஒரு ராணுவ வீரர். அப்போது இரண்டாம் உலகபோர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காரணத்தால் அமெரிக்கபடைபிரிவிலிருந்து அவரங்கு வந்திருந்தார். நார்மன் கிளார் எனும் நபருக்கும் ரே வுக்குமிடையில் ஒருநட்பு துளிர்க்க இருவரும் சிகரட்டை ஊதிக்கொண்டு கலகத்தா வீதிகளில் உலகசினிமாக்களை பற்றி மணிக்கனக்கில் பேசிக்கொண்டிருந்தனர். நார்மன் கிளார் ரேவுக்கு அப்போது வந்துகொண்டிருந்த அமெரிக்க சினிமாக்களை பற்றி தொடர்ந்து தகவல்களை கொடுத்து ரேவின் அறிவையும் கனவையும் ஊதிபெருக்க செய்தார்.



1949ல் ரேவுக்கு பிஜோய தாஸ் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. இருவருக்கும் சந்தீப் என்ற ஒரு மகன் பிறந்தான். மகன் பிறந்த வேளையில்தான் ரெனுவார் தன் ரிவர் படத்தின் படப்பிடிப்புக்காக கலகத்தா வர ரேவுக்கு அவரோடு பழகவும் அவரது படப்பிடிப்பை பார்க்கவும் வாய்ப்புகிடைத்தது. தொடர் நிகழ்வுகள் காரணமாக அவரது வாழ்க்கை சினிமாவை நோக்கி தீவிரமாக உந்திதள்ளப்பட்டவேளையில்தான் லண்டன் பயணமும் நிகழ்ந்தது. அங்கு பைசைக்கிள்தீவ்ஸ் படத்தை காண நேரிட்டது இந்த தொடர்நிகழ்வுகளின் இறுதி முடிச்சு அல்லது கடைசி நிகழ்வாக லண்டனிலிருந்து கப்பலில் திரும்பிக்கொண்டிருந்த ரே தன் மனதுள் சித்திரங்களாக தேங்கிக்கிடந்த பிப்பூதி பூஷனின் நாவல் பதேர் பாஞ்சாலிக்கு திரைக்கதை எழுததுவங்கினார்.

பதேர் பாஞ்சாலி 1955ல் வெளியான போது டைம்ஸ் ஆப் இந்தியா இப்படம் இதர இந்திய திரைப்படங்களில்லிருந்து முற்றிலுமாக வேறுபட்டது என புகழ்ந்து எழுதியது. இங்கிலாந்தில் உலகப்புகழ்பெற்ற பிரபல சினிமா விமர்சகரான லிண்ட்சே ஆண்டர்சன் பதேர் பாஞ்சாலியை முழுவதுமாக அதனை அக்குவேறூ ஆணிவேறாக பிரித்து ஆராய்ந்து உலகின் தலைசிறந்தபடங்களில் ஒன்று என எழுதியிருந்தார்,.அதே சமயம்
படத்துக்கு மோசமான விமர்சனங்களும் கிடைத்தன. அதிலும் குறிப்பாக பிரெஞ்சு இயக்குனர் ட்ரூபோ ..கைகளால் உண்னும் ஏழைமக்களை பற்றிய படங்களை பார்ப்பது எனக்கு அருவருப்பானதாக இருக்கிறது என கூறினார். இந்தியாவிலும் சில தகுதியற்ற பார்வையாளர்கள் இன்றுவரை பலரும் ரே ஏழ்மையை உலகநாடுகளில் காண்பித்து பணம் சம்பாதிக்கிறார் என கூறிவருகின்றனர். இப்படி பலரும் பலவிதமான கருத்துக்களை சொன்னபோதும் இன்றுவரை உலகின் மிகச்சிறந்த பத்துபடங்களில் ஒன்றாக பதேர் பாஞ்சாலி இருப்பது ஒன்றே அதன் முழுமையான வெற்றிக்கு சான்று.

பதேர் பாஞ்சாலிக்கு பிறகு அதன் தொடர்ச்சியாக ரே அபராஜிதோ மற்றும் அபுசன்சார் என இரண்டுபடங்களை இயக்கியிருந்தார். இவற்றில் அபராஜிதோ வெனிஸ் திரைப்படவிழாவில் தங்க கரடி விருதை பெற்று பெருமை சேர்த்து. ரேவின் இணை சகாக்களான மிருணாள் சென் ரித்விக்கட்டக ஆகியோர் ரேவின் படங்களில் பதேர்பஞ்சாலியயைவிடவும் அபராஜிதோவையே தங்களுக்கு பிடித்த படங்களாக குறிப்பிடுகின்றனர். அபராஜிதோ எடுத்தபின் அவருக்கு இதேவரிசையில் அடுத்த படம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. இடையில் இரண்டுபடங்கள் இயக்கியிருந்தார். அதன்பிறகு 1959ல்தான் அபு வரிசையின் மூன்றாவதுபடமான அபுர்சன்சார் படத்தை இயக்கி வெளியிட்டார். இதுவரை உலகில் இது போல முப்பட வரிசைகள் பலவந்திருப்பினும் ரேவின் இந்த அபு வரிசைதான் மிகச்சிறந்த ஒன்று என விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அபௌசன்சாரில் அவரால் அறிமுகப்படுத்தப்ட்ட அழகு தேவதை பின்னாளில் இந்தியாவே வியக்கும் உச்ச நட்சத்திரமாக மின்னியது. ஷர்மிளா டாகூர் என்ற பெயரே அக்காலத்தில் ரசிகர்களுக்கு பெரும் மயக்கத்தை தோற்றுவித்தது. தென்னிந்தியாவுக்கு ஆராதனாவின் மூலமாக அறிமுகமான அந்த நடிகையின் முக வாத்ஸல்யம் இன்றைக்கும் பத்திரிக்கை உலகில் மதிப்பிழக்காதது. இப்படியாக ரேவுக்கு அவரது அபு வரிசையின் மூன்றாவது படம் பல பெருமைகளை கொடுத்திருப்பினும் கலகத்தாவில் கடுமையான விமர்சனங்களையும் அது எதிர்கொண்டது.

ரே இதற்கு பிறகு அதிக விமர்சனங்களை எதிர்கொண்ட படம் சாருலதா. தான் எடுத்தவற்றுள் தலைசிறந்த படமென ரே அவர்களாலேயே குறிப்பிடப்பட்ட படம் அது. 1964ல் சாருலதா வருவதற்கு முன் தேவி, மகாபுருஷ், மகாநகர் தீன் கன்யா கஞ்சன் ஜங்கா போன்ற படங்களை அவர் இயக்கியிருந்தாலும் சாருலதா அவரது மேதமைக்கு தகுந்தசான்றாகவும் கருத்தியலாகவும் அதுதுணிசல்மிக்க படமாகவும் விளங்கியது. பொதுவாக ரேவின் திரைப்படங்களில் அவரது தனிப்பட்ட பார்வைகள் எதுவும் துருத்திக்கொண்டு வெளிவருவதில்லை. காட்சிகளை தன்னிச்சையாக நிகழவிட்டு, நுட்பங்களை கவனப்படுத்தி அதன் மூலம் பார்வையாளனின் மனதில் ஆழ்ந்த சலனங்களை உண்டாக்குவதில் மட்டுமே அவரது முழு கவனமும் இருக்கும். ஆனால் சாருலதாவில் இந்த விலகி நிற்கும் தன்மையை உடைத்துக்கொண்டு ரே தீவிரமான ஒரு கதையாடலை பார்வையாளனின் முன்வைக்க சிரத்தை எடுத்துக்கொள்வார். இதனாலேயே முந்தய படங்களில் இல்லாத வகையில் காட்சிகளில் ஒரு செயற்கைத்தன்மையும் இப்படத்தில் கூடியிருந்தது. இருப்பினும் நாயாகின் மன உணர்வுகளை ஆழமாக நாமே உணரும் வகையில் அவர் படமாக்கியிருந்தவிதம் மற்றும் நாயகியாக நடித்த மாதாபி முகர்ஜியின் முகபாவனைகள் ஆகியவை மற்றும் சுபத்ரோ மித்ராவின் அற்புதமான கறுப்புவெள்ளை ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய மதிப்பீட்டை உருவாக்கிதந்துள்ளன. கலாச்சாரமதிப்பீட்டில் இப்படம் கடுமையான தாக்குதல் தொடுத்திருந்ததை பலரால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை. விமர்சனங்கள் கருத்தியலாக மட்டுமல்லாமல் படப்பாகத்திலும் எழுந்தன. இன்றும் பதேர்பாஞ்சாலியை ரசிக்கும் சிலர் சாருலதாவில் ரே நிறைய கீழே இறங்கிவிட்டதாகவே புலம்புவர்.


சாருலதாவுக்கு பிறகு ரே தன்படைப்பாற்றலை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக வெவ்வேறான கதைக்களங்களில் ஈடுபாடு கொண்டார்.
1962ல் இவர் சந்தெஷ் பத்திரிக்கையில் எழுதிய ஒரு சிறுகதையை படித்துவிட்டு கொலம்பியாபிக்சர்ஸ் திரைப்படமாக எடுக்க முன்வந்தது. Aliyen என அதற்கு தலைப்பிடப்பட்டது. பீட்டர் செல்லர்ஸ் மற்றும் மார்லன்பிராண்டோ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். என்ன காரணத்தாலோ படம் ஆரம்ப நிலையிலேயே சுழன்றுகொண்டிருந்தது. பிற்பாடு பிராண்டோவுக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். படம் அப்பொழுதும் நகரவில்லை. சத்யஜித்ரேவுக்கு பெரிதாக தொகையும் அவர்கள் தரவில்லை. இச்சூழலில் படத்திலிருந்து ரே வெளியேறினார். பிற்பாடு கொலம்பியா பிக்சர்ஸ் பலமுறை கேட்டுக்கொண்டபோதும் ரே கதையின் உரிமையை தரமறுத்துவிட்டார்.

இந்த பைசாபெறாததிட்டத்தால் ரேவுக்கு கிடைத்த ஒரே லாபம் மார்லன் பிராண்டோவின் நட்பு மட்டும்தான். பிராண்டோ பிற்பாடு யூனிசெப்பின் பிராண்ட் அம்பாசடராக இந்தியாவுக்கு வந்த போது கல்கத்தவில் ரெவைவந்து சந்தித்தார்

இது நடந்த சிலவருடங்களுக்குபிறகு ஹாலிவுட்டில் 1982ம் ஆண்டு ஸ்பீல்பெர்க்கின் ஈ.டி படம் வெளியானபோது ரே அதிர்ந்தார் காரணம். ரேவால் முன்பு எழுதப்பட்ட ஏலியன் கதையை லேசாக மாற்றி ஈ.டி படம் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஸ்பீல்பெர்க்கிடம் கேட்டபோது ஸ்பீல் பெர்க் திட்டமாக மறுத்துவிட்டார். ரே மற்ரும் ஸ்பீல்பெர்க் குறித்த இப்ப்ரச்னை குறித்து ரேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆண்ரூ ராபின்சன் மேலும் பலதகவல்களை அப்புத்தகத்தில் கூறியுள்ளார்.

இடப்பட்ட காலத்தில் ரே குறிப்பிடத்தக்க சிலபடங்களைஎடுத்திருந்தார்.அதில் ஒன்று கோபி கைனே பாகே பைனே .தனது தாத்தா உபேந்திர கிஷோர் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதி ரே 1969ல் வெளியிட்டார். தொடர்ந்து பாலிவுட் நடிகையான சிமிகாரேவால் நடித்த ஆரண்யர் தீன்ராத்திரி ,பிரதிவந்தி,சீமபதா, இவை கலகத்தா நகரமக்கலீன் அவல வாழ்வை மயப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்தன. 1977ல் தன் முதல் இந்திதிரைப்படமாக முன்ஷிபிரெம்சந்த் எழுதிய உருதுகதையான சத்ரன் கிக்கிலாரி படத்தை எடுத்துவெளியிட்டார். இதர்உமுன் அவர் எடுத்த அனைத்து படங்களும் வங்காள மொழியை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. 1992ல் அவர் இறப்பது வரை
கரே பாரே, கண் ஷத்ரு, ஷகபொரொஷ்கா, மற்றும் அக்ண்டுக் போன்றபடங்களை அவர் தொடர்ந்து இயக்கிவந்தாலும் அவை அனைத்தும் அவரது தரத்திலிருந்து சற்றும் குறையாமல் அவரது ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருந்தது.

ஆவ்ணப்படங்களையும் சேர்த்தால் அவர் வாழ்நாளில் இயக்கிய படங்கள் மொத்தம் 35. ரே வெறுமனே ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் சிறந்த இசையமைப்பாளராகவும் .இசையின் நுட்பங்களைனைத்தையும் அறிந்தவர்.அவரே தனது படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.மட்டுமல்லாமல் அவர் ஒரு தேர்ந்த சித்திரக்காரர்.இதுமட்டுமா அவர் எழுதியகதைகள் இலக்கியதன்மை நிரம்பியவை வங்கால்ஹ்தின் குறிப்பிடத்தக்க ஐந்து சிறுகதை எழுத்தாள்ர்களூள் குறிப்பிடும் அளவிற்கு அவரது கதைகள் இன்றும் காலத்தை கடந்து நிற்பவை.இத்த்னை திற்மைகளில் தேர்ச்சி கண்ட இயக்குனர் உலக அரங்கில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே

ஆஸ்கார், வாழ்நாள் சாதனைக்கான் விருதையும் பிரெஞ்சு அரசாங்கம் லெஜண்ட் ஆப் ஹானர் விருதையும் தந்த பிறகுதான் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை அவருக்கு அவசரமாக வழங்கியது நாம் அனைவரும் நினைவில் கொள்ளதக்க விஷயம் ..


பொதுவாக ரேவின் திரைப்படங்க்ளில் வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு அவரது முந்தைய படங்களில் காணப்பட்டதாம் பிந்தைய படங்களினால் இல்லை என்பதுதான். அதற்கு காரணம் அவரது முந்தைய படங்களின் ஒளிப்பதிவாளரான சுபத்ரோ மித்ரா அவரை விட்டு பிரிந்தது. பிற்பாடு ரே சுபத்ரோவின் ஆளும்மையை மிகவும் புகழ்ந்துதள்ளுகிறார். செட்டில் காடாதுணியால் ஒளியை பிரதிபலிக்கசெய்யும் பவுன்ஸ் லைட்டிங் அவரது தனிச்சிறப்பு. அதே போல திரை தொழில் நுட்பத்தை பொறுத்தவரை கோடார்ட் மற்றும் ட்ரூபோ ஆகியோரின் பங்களிப்பு மகத்தானது என்றும் கூறுகிறார்

அவரது படங்கள் மிகவும் மெதுவாக நகர்கின்றன என்பது பொதுவாக ரேவின் மேல் பலரும் இன்றும் எழுப்பிவரும் குற்றச்சாட்டு. பலபிரபல விமர்சகர்கள் கூட இதனை தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இந்த குற்றசாட்டுக்கு ரேவின் சார்பாக அகிராகுரசேவா சொன்ன பதில் இங்கே கவனிக்கதக்கது. வாழ்வைமுழுமையாக உள்வாங்கிய அவரது படங்கள் மகாநதியை போன்றவை.அவை மெதுவாகத்தான் நகரும் .கைக்க்ட்டி கூர்ந்து கவனித்தால் அந்த ஆழமான நதி நமக்கு பல சேதிகளை சொல்லிச்செல்லும்.
அடுத்த இதழில்
ரோஷாமான், சினிமாக்களின் சிகரம்
நன்றி; புத்தகம் பேசுது நவம்பர் இதழ்


இதயங்களை ஊடறுத்து செல்லும் காட்சி ரயில் : பதேர் பாஞ்சாலி


உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 16


நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரொப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948ல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக்கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. கல்கத்தாவில் திரைப்படச்சங்கத்தை நிறுவி வழிநடத்தி வந்த இளைஞர்கள் சிலர் ரெனுவாரை சந்தித்து ஆச்சர்யபடுத்தினர். இளைஞர்களுக்கோ திரைப்பட் சங்கம் மூலமாக கண்டுரசித்த ஒருபடத்தின் இயக்குனரை நேரில் சந்தித்த மகிழ்ச்சி, ரெனுவாருக்கோ தன் படப்பிடிப்புக்கான இடத்தேர்வுக்கு இனி கவலைப்ப்டவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி. வந்தவர்களில் சற்று உயரமாக மூக்கு நீளமாக இருந்த அதிகம் பேசாத ஒரு இளைஞனின் ஆர்வம் ரெனுவாரை வசீகரித்திருக்கும் போல . படப்பிடிப்புகளுக்கு தவறாமல் ஆஜாரான அந்த இளைஞன் தனக்கும் இயக்குனராகும் ஆசை இருப்பதாக கூறி தான் அப்போது அட்டைப்படம் வடிவமைத்துக்கொண்டிருந்த ஒரு நாவலின் கதையை கூறினான்.

அந்த இளைஞன் கூறிய கதையை கேட்டு ரெனுவார் அப்போதைக்கு அந்த இளைஞனை தட்டி கொடுத்து உற்சாகபடுத்தினாலும் அவரே கூட அந்த கதை ஐந்தாறுவருடங்களுக்கு பிறகு உலகமே வியக்கும் அழியாக காவியமாக பதேர் பாஞ்சாலி எனும் பெயரில் படமாக வெளியாகி கேன்ஸ் திரைப்ப்டவிழாவில் பலரையும் வியக்கவைக்க போகிறது என்பதை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.

. இக்காலக்ட்டத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்துமே சினிமா எனும் புதிய மொழிக்கு தங்களாலான அணிகலனை புதுபுது இயக்குனர்கள் மூலம் அழகு பூட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியசினிமா மட்டும் ராஜாக்களையும் அவர்களது பிரம்மாண்ட செட்டுகளையும் விட்டு வெளியே வரவில்லை..இல்லாவிட்டால் மேடைநாடகத்தை ஒத்த நீளமான வசனம் மிகுந்த சமூகப்படங்களாகவே இருந்தன. இச்சூழலில். பிமல்ராய்,ரித்விக்கட்டக்,சேத்தன் ஆனந்த் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் சற்று வித்தியாசமான படங்களை எடுத்துவந்தாலும் அவர்களும் கூட இந்தியாவை விட்டு வெளியில் தாண்ட முடியாத சூழ்நிலை.இந்த நேரத்தில் 1950 ல் கல்கத்தவில் ரே அப்போது பணிசெய்துகொண்டிருந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜே கெய்மர் அவரை தொழில் நிமித்தமாக லண்டனுக்கு அனுப்பி வைத்தார். கிட்டதட்ட ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்த சத்யஜித்ரே லண்டனைவிட்டு புறப்படும்போது முழுக்க வேறு ஆளாக மாறியிருந்தார்.மனம் மிகுந்தபதட்டத்தில் இருந்தது அதற்கு காரணம் கிடைத்த குறைந்த அவகாசத்தில் அங்கு அவர் பார்க்க நேர்ந்த 90 திரைப்படங்கள். அதில் சிலகுறிப்பிட்ட படங்கள் அவரது உலகைமுற்றிலுமாக மாற்றின.அப்படி அவருக்குள் பாதித்த படங்கள் எவை தெரியுமா இத்தாலியின் நியோ ரியலிஸ அலையில் உருவான திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக ஒரு திரைப்படம்.விட்டோரியா டிசிகா வின் பை சைக்கிள் தீஃப் தான் அந்த அந்தபடம். படத்தின் அச்சு அசலான எதார்த்த்தை கடந்து படத்தில் சித்தரிக்கப்பட்ட சிறுவன் ரிசியின் அக உலகம் ரே வை வெகுவாக கவர்ந்திருந்தது.இப்போது ரிசி இருந்த இடத்தில் தான் எடுக்கவிருந்த நாவலின்கதையில் வரும் அபு இருந்தான் .

.சிறுவயது முதலே ரேவுக்கு குழந்தைகளின் உலகத்தோடு ஒருவித தீவிர ஈடுபாடு இருந்துகொண்டே இருந்தது..உண்மையில் வாழ்க்கை பெரியவர்களுக்கானது மட்டுமல்ல அங்கு குழந்தைகளும் சிறுவர்களும் வயதான பாட்டிகளும் இருக்கிறார்கள்.அவர்களின் உலகங்கள் பொதுபுத்தியில் இயங்கும் பெரியவர்களின் (இளைஞர்கள் மற்றும் நடுத்தரவயதுடையோரின்)
உலகங்களிலிருந்து வேறானவை.இதை உணர்ந்ததாலோ என்னவோ ரேவின் கேமராபார்வை எப்போதும் சிறுவர்களை குறிவைத்தே சுழன்று வந்தது, ஆனால் அன்றைய திரைப்படங்கள் உலகம் முழுக்கவும் அவரது பார்வைக்கு தலைகீழாகத்தான் சுழன்றன. இதனால்தான் முதல் முறையாக குழந்தைகளின் உலகத்தை ஓரளவுக்காவது அங்கீகரித்த பைசைக்கிள் தீஃப் அவரை மிகவும் தொந்தரவு செய்திருந்தது,லண்டனிலிருந்து கப்பலில் இந்தியாவுக்கு புறப்படும்போது இத்தகைய மனஅவசத்துடன் புறப்பட்டவர் கல்கத்தா வந்து இறங்குவதற்குள் முழு திரைக்கதைய்யையும் எழுதி முடித்திருந்தார்.படம் எடுக்க பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் இறுதியில் வேறு வழியேஇல்லாமல் அவரது மனைவியின் நகைகள் அவரது கழுத்தைவிட்டு இறங்கி அடகு கடைக்குள் ஓட அடுத்த நாள் காமிரா சுழலத்துவங்கியது. ரே தானே இப்படத்தை தயாரிக்க துவங்கினார். ஒளிப்பதிவாளராக சுப்ரதோ மித்ரா வை நியமித்தார் ரேவை போலவே சுப்ரதோ மித்ராவுக்கும் முன்பின் எந்த திரைப்பட அனுபவமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்வரை சினிமா கேமராவை தொட்டது கூட கிடையாது. ரெனுவாரின் ரிவர் படப்பிடிப்பின் போது வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்ட ரேவை போலத்தான் மித்ராவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள மட்டும் அனுமதிக்க பட்டார். அப்போது இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட கைக்குலுக்கிக்கொண்டு நண்பர்கள் ஆயினர் இருவரும். மித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரே தான் படம் எடுக்கும் போது நிச்சயம் உதவி கேமராமேனா சேர்த்துக்கொள்கிறேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் படம் துவங்கும்போது ரே சொன்ன தொகை கட்டுபடியாகாத காரணத்தால் பலரும் வர மறுக்க இறுதியில் வாய்ப்பு 21 வயதே ஆன சுப்ரதோமித்ரா ஒளிப்பதிவாளராகவே நியமிக்கப்பட்டார். அதே போல கலை இயக்குனரையும் ரிவர் படத்தில் பணி புரிந்த பன்சிதாஸ் குப்தாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். படத்தில் முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைப்பது என முடிவு செய்த ரேவுக்கு அபுவின் தந்தை பாத்திரத்துக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் வங்காள படங்களில் ஏற்கனவே நடித்து அனுபவம் பெற்ற நடிகரான கானு பாணர்ஜிய்யை ஓப்பந்தம் செய்ய வேண்டியதாகிப்போனது. அவரது மனைவி சரபோஜியாவாக நடிக்க ரேவின் மனைவி தன்னுடைய தோழி ஒருவரை கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார்.அவருக்கு முன்பே நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்கவே அவரை தேர்வு செய்து கொண்டார்.சிறுமி துர்காவாக நடிக்க நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. உமா தாஸ் குப்தா எனும் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆனால் அபு பாத்திரத்திற்கு மட்டும் சரியான சிறுவன் கிடைக்காதபோது அப்போதும் ரேவின் மனைவி வீட்டின் அருகில் இருந்த சிறுவன் ஒருவனை கொண்டு வந்தார்.
இறுதியில் பாட்டி இந்திர் பாத்திரத்துக்குத்தான் ஆளே கிடைக்கவில்லை. பின் ஒரு விப்ச்சார விடுதி ஒன்றில் அவர் எதிர்பார்ப்புக்குய் ஏற்றார் போல ஒரு வயது முதிர்ந்த கூன் விழுந்த பெண் இருப்பதை கேள்விப்பட்டு அவரை சென்று பார்த்த ரேவுக்கு அவரை பிடித்து போக அதன் பிறகுதான் படப்பிடிப்பு தளத்துக்கே ரே புறப்பட்டார்.

27 அக்டோபர் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பல பொருளாதார தடைகளால் அடிக்கடி நின்று போனது வருடங்கள் ஓடின. மீதிபடப்பிடிப்புக்கு தேவையான போதியபணம் கிடைக்காத சூழலில் ரே கைய்யை பிசைந்து கொண்டு நின்றபோது அவரது தாயார் ஒரு ஆலோசனை தந்தார். அதன்படி அப்போதைய வங்காள முதல்வர் பி.சி.ராய்க்கு தாயரின் வேண்டுதலுக்கிணங்க போட்டுகாண்பித்தார்.படத்தை பார்த்த முதல்வர் அதன் கவித்துவமான அழகியல்வசம் ஈர்க்கப்பட்டு மீதபடத்தை வங்காள அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் எடுக்க முடிவு செய்து அதற்குண்டான பொருளுதவிக்கு ஒத்துழைத்தார்.இறுதியில் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பின் மீண்டும் இரண்டுவருடங்களுக்கு பின் தொடரப்பட்டு முழுமையாக முடிந்தது. இது குறித்து ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசிய ரே உண்மையில் இடைப்பட்ட காலங்களில் மூன்று அதிசயங்கள் நிகழ்ந்தன. ஒன்று அபு வளரவில்லை, இரண்டு துர்காவும் வளரவில்லை, மூன்று இந்திர்பாட்டி இறக்கவில்லை.இந்த மூன்றில் ஒன்றுநடந்திருந்தாலும் இன்று பதேர் பாஞ்சாலிக்கு கிடைத்திருக்கும் பெயரும் புகழும் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே. நல்ல கலை என்பது திறமையுடன் சேர்ந்து சில அசந்தர்ப்பங்களாலும் ஆனதுதானோ என பதேர் பாஞ்சாலிகுறித்து ரே சொன்ன மேற்சொன்ன கூற்று நம்மை யோசிக்க வைக்கிறது.



படத்தின்கதை அபு எனும் சிறுவனின் பால்ய காலத்தை அவனது வாழ்நிலத்தை,சூழலை,அவனோடு வளர்ந்த புல் பூச்சி மரம் செடி கொடிகளை,அவனால் உட்கிரக்கிக்க முடியாத குடும்ப அவலத்தை வறுமையை விவரிக்க கூடியதாக இருந்தது. அபுவின் தந்தை ஹரிஹர ரெ காலம் காலமாக நிஷிந்பூர் கிராமத்தில் மத சடங்குகளை நிகழ்த்தி பிழைப்பு நடத்துபவர். வருமானம் மிக குறைவு ஆனாலும் அதைபற்றி கவலைப்படாமல் எப்போதும் பாட்டு கவிதைகள் என எழுதி என்றாவது ஒருநாள் அதன் மூலம் பெரிய பணம் ஈட்டிவிடமுடியும் என கனவு காண்பவர். இதனாலேயே குடும்பம் போதியவருமானம் இல்லாமல் கடன் வறுமை ஆகியவற்றில் சிக்கி தத்தளிக்க துவங்குக்கிறது. கணவன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாரே என மனைவி சரபோஜாயா விசனப்படுகிறாள் காரணம் அவர்களது மூத்தமகள் துர்கா. பத்துவயது நிரம்பியசிறுமிதான் என்றாலும் பெண் அல்லவா. துர்காவின் தம்பிதான் அபு .இருவருக்கும் நெருக்கமான இன்னொருவர் வயதான கண்தெரியாத இந்திர் எனும் பாட்டி . இந்திர்பாட்டிக்கு கூன் முதுகு பொக்கைவாய். பாட்டியின் மேல் ப்ரியம் கொண்ட துர்கா அடிக்கடி அடுத்தவீட்டுக்காரர்களின் மரங்களிலிருந்து கொய்யாபழங்களை திருடிக்கொண்டுவந்து தருவாள். இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் துர்காவை அடக்கி ஒடுக்கும்படி சர்பாஞ்சாவிடம் அடிக்கடி சண்டைக்கு வருவது வழக்கம்.ஒருமுறை மணி மாலை ஒன்றை துர்கா திருடிவிட்டதாக புகார் வருகிறது .ஆனால் துர்கா அதை அப்போதைக்கு மறுத்துவிடுகிறாள்..

எப்போதாவது சர்போஜயா கோபத்தில் திட்டும்போதெல்லாம் இந்திர்பாட்டி கூன் விழுந்த முதுகுடன் பக்கத்து வீடுகளில் சென்று தஞ்சம் புகுவாள். இதுதவிர துர்காவின் உலகம் முழுக்க தம்பி அபுவை சார்ந்தது. அது போலத்தான் அபுவுக்கும் அக்காவைத் தவிர வேறு உலகம் இல்லை. அவர்களது உலகத்தில் அந்த சிறுகிராமத்தின் வயல்வெளி ,குளம் அங்குவசிக்கும் உயிரினங்கள் மற்றும் எப்போதாவது மாலை நேரங்களில் மணி அடித்தபடி வரும் மிட்டாய்காரன் கிராமத்தின் இதர பணக்கார சிறுவர்கள் இவைகளால ஆனது. அவர்கள் இருவரும் தங்களது வயல்வெளிகளில் விளையாடும் போதெல்லாம் எப்போதாவது தொலைவில் ரயிலின் ஓசை கேட்கும் . ஒரு நாள் அக்கா தம்பி இருவரும் ரயிலின் ஓசையை கேட்டு அதனை பார்க்க வயல் மற்றும் தோப்புகளின் வழியே ஓடுகின்றனர். ஓரிடத்தில் அவர்களின் எதிரே சற்று தொலைவில் புகைவிட்டபடி ரயில் போய்க்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.
வறுமை காரணமாக ஹரிஹரபாபு வெளியூருக்கு சென்று பஞ்சம் பிழைக்க புறப்படுகிறார். திரும்ப வரும் போது கைநிறைய பணத்துடன் வருவதாக மனைவியுடன் கூறுகிறார். எப்போதுமே குடும்பகவலையால் வருத்தமுற்றிருக்கும் மனைவி சரபோஜயாவுக்கு கணவனின் வார்த்தைகள் சிறிதளவு மகிழ்ச்சி யூட்டுவதாக இருக்கிறது. ஆனால் கணவன் சென்ற பின் தான் குடும்பசூழல் மேலும் வறுமைக்கு ஆளாகிறது. ஓருபக்கம் தனிமை இன்னொருபக்கம் வறுமை இதனால் சரபோஜயாவின் வாழ்க்கை மிகுந்ததுயரத்தை பாரமாக சுமக்கிறது. ஒருநாள் விளையாட போகும் துர்காவும் அபுவும் திரும்பும் வழியில் தங்களது இந்திர்பாட்டி பிணமாக வழியில் இறந்துகிடப்பதை பார்க்கின்றனர்.
இதனிடையே பருவம் மாறுகிறது. மழைக்காலம் துவங்குகிறது. துர்கா மழையில் நீண்டநேரம் நனைகிறாள். விளைவு மறுநாள் அவள் படுத்த படுக்கையாகக்கிடக்கிறாள். வறுமையில் அவதிப்படும் சரபோஜாயா தனக்கு தெரிந்த வைத்தியங்களையெல்லாம் செய்து பார்க்கிறாள். இறுதியில் காலத்தின் சதியின் முன் தோற்றுபோகிறாள். இச்சூழலில் பணம் சம்பாதிக்க வீட்டைவிட்டு வெளியூர் போன கணவன் ஹரிஹரரே மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறான். ஆவலுடன் வீட்டுக்குள் நுழைபவன் மனைவி சிலைபோல அமைதியாக இருப்பதை பார்க்கிறான் அடுத்த நொடிஅவனது காலில் விழுந்த மனைவி வீறிட்டழுவதை பார்த்தபின்தான் மகள் துர்கா தன்னை விட்டு போய்விட்டதை ஹரிஹர பாபு உணர்கிறான்.

இறுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரை விட்டு வெளியேற ஹரிஹரரே முடிவு செய்கிறார். பொருட்கள் மூட்டைகட்டப்படுகின்றன. அப்போது அபு வின் கைகளில் துர்கா தான் திருடவில்லை என மறுத்த மணிமாலை கிடைக்கிறது. அதனை தானும் துர்காவும் அடிக்கடி சுற்றி விளையாடிய குளத்தில் அபு எறிகிறான். அது மூழுகுவதையே பார்க்கிறான். திரைப்படம் இத்தோடு முடிகிறது.
( அடுத்த வாரம் ரே... இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல் )

.

கருத்துகள் இல்லை: